Just In
- 35 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 5 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தாறுமாறு... உதவி ஆர்டிஓ-வின் காரை சுற்றி வளைத்து தரமான சம்பவம் செய்த பொதுமக்கள்... எதற்காக தெரியுமா?
உதவி ஆர்டிஓ-வின் காரை சுற்றி வளைத்து தரமான சம்பவத்தை பொதுமக்கள் செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு பல லட்சக்கணக்கான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வருவதே சாலை விபத்துக்கள் நடைபெற மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் இதற்கு ஒரு உதாரணம். இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.
புதிய அபராத தொகைகளை போலீசார் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். அதே சமயம் இதனை முறையாக அமல்படுத்த வேண்டிய காவல் துறையினரும், போக்குவரத்து துறை அதிகாரிகளுமே கூட சில சமயங்களில் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சூழலில் சீட் பெல்ட் அணியாத உதவி ஆர்டிஓ ஒருவரின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அமிதாப் ராய் எனும் உதவி ஆர்டிஓ தனது அதிகாரப்பூர்வ மஹிந்திரா பொலிரோ காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்துள்ளார். அப்போது பொதுமக்களை அவரது காரை சுற்றி வளைத்துள்ளனர்.
அத்துடன் ஏன் சீட் பெல்ட் அணியவில்லை? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். காரில் பயணம் செய்யும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் உதவி ஆர்டிஓ ஒருவரே சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தனர். எனவேதான் அவரது காரை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.
இதன் காரணமாக அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் உதவி ஆர்டிஓவிற்கு அபராதம் விதித்து ரசீது வழங்கினார். ஆனால் எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது? என்பது தெரியவில்லை. புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, ஒரு குற்றத்திற்காக சாதாரண வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை காட்டிலும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு 2 மடங்கு அதிக அபராதம் விதிக்க முடியும்.
அதாவது ஒரு போக்குவரத்து விதிமுறை மீறலுக்கு 500 ரூபாய் அபராதம் என வைத்து கொள்வோம். சாதாரண வாகன ஓட்டிகள் அந்த விதிமுறையை மீறினால் 500 ரூபாய் மட்டும் அபராதம் செலுத்தினால் போதுமானது. ஆனால் அரசு அதிகாரிகளோ அல்லது காவல் துறையினரோ அந்த விதிமுறையை மீறினால் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே புதிய மோட்டார் வாகன சட்டத்தில் இவ்வாறான ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கூட அதிகாரிகள் சிலர் தொடர்ந்து விதிமுறையை மீறி கொண்டேதான் உள்ளனர். சீட் பெல்ட் அணியாத உதவி ஆர்டிஓ-வின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்ட வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த சம்பவம் காரணமாக பிலிபிட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அபராத தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக பெரும்பாலான வாகன ஓட்டிகள் தற்போது போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க தொடங்கி விட்டனர். தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் இதனை உறுதி செய்கின்றன.
தலைநகர் டெல்லியில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் போக்குவரத்து விதிமீறல்களின் எண்ணிக்கை 66 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் உடனடியாக மாற வேண்டிய தருணம் இது. இல்லாவிட்டால் இது வாகன ஓட்டிகள் மத்தியில் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும்.