Just In
- 32 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 2 hrs ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
Don't Miss!
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இனி ஆந்திராவுக்கு செல்லனும்னா இது கட்டாயம்!! வந்தது புதிய உத்தரவு...
அவசரகால பாஸ் (e-pass) வைத்திருந்தால் தான் மாநிலம் விட்டு அடுத்த மாநிலத்திற்கு பயணிக்க முடியும் என்ற நிலைமை கொரோனா வைரஸ் நமது நாட்டில் பரவ ஆரம்பத்தில் நேரத்தில் இருந்தது.
ஆனால் இப்போது இவ்வாறான நடவடிக்கைகள் இந்தியாவின் சில மாநிலங்களில் இல்லை. நமது அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்திலும் இல்லாமல் தான் இருந்தது.
ஆனால் தற்போது மீண்டும் ஆந்திராவில் இந்த ஊரடங்கு காலத்தில் வாகனத்தில் பயணிப்பதற்கான பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக டிஜிபி டி கௌதம் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் சமீபத்தில் தான் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டது.
இதனால் கடந்த ஞாயிற்று கிழமையே ஊரடங்கு உத்தரவுகளை மதித்து பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதை டிஜிபியும், கமிஷ்னர் பதினி ஸ்ரீனிவாசுலுவும் சில போலீஸ் அதிகாரிகளுடன் முக்கிய நகர்புற பகுதிகளில் பார்வையிட்டனர்.
அப்போது பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மதித்து நடப்பதாகவும், நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை எந்தவொரு பிரச்சனையுமின்றி அமல்படுத்துவதில் தங்களது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர் எனவும் போலீஸ் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.
இ-பாஸ் குறித்து பேசிய அவர்கள், "ஊரடங்கு உத்தரவின்போது நண்பகல் 12 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 6 மணி வரையில் மாநிலத்திற்குள் நுழைவதற்கும், பயணிப்பதற்குமான விதிமுறைகள் குறித்து ட்விட்டர் மற்றும் எங்களது பிற உதவி எண்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து ஏராளமான கோரிக்கைகளை நாங்கள் பெற்று வருகிறோம்.
இதனை தொடர்ந்து தான் இ-பாஸ் முறையை கொண்டுவர நாங்கள் முடிவு செய்தோம். மேற்கூறப்பட்ட அவசர காலத்தில் பயணிப்பதற்கான பாஸ் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை நாங்கள் உருவாக்கி வருகின்றோம்.
இ-பாஸ்களை சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியிடம் இருந்து யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ளலாம். இருந்தாலும், அவசியமான அவசர பயணங்களை மட்டுமே மேற்கொள்ளுங்கள் என பொதுமக்களை நான் கேட்டு கொள்கிறேன்" என கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் குறித்து பரவும் வதந்திகளுக்கு பதிலளித்த டிஜிபி, இவ்வாறான வதந்திகளை தற்போதைய சூழலில் சமூக வலைத்தள பக்கங்களில் பரப்புவோர் எவராயினும் அவர்கள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் தான் கோவிட்-19 குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக ஆந்திர எதிர்கட்சி தலைவர் என்.சந்திரபாபு நாய்டு மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. ஊரடங்கின் போது எதாவது விதிமீறல்கள் நடப்பின் உடனே போலீஸாரை 100 அல்லது 112 என்ற அழைப்புபேசி எண்களை பயன்படுத்தி அழைக்குமாறு மக்களை டிஜிடி கேட்டு கொண்டுள்ளார்.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!