Just In
- 4 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 4 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 5 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 5 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எலக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தினால் கூடுதல் வரி!! இந்தியாவில் இல்லை... எந்த நாட்டில் தெரியுமா?
எரிபொருள் வாகனங்களில் இருந்து மெல்ல மெல்ல வாடிக்கையாளர்கள் பேட்டரி வாகனங்கள் எனப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர்.
இந்தியாவில் இந்த மாற்றம் மிகவும் குறைவான வேகத்தில் தான் நடைபெற்று வருகிறது என்றாலும், வெளிநாடுகளில் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது வேகமாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக நமது அண்டை நாடான சீனா அடுத்த 10- 15 வருடங்களில் முழுக்க முழுக்க மின்சார போக்குவரத்தை கொண்ட நாடாக மாறவுள்ளது. நடைபெற்றுவரும் ஷாங்காய் மோட்டார் கண்காட்சி இதற்கு சான்றாகும்.
ஆனால் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தில் மின்சார வாகன பயன்பாட்டை குறைக்கும் வகையில் எலக்ட்ரிக் வாகனங்களின் மீது கூடுதல் வரியை விதிக்க விக்டோரியா மாகாண அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இதன்படி எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தி வருவோர், காரின் பதிப்பை புதுப்பிக்கும் போது அந்த வாகனத்தில் பயணம் செய்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 2.5 செண்ட்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.
2.5 செண்ட் என்பது இந்திய ரூபாயில் மதிப்பில் வெறும் 1.78 ரூபாய் தான் என்றாலும், மொத்தமாக கணக்கிடும்போது அதிகமாகவே இருக்கும். அதாவது ஒருவர் தனது எலக்ட்ரிக் காரில் 10,000 ஆயிரம் கிமீ பயணித்து இருந்தால் அவர் தனது காரின் புதுப்பித்தலின் போது 18 ஆயிரம் ரூபாய் வரையில் செலுத்த வேண்டியிருக்கும்.
ஆஸ்திரேலியாவில் சராசரியாக ஒவ்வொரு காரும் வருடத்திற்கு 13,000ல் இருந்து 14,000 கிமீ வரையில் இயக்கப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. எலக்ட்ரிக் வாகனம் இயங்கியுள்ள தூரத்தை உரிமையாளர் தான் கவனமாக பராமரிக்க வேண்டுமாம்.
இல்லையென்றால் அதற்கும் சேர்த்து அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் விக்டோரியா மாகாண அரசு வழக்கமான எரிபொருள் வாகனங்களுக்கு இத்தகைய வரியை விதிக்க போவதில்லை. இதனால் அத்தகைய கார்களின் உரிமையாளர்கள் வாகன இயக்கத்தின் தூரத்தை கணக்கிட வேண்டிய கட்டாயம் ஏற்படாது.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்க அரசாங்கம் பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அத்தகைய சலுகைகள் எதுவும் விக்டோரியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதில்லை.
அவ்வாறு எதாவது சலுகைகள் வழங்கப்பட்டு வந்தாலாவது இந்த கூடுதல் வரியை சமநிலைப்படுத்தும், ஆனால் அவ்வாறு தான் எதுவும் இல்லையே. இந்த வரி திட்டத்தை ஹூண்டாய், ஃபோக்ஸ்வேகன் என விக்டோரியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துவரும் நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
மேலும், மெல்போர்னை சேர்ந்த செய்திதாள் ஒன்றில், ‘மோசமான மின்சார வாகன கொள்கை' என்ற தலைப்பில் விக்டோரியா அரசாங்கத்தின் இந்த கூடுதல் வரி திட்டத்தை பற்றி கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. இதனாலேயே இந்த விஷயம் மொத்த ஆஸ்திரேலியாவிலும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!