Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சூப்பர்... கொரோனா வைரஸிடம் இருந்து உலகை காக்க களமிறங்கிய கார் நிறுவனங்கள்... எப்படினு தெரியுமா?
கொரோனா வைரஸிடம் இருந்து உலகை காப்பாற்றுவதற்கு, கார் நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
கோவிட்-19 வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது உலக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸ் தாக்கி, உலகம் முழுவதும் தற்போது வரை 64,973 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் கோவிட்-19 வைரஸால், உலகம் முழுவதும் தற்போது வரை 12,05,801 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வரும் நாட்களில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதே சமயம் 2,47,954 பேர் கோவிட்-19 வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
இது ஒன்றுதான் உலகிற்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. ஆனால் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருவதால், உலகின் பெரும்பாலான நாடுகள் தற்போது முடங்கியுள்ளன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை.
கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய, உலகின் முன்னணி தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் முன்வந்துள்ளனர். அதேபோல் கோவிட்-19 வைரசுக்கு எதிரான போரில், உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் களத்தில் இறங்கியுள்ளன.
கோவிட்-19 வைரஸ் எதிரொலியால், தற்போது வாகன விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. மேலும் தொழிற்சாலைகளும் மூடப்பட்டு, வாகன உற்பத்தி முடங்கியுள்ளது. ஆனால் வாகன உற்பத்திக்கு பதிலாக, மருத்துவ உபகரணங்களை தயாரித்து வழங்குவதற்கு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
குறிப்பாக வென்டிலேட்டர்களை அதிகளவில் தயாரிப்பதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. நோயாளிகளின் சுவாச மண்டலத்தில், கோவிட்-19 வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துவதால், தற்போது வென்டிலேட்டர்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், வென்டிலேட்டர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.
உலக வல்லரசான அமெரிக்காவிலேயே வென்டிலேட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே டெஸ்லா, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு ஆகிய ஆட்டோமொபைல் உலகின் ஜாம்பவான்கள் உயிர் காக்கும் வென்டிலேட்டர் கருவிகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கியுள்ளன. அத்துடன் தேவைப்படும் மற்ற மருத்துவ உபகரணங்களை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் பணியில் களமிறங்கியுள்ளன. உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மிகவும் முக்கியமான வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தயாரித்து அரசுகளுக்கு உதவி வருவதுடன், கொரோனா வைரசுக்கு எதிரான போருக்கு, நிதியுதவிகளையும் வாரி வழங்கி வருகின்றன.
இதன்படி லக்ஸரி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஆடி, கோவிட்-19 வைரசுக்கு எதிரான போருக்கு, 5 மில்லியன் யூரோவை நன்கொடையாக அள்ளி கொடுத்துள்ளது. கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்கு, உலக அளவில் அரசாங்கங்கள் மற்றும் சுகாதார துறையினருக்கு உதவும் வகையில், 5 மில்லியன் யூரோவை நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஆடி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆடி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. இந்தியாவை பொறுத்தவரை டாடா குழுமத்தின் சார்பில், 1,500 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர முன்னணி தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்பட மக்கள் பலரும் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!