Just In
- 44 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 3 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 6 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
Don't Miss!
- Sports ஐபிஎல்- முத்துப்பாண்டி கோட்டைக்குள் புகுந்து தட்டி தூக்கிய கில்லி கோலி.. SRH-ஐ வீழ்த்திய RCB
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வாகனங்களால் காற்று மாசடைவதை தவிர்க்க அருண் ஜெட்லியின் செம ஐடியா...
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்று மாசடைவதைத் தவிர்க்க, 2030 ஆம் ஆண்டுக்குள் 30 சதவிகித எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் வாகனங்களின் விற்பனை நாளுக்கு நாள் சூடிபிடித்து வரும் நிலைியல், சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
அவ்வாறு பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை கார்பன்-டை-ஆக்ஸைடு என்னும் நச்சை வெளியிடுகிறது. இந்த நச்சால் காற்று மாசடைவதுடன் பல கொடிய நோய்களை மக்களிடையே பரப்பி வருகிறது.
மேலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு பின்விளைவுகளையும் உருவாக்கிறது. இதனால் பசுமை வீடு விளைவு ஏற்பட்டு ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து பனிப் பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் உயர்கிறது.
இதுபோன்ற பின்விளைவுகளைத் தவிர்க்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மக்களிடம் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையையும் ஊக்கப்படுத்தி வருகிறது.
இதனால், எரிபொருளுக்காக பிற நாடுகளை எதிர்பார்க்கும் சூழல் தவிர்க்கப்படும். மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டு பொருளாதாரம் தக்க வைக்கப்படும்.
இதுகுறித்து நேற்று (புதன்கிழமை) பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, அரசின் எலக்ட்ரிக் மொபிலிட்டி புரோக்ராம் மூலம் வேலை வாய்ப்பு, உற்பத்தி ஆகியவை அதிகமாகியிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "எலக்ட்ரிக் மொபிலிட்டி ஒரு நிலைத்தன்மைக் கொண்ட, அனைவரையும் கவரக்கூடிய, அதிகளவில் பொருளாதாரம் ஈட்டக்கூடியத் திட்டமாகும். இதன் மூலம் மாசுகட்டுப்பாடு குறைக்கப்பட்டு, சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறது.
நிதித்துறையின், பொருளாதார விவகாரங்கள் (The Department of Economic Effairs) அமைப்பு சார்பாக அரசு அதிகாரிகளின் பயன்பாட்டுக்கு 15 எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஆண்டுக்கு 36 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் சேமிக்கப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், 440 டன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியிடுவதும் தவிர்க்கப்படும். இதன் அடுத்தகட்டமாக நாட்டில் 30 சதவிகிதம் வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்படும்" என அவர் தெரிவித்தார்.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!