Just In
- 2 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 2 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 3 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 4 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஜெய் ஜெகன்... ஆந்திர மக்களின் வங்கி கணக்கில் குவியும் பெரும் தொகை! எவ்ளோனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க
பிற மாநில மக்களுக்கு பொறாமை ஏற்படும் வகையில், ஆந்திர மக்களின் வங்கி கணக்குகளில், பெரும் தொகையை அம்மாநில அரசு செலுத்தி வருகிறது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா வைரஸின் கோர பிடியில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. மனித குலத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது.
முன்னதாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள் பலர் வேலை இழந்தனர். ஏனெனில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் இந்தியாவில் பொது போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.
இதனால் பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என எந்தவிதமான பொது போக்குவரத்து வாகனங்களும் இயங்கவில்லை. இதில், கடுமையான பாதிப்பை சந்தித்தது ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள்தான். ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள் பலர் தினசரி வருமானத்தை நம்பி உள்ளனர். ஆனால் திடீரென வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டதால், அவர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
தற்போது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்களுக்கு மட்டுமே இது மகிழ்ச்சியான செய்தி. ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அதிரடி நடவடிக்கையால், அம்மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள் உள்ளம் நெகிழ்ந்து போயுள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய முதல் அமைச்சராக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த 2019ம் ஆண்டு மே மாத கடைசியில் பதவியேற்று கொண்டார். அரியணை ஏறியதும் அதிரடியான பல திட்டங்களை ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்தார். இதில், பல திட்டங்கள் நாடு முழுவதும் கவனம் பெற்றன.
அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாயை அலவன்ஸாக வழங்குவதுதான் இந்த பிரம்மாண்டமான திட்டத்தின் நோக்கம்.
இன்ஸ்சூரன்ஸ் பிரீமியம், லைசென்ஸ் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்காக அவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். எனவே ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள் மத்தியில் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் பலர் தற்போது பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.
இதனால் அவர்களுக்கு உதவும் வகையில், 4 மாதங்களுக்கு முன்னதாகவே, தற்போது ஆந்திர பிரதேச மாநில அரசு ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா திட்டத்திற்கான நிதியை விடுவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 2.62 லட்சம் பயனாளிகளுக்கு, ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதனால் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.
ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா திட்டத்தின் கீழ், 2,62,493 பயனாளிகளுக்கு 262.49 கோடி ரூபாயை அரசு டிரான்ஸ்பர் செய்துள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பயனாளிகள் உடன் டிஜிட்டல் முறையில் நடந்த கூட்டத்தின்போது, ஜெகன் மோகன் ரெட்டி இதனை தெரிவித்தார்.
இந்த பணத்தை உண்மையான காரணங்களுக்கு, பயனுள்ள வகையில் பயன்படுத்தும்படி பயனாளிகளிடம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கேட்டு கொண்டுள்ளார். அதற்கு பதிலாக மது குடிப்பதற்கு இந்த பணத்தை செலவழிக்க கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அப்படி மது அருந்தினால் பயணிகள் மற்றும் டிரைவர் இருவருக்குமே ஆபத்து ஏற்படும் எனவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால், நீண்ட இடைவெளிக்கு பின் பொது போக்குவரத்து வாகனங்களை இயக்க அனுமதி கிடைத்துள்ளது. இதன்படி தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பஸ்கள் ஓட தொடங்கியுள்ளன. அத்துடன் ஆட்டோ, டாக்ஸிகளை இயக்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட பயணிகள்தான் பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டுப்பாடுகள் தவிர, மக்களும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சமே இதற்கு காரணம். எனவே சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதனால் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களுக்கு தற்போதும் பெரிய அளவில் வருமானம் இல்லை.
இப்படிப்பட்ட சூழலில், அரசிடம் இருந்து ஆந்திர ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்களுக்கு கிடைத்துள்ள 10,000 ரூபாய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொரோனா அச்சத்தால் வரும் காலங்களில், சொந்த வாகனங்களின் பயன்பாடே அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கார் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.
-
பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!