Just In
- 5 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 5 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 5 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 10 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாணியைக் கையாண்ட ஆட்டோ டிரைவர்... குவியும் பாராட்டு...
சூப்பர் ஸ்டார் ரஜினி தனது பாடலில் கூறியதைப்போல, கர்நாடகாவில் உள்ள ஆட்டோ டிரைவர் தனது நிஜ வாழ்க்கையில் செய்துள்ளார். இதற்காக தற்போது அவர் பாராட்டு மழையில் மூழ்கியுள்ளார்.
ஒரு பெண் தன் வாழ்நாளின் பிறவி பலனாக கருதுவது கருவுற்றல். இதற்காக பல இன்னல்களைச் சந்தித்து தான் அவள் அந்த பாக்கியத்தைப் பெறுகிறாள். அதேப்போல பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணின் மறு ஜென்மம் என்றே கருதப்படுகிறது.
ஏனென்றால், பிரசவத்தின்போது அவள் இறப்பின் நுழைவாயில் வரைச் சென்று மறுபிறவியைப் பெறுகிறாள். உண்மையைக் கூற வேண்டுமானால், பிரசவ வலியை எந்தவொரு ஆணாலும் தாங்கவே முடியாது. இதுமறுக்க முடியாத உண்மை. ஏனென்றால், பிரசவ வலியானது, உடலில் உள்ள அனைத்து எலும்புகளையும் உடைப்பதற்கு ஈடான வலியை ஏற்படுத்தும்.
ஆனால், அதைப்பொருத்து தனது இல்லற வாழ்க்கையை இனிதே நடத்து வருகிறாள். இதுபோன்ற உண்ணத படைப்பான பெண், நம் சமூகத்தில் பல இன்னல்களையும், துயரங்களையும் சந்தித்து வருகிறாள். மேலும், சமீபலகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில், சென்னை பெருங்குடியில் உள்ள குப்பை சேகரிக்கும் பகுதியில், ஒரு பெண்ணின் கை, கால்கள் துண்டிக்கப்பட்டு வீசப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை அந்த பெண்ணின் மற்ற உடல் பாகங்கள் கண்டுபிடிக்கவில்லை.
இதைப்போலவே சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த சிறுமியை, அங்கு பணி புரியும் வேலைக்காரர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதைப்போன்று பெண்களுக்கு எதிரான சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மேலும், இதுபோன்ற ஆண்கள் உள்ள இந்த சமுதாயத்தில் பெண்களை தங்களது கண்களாகப் பேற்றும் சில நபர்களும் உள்ளனர். இதனை நிரூபிக்கும் விதமாக, பிரசவத்துக்கு இலவசாக ஆட்டோவை இயக்கி வருகிறார் கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜீனா.
பிரசவத்துக்கு இலவசம், முதியவர்களுக்கு இலவசம் என்ற விஷயங்களை திரைப்படங்கள் மற்றும் நாட்டின் ஏதே ஒரு மூலையில் கேட்டிருப்போம். மேலும், கண்டும் இருப்போம். ஆனால், நமது அண்டை மாநிலமான, கர்நாடகத்தில் உள்ள கல்புரகி நகரத்தில் வசித்து வரும் ஆட்டோ டிரைவர் தன் நிஜ வாழ்க்கையில் செய்து வருகிறார். இதற்காக அவர் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
மல்லிகார்ஜீனா, தனக்குச் சொந்தமான ஐந்து ஆட்டோக்களில், பிரசவத்துக்கு இலவசம் என எழுதியுள்ளார். மேலும், அதில் அவருடைய கைப்பேசி எண்ணை இணைத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவசர உதவி தேவை என்றால் 24*7 மணி நேரமும் தன்னை அழைக்கலாம் என வாசகத்தையும் அவர் எழுதியுள்ளார்.
இந்த உண்ணதமான சேவையை அவர் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக செய்து வருதாகக் கூறப்படுகிறது. இதுவரை அவர் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு இந்த உதவி செய்துள்ளார்.
இதுகுறித்து ஆட்டோ டிரைவர் மல்லிகார்ஜுன் கூறுகையில், "என்னுடைய தங்கை கர்ப்பமுற்று இருந்தபோது, அவளை பிரசவத்துக்காக மருத்துவமனை அழைத்துச் செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டது. அப்போது எங்களுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. ஆம்புலன்ஸும் குறிப்பிட்ட நேரத்துக்கு வரவில்லை.
இதனால் அவள் மிகுந்த துன்பத்தை அனுபவித்தாள். அப்போது அவள் வலியால் துடித்த கதறிய நிகழ்வு இன்றும் என் கண்கள் முன் நடப்பது போலவே உள்ளது. அப்போது தான் என் தங்கை அனுபவித்த இந்த துன்பத்தை வேறு யாரும் அனுபவிக்க கூடாது என நினைத்து இந்த சேவையை செய்ய தொடங்கினேன்" என்றார்.
ஆட்டோ டிரைவர் மல்லிகார்ஜீனாவின் இந்த மகத்தான சேவையைப் பார்த்து அப்பகுதியில் உள்ள அவரை வாழ்த்தி வருகின்றனர். உலகில் மனிதநேயம் அழியவில்லை என்பதுக்கு சான்றாக இவர் இருப்பதாக சிலர் தெரிவித்தனர்.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?