Just In
- 31 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 2 hrs ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
Don't Miss!
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சாதாரண இந்திய விவசாயியின் அரிய கண்டுபிடிப்பை உலக அளவில் பிரபலமாக்கிய மஹிந்திரா... வைரல் வீடியோ
சாதாரண இந்திய விவசாயி ஒருவரின் அரிய கண்டுபிடிப்பு, ஆனந்த் மஹிந்திராவின் ஒரு டிவிட் மூலம் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் டூவீலர், கார் மற்றும் டிராக்டர் உள்பட பல்வேறு வகையான வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் வாகனங்கள் உலகம் முழுக்க பிரபலமாக திகழ்ந்து கொண்டுள்ளன.
வாகன உற்பத்தி மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் மஹிந்திரா குழுமம் கொடி கட்டி பறந்து வருகிறது. இதற்கு மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஒரு காரணம் என்றால் மிகையல்ல. சாதிக்க துடிக்கும் பல கோடி இளைஞர்களுக்கு இவர் ஒரு ரோல் மாடல்.
சமூக வலை தளங்களில் ஆனந்த் மஹிந்திரா மிகவும் ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர். குறிப்பாக டிவிட்டரில் இவர் போடும் டிவிட்கள் லைக்ஸ் அள்ளும். பல கோடிகளுக்கு அதிபதி என்றாலும், சாதாரண மனிதர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் குணம் இவருக்கு உண்டு.
இந்த சூழலில் ஆனந்த் மஹிந்திரா தற்போது டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் விவசாயி ஒருவர், அறுவடைக்கு பின் தனது நிலத்தில் இருந்த தானியங்கள் உள்ளிட்டவற்றை டிராக்டர் மூலமாக இடம் மாற்றி கொண்டுள்ளார்.
வழக்கமாக இதுபோன்ற பணிகள் கைகளால் மட்டுமே மேற்கொள்ளப்படும். பெரும்பாலான இந்திய விவசாயிகளுக்கு, அதிநவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த இயந்திரங்கள் இன்னும் சென்று சேரவில்லை. இந்திய விவசாயிகளை பொறுத்தவரை டிராக்டர்தான் அதிநவீன இயந்திரம், வாகனம் எல்லாம்.
இந்திய விவசாயிகள் பலர் உழவு பணிகளுக்கு டிராக்டரை பயன்படுத்துகின்றனர். டிராக்டரை தவிர சொல்லி கொள்ளும்படியாக வேறு இயந்திரங்கள் எதையும் விவசாயிகள் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள வீடியோவில் நாம் காணும் விவசாயி, தனது டிராக்டரை மாடிஃபிகேஷன் செய்திருந்தார். இதன்படி அவர் தனது டிராக்டரின் முன்பகுதியில் செயற்கையான இயந்திர கை ஒன்றை பொருத்தியிருந்தார். அதனுடன் கட்டில் இணைக்கப்பட்டிருந்தது.
ஆம், கட்டில்தான். இதன்மூலமாக பொருட்களை மிக எளிதாக அந்த விவசாயி இடம்மாற்றி கொண்டிருந்தார். இது பார்ப்பதற்கு எக்ஸ்காவேட்டர் (Excavator) போலவே உள்ளது. ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டை நீங்கள் கீழே காணலாம்.
|
''தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்ற சொற்தொடர் இந்தியர்களால்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என நான் நினைக்கிறேன். நமது பண்ணை மற்றும் கட்டுமான துறைகள் எக்ஸ்காவேட்டருக்கு மாற்றாக இந்த புதிய தயாரிப்பை கருத்தில் கொள்ள வேண்டும்'' எனவும் ஆனந்த் மஹிந்திரா அந்த பதிவில் கூறியுள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த டிவிட்டர் பதிவால் பலரும் ஈர்க்கப்பட்டனர். இந்த கட்டுரை எழுதப்பட்டு கொண்டிருந்த நேரத்தில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரீ-டிவிட்களை ஆனந்த் மஹிந்திராவின் டிவிட் குவித்திருந்தது.
ஆனால் இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது? என்பது தெளிவாக தெரியவில்லை. இதே வீடியோவை சாதாரண நபர்கள் யாரேனும் பதிவிட்டிருந்தால் இவ்வளவு அதிகமான பேரை சென்றடைந்திருக்குமா? என்பதும் சந்தேகமே.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!