Just In
- 37 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஓலா, உபரால் வாகன விற்பனை சரிகிறதாம்... தேச நலனுக்காக பிரபல இயக்குனர் செய்த அதிரடி... செம கலாய்
ஓலா, உபரால் வாகன விற்பனை சரிகிறது என தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்யும் வகையில் பிரபல இயக்குனர் செய்த காரியம் கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக கடுமையான சரிவை தற்போது சந்தித்துள்ளது. கார், டூவீலர் என அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் அனைத்து முன்னணி நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஆட்டோமொபைல் துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். வாகனங்கள் மீதான அதிகப்படியான ஜிஎஸ்டி, பொருளாதார மந்த நிலை, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட தாக்கம் மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் என ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
எனவே வாகனங்கள் விற்பனை மீண்டும் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என ஆட்டோமொபைல் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இதன் பேரில் வாகனங்கள் விற்பனையை அதிகரிக்க தேவையான ஒரு சில முக்கியமான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் வெளியிட்டார்.
ஆனால் இது போதுமானதாக இல்லை என்பதே ஆட்டோமொபைல் துறையினரின் கருத்தாக உள்ளது. ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என ஆட்டோமொபைல் துறையினர் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். வாகனங்கள் மீதான இந்த ஜிஎஸ்டி வரி தற்போது வரை குறைக்கப்படவில்லை.
எனினும் ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கான ஒரு சில காரணங்களை அவர் தெரிவித்தார்.
அப்போது வாகனங்களின் விற்பனையில் ஓலா, உபர் நிறுவனங்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்து தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. புதிய காருக்கு மாத தவணை செலுத்துவதை பலர் விரும்புவதில்லை. அதற்கு பதிலாக தேவைப்படும் நேரங்களில், ஓலா, உபர் கால் டாக்ஸிகளை பயன்படுத்தி கொள்கின்றனர்.
இதேபோன்று ஏராளமானோர் நினைப்பதால், வாகன விற்பனை சரிவடையலாம் என்ற ரீதியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். இதில் கொஞ்சம் உண்மை இருக்கவே செய்கிறது. ஆனால் வாகனங்களின் விற்பனை சரிவடைவதற்கு இதுபோல் இன்னும் பல்வேறு காரணங்கள் உள்ளன. எனவே நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த கருத்தை கேலி செய்து மீம்ஸ்களும் உலா வருகின்றன. அதே சமயம் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு மறுபக்கம் ஆதரவும் இருந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. இந்த சூழலில், பாலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான அனுபவ் சின்ஹா செய்துள்ள ட்விட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அனுபவ் சின்ஹா (Anubhav Sinha) பாலிவுட் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவருக்கு இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பல்வேறு முகங்கள் உள்ளன. 'ரா ஒன்' மற்றும் 'ஆர்ட்டிகிள் 15' உள்ளிட்ட படங்களின் இயக்குனர் இவர்தான். அனுபவ் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்றை செய்துள்ளார்.
இதில், 'தற்போதுதான் உபர் ஆப்பை டெலீட் செய்தேன். தேசம்தான் முதலில்' என கூறியிருந்தார். அதாவது 'இனிமேல் உபர் கால் டாக்ஸியை பயன்படுத்த மாட்டேன். வாகனங்களின் விற்பனை அதிகரிக்க உதவி செய்வேன்' என நிர்மலா சீதாராமனின் கருத்தை மறைமுகமாக கிண்டல் அடிக்கும் வகையில் அனுபவ் சின்ஹா இந்த ட்விட்டை செய்துள்ளார் என தெரிகிறது.
எனவே இயக்குனர் அனுபவ் சின்ஹாவின் இந்த கருத்து நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது. இதற்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?