Just In
- 24 min ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 38 min ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- 1 hr ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 2 hrs ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Don't Miss!
- News அமேதி தொகுதியில் ராகுல் காந்தி "மைத்துனர்" ராபர்ட் வதேரா போட்டியா? காங்கிரஸ் போஸ்டர்களால் பரபரப்பு!
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- Movies வாயில் சோறு.. கணவர் பாட காதை பொத்திக் கொண்டு.. நிறைமாத கர்ப்பிணி அமலா பாலின் லேட்டஸ்ட் வீடியோ!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பொதுமக்களின் இதயங்களை மீண்டும் வென்றுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில மக்களின் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார். ஆந்திர இளைஞர்களால் 'ஜெகன் அண்ணா' என கொண்டாடப்பட்டு வரும் ஜெகன் மோகன் ரெட்டியின் திட்டங்கள் ஆந்திர மாநிலத்தையும் கடந்து, இந்தியா முழுக்க கவனம் ஈர்த்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை கட்டி தழுவி ஆறுதல் கூறுவது உள்ளிட்ட அவரது செயல்பாடுகள் எளிமையின் உச்சம்.
ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் சமீபத்தில் நடந்தது. இதில், ஆளும் தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி முக்கிய எதிர்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோக வெற்றியை பெற்றது. அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.
முதல்வர் அரியணையில் அமர்ந்தது முதல் ஜெகன் மோகன் ரெட்டி செயல்படுத்தி வரும் திட்டங்கள், நாடு முழுக்க அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்று வருகின்றன. சாமானியர்களுக்கான முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பார்க்கப்படுகிறார். இந்த சூழலில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக, கடந்த சனிக்கிழமை ஆந்திர மாநிலத்திற்கு வந்தார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் கவர்னர் ஈஎஸ்எல் நரசிம்மன் உள்ளிட்டோர் வரவேற்றனர். முன்னதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை வரவேற்பதற்காக, தாடேப்பள்ளியில் உள்ள தனது வீட்டில் இருந்து விஜயவாடாவில் உள்ள கண்ணாவரம் விமான நிலையத்திற்கு, ஜெகன் மோகன் ரெட்டி நேற்று முன் தினம் (ஜூலை 13) சென்று கொண்டிருந்தார்.
கண்ணாவரம் பகுதியில்தான் விஜயவாடா விமான நிலையம் அமைந்துள்ளது. பொதுவாக முதல் அமைச்சர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளை வகிப்பவர்கள் பயணிக்கும் வாகனத்திற்கு பின்னால், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களுக்காக மேலும் சில கான்வாய் வாகனங்கள் அணிவகுத்து வரும். இதன்படிதான் ஜெகன் மோகன் ரெட்டியும் பயணித்து கொண்டிருந்தார்.
இந்த சூழலில் விஜயவாடாவில் உள்ள பென்ஸ் சர்க்கிள் பகுதியை அடைந்தபோது, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கான்வாய் வாகனங்களுக்கு பின்னால், ஆம்புலன்ஸ் ஒன்று அவசர அவசரமாக வந்து கொண்டிருந்தது. பொதுவாக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர கால வாகனங்கள் வந்தால் மனித நேயத்துடன் ஒதுங்கி அவற்றுக்கு வழி விட வேண்டும்.
எனினும் இந்தியாவில் பலர் இதனை கடைபிடிப்பது கிடையாது. இதனால் சில சமயங்களில் அவசர கால வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன. இதுபோன்ற அவலங்களை இந்தியாவில் நம்மால் அடிக்கடி பார்க்க முடிகிறது. ஆனால் அவசர கால வாகனங்கள் வந்தால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அனைவருக்கும் முன் உதாரணமாக மாறியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.
தனது கான்வாய் வாகனங்களுக்கு பின்னால் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருப்பதை ஜெகன் மோகன் ரெட்டி கவனித்து விட்டார். உடனே தனது கான்வாய் வாகனங்கள் அனைத்தையும் ஓரமாக நிறுத்தும்படி உடன் வந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் மூலம் ஆம்புலன்ஸ் அப்பகுதியை எளிதாக கடப்பதை ஜெகன் மோகன் ரெட்டி உறுதி செய்தார்.
இதற்காக ஜெகன்மோகன் ரெட்டி அங்கு 5 நிமிடங்கள் காத்திருந்தார். ஆம்புலன்ஸ் சென்ற பிறகுதான் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு முன் உதாரணம் என்றால் மிகையல்ல. இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து, ஜெகன் மோகன் ரெட்டியை மக்கள் மனதார பாராட்டி கொண்டிருக்கின்றனர்.
உயிருக்கு போராடுபவர்களை சுமந்து வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடுவது நம் அனைவரின் கடமை. ஆனால் இதனை செய்ய சிலருக்கு மனம் வருவதில்லை. சிலருக்கு மனம் இருந்தாலும், பதற்றம் காரணமாக தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். சரி, ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு எப்படிதான் வழி விடுவது?
இந்திய நகரங்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தவை. எனவே இதர வாகன ஓட்டிகள் சரியாக வழி ஏற்படுத்தி கொடுக்காவிட்டால், ஆம்புலன்ஸ் அந்த இடத்தை எளிதாக கடக்க முடியாது. ஆம்புலன்ஸின் சைரன் ஒலி உங்களுக்கு கேட்டால், மற்ற வாகனங்கள் உடனே சாலையின் இடது புறத்திற்கு (Left Side) நகர்ந்து விட வேண்டும்.
இதன் மூலமாக சாலையில் வலது புறத்தில் (Right Side) நெரிசல் குறைந்து வழி கிடைக்கும். இதனை பயன்படுத்தி கொண்டு, ஆம்புலன்ஸ் அந்த இடத்தை எளிதாக கடந்து விட முடியும். ஆம்புலன்ஸ் வந்தால், அனைவரும் உடனடியாக இடது புறத்திற்கு செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். அரசாங்கமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதனை செய்ய முன் வரலாம்.
அதே சமயம் இடது புறத்திற்கு ஒதுங்குவதுடன் மட்டுமல்லாமல், ஆம்புலன்ஸ் கடக்கும் வரை அங்கு போக்குவரத்தும் நிறுத்தப்பட வேண்டும். அதாவது ஆம்புலன்ஸ் அப்பகுதியை பாதுகாப்பாக கடக்கும் வரை மற்ற வாகனங்கள் அனைத்தும் இடது புறத்தில் ஒதுங்கி நிற்க வேண்டும். ஆம்புலன்ஸ் உடனேயே பயணித்து கொண்டிருக்க கூடாது.
அதேபோல் ஆம்புலன்ஸ் வரும்போது இடது புறத்திற்கு ஒதுங்குவதில் நிதானமாக இருங்கள். பதற்றம் வேண்டாம். ஒரு வேளை நீங்கள் பதறினால், இன்னும் சிலர் ஆம்புலன்ஸில் செல்ல வேண்டியதாகி விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள். அத்துடன் சாலையோரங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்யாதீர்கள். சாலையோரங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.
ஏனெனில் ஏராளமான வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவதால், சாலை குறுகலாகி விடுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இத்தகைய சமயங்களில் மற்ற வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்கினாலும் கூட ஆம்புலன்ஸ் கடப்பது கடினம்தான். சாலையின் இடது புறம் முழுவதையும் பார்க்கிங் வாகனங்கள் ஆக்கிரமித்திருந்தால், மற்ற வாகன ஓட்டிகளால் ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க முடியாமல் போய் விடும்.
ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்னலுக்காக நிற்க வேண்டிய அவசியமில்லை. சிக்னலை மீறி செல்லலாம். அதேபோல் ராங் சைடில் பயணிப்பதற்கு கூட ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அனுமதி உள்ளது. அதேபோல் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுப்பதற்காக நீங்களும் சிக்னலை மீறி செல்லலாம். அது தவறு கிடையாது.
உங்கள் பின்னால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் ஏதேனும் இருந்தால், உங்களால் சிக்னலை மீறி செல்ல முடியும். இது சட்டப்பூர்வமானதுதான். ஆனால் இப்படி ஒரு விதி இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. அதனால் சிக்னலை கடக்கலாமா? வேண்டாமா? என அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். இனி இந்த குழப்பம் உங்களுக்கு வேண்டாம்.
அதேபோல் வாகனங்களில் பயணம் செய்யும் போது கூடுமான வரை இயர் போன் பயன்படுத்தாதீர்கள். அத்துடன் அதிக சப்தத்துடன் பாடல்களை கேட்பதையும் தவிர்த்து விடுங்கள். இவற்றை நீங்கள் செய்தால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்களின் சைரன் ஒலி உங்களுக்கு கேட்காமல் போய் விடும். ஆம்புலன்ஸ் சுமந்து வருவது உங்கள் மனதுக்கு நெருக்கமானவராக கூட இருக்கலாம்.
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!