Just In
- 55 min ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 3 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
ராணுவ வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி... மத்திய அரசின் அதிரடி உத்தரவிற்கு காரணம் இதுதான்...
ராணுவ வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகில் காற்று அதிகம் மாசடைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் பல்வேறு முக்கியமான நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து வருகின்றன. நாட்டின் தலைநகர் டெல்லி இதற்கு மிகச்சிறந்த உதாரணம். எனவே காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்தியாவில் காற்று அதிகம் மாசடைந்து கொண்டிருப்பதற்கு பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை மிக முக்கியமான காரணம். எனினும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் மூலம் வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் காற்று மாசுபாடு பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என நம்பப்படுகிறது.
மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. அதற்குள் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் வாகனங்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தி விட வேண்டும். இதற்கு இன்னும் சுமார் 8 மாதங்கள் மட்டுமே உள்ளன.
எனவே இரு சக்கர மற்றும் நான்கு சக்கர என அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் மாடல்களை வேக வேகமாக பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து வருகின்றன. இந்தியாவில் பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான வாகனங்கள் தற்போதே கிடைக்க தொடங்கி விட்டன. வரும் மாதங்களில் இன்னும் பல்வேறு வாகனங்கள் பிஎஸ்-6 விதிகளுக்கு இணையான தரத்துடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.
இந்த சூழலில், இந்தியாவின் ஆர்ம்டு (ராணுவம், கப்பற்படை, விமானப்படை உள்ளிட்டவை) மற்றும் பாராமிலிட்டரி படைகளின் கவச வாகனங்கள் மற்றும் சிறப்பு வாகனங்களுக்கு பிஎஸ்-6 விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த விதிமுறைகளுக்கு ஏற்ப பொருத்தமான இன்ஜினை உருவாக்க கணிசமான கால அவகாசம் தேவை என்பதால், ஆர்ம்டு மற்றும் பாராமிலிட்டரி படைகளின் கவச மற்றும் சிறப்பு வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கே பாதுகாப்பு தொடர்பான சவால்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
முன்னதாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அரசாங்க பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்களுக்கு பிஎஸ்-4 விதிமுறைகளில் இருந்தும் கடந்த 2017ம் ஆண்டு மே 19ம் தேதி அரசு விலக்கு அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் காரணமாக வாகனங்களின் விலை சற்று உயரவுள்ளது. குறிப்பாக டீசல் கார்களின் விலை கணிசமாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நீங்கள் புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டிருந்தால், பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே வாங்கி விடுங்கள். இதன் மூலம் விலை உயர்வை தவிர்க்கலாம்.
இந்திய ஆட்டோமொபைல் துறை தற்போது தள்ளாடி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். மாருதி சுஸுகி உள்பட அனைத்து முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனையும் கடந்த சில மாதங்களாகவே மிக கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆனால் எதிர்வரும் பண்டிகை காலம் மற்றும் பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு கொஞ்சம் முன்பாக வாகன விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பிஎஸ்-6 விதிமுறையால் ஏற்படும் விலை உயர்வை தவிர்ப்பதற்காக மக்கள் வாகனங்களை அதிகளவில் வாங்குவார்கள் என வாகன உற்பத்தி நிறுவனங்கள் நம்புகின்றன.
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்