Just In
- 3 min ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 48 min ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 1 hr ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- News மேடையிலேயே நிலைக்குலைந்த நிதின் கட்கரி.. மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. ஷாக் வீடியோ
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான்!! ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா!
சாலைகளில் விதிகளை மீறி போன் உபயோகித்து கொண்டே வாகனம் ஓட்டுபவர்களையும், சீட்பெல்ட் அணியாமல் செல்பவர்களையும் அடையாளம் காண உலகிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் கேமிராக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாண அதிகாரிகள் ஏற்கனவே ஸ்மார்ட் கேமிராக்களை தெருக்களில் பொருத்த ஆரம்பித்துவிட்டனர். இவை சீட்பெல்ட் அணியாமலும், செல்போன் பேசிக்கொண்டும் செல்லும் வாகன ஓட்டிகளை அடையாளம் காணுவதற்காக என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
முதல் மூன்று மாதங்களுக்கு எந்தவொரு மோட்டார்சைக்கிள் ஓட்டியும் தண்டிக்கப்பட மாட்டார்களாம். எச்சரிக்கையுடன் அனுப்பி வைக்கப்படுவார்களாம். அதன் பின்னர், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசிக்கொண்டு இருந்தால், 1033 ஆஸ்திரேலியன் டாலர்களும் (சுமார் ரூ.56,000), நான்கு தகுதி புள்ளிகளும் அவர்களுக்கு தண்டனைகளாக விதிக்கப்படவுள்ளன.
இந்த அபராதமே ஆஸ்திரேலியாவில் விதிக்கப்படும் மிக பெரிய சாலை குற்றத்திற்காக விதிக்கப்படும் பண அபராதமாகும். சீட்பெல்ட் அணியாமல் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு 413 ஆஸ்திரேலியன் டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட உள்ளன.
ஸ்மார்ட் கேமிராக்கள் சாலையில் கம்பத்திற்கு மேற்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இவை தன்னை கடந்து செல்லும் வாகனங்களையும் அதன் உள்ளே இருக்கு ஓட்டுனரையும் விண்ட்ஸ்க்ரீன் வழியாக படம் பிடித்து கொள்ளும். செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதால், மொபைல் போனை கையில் வைத்திருக்கும் ஓட்டுனர்களை மட்டுமே சேமித்து கொள்ளுமாம்.
மற்றவைகள் தானாக அழிந்துவிடும். சேமிக்கப்படும் படங்கள் உடனடியாக போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. அங்கு போலீஸார் மேனுவலாக ஒவ்வொன்றையும் சரிப்பார்க்கவுள்ளனர். நம்மூரில் உள்ள வழக்கமான கேமிராக்களை போல் இந்த ஸ்மார்ட் கேமிராக்கள் இருக்காது.
தன்னை கேமிரா ஒன்று கண்காணிக்கிறது என்பதையே சில மணிநேரங்கள் கழித்தே வாகன ஓட்டிகளுக்கு தெரியவரும். இந்த ஸ்மார்ட் தொழிற்நுட்பம் இந்த ஜூலை மாதத்தில் இருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு குயின்ஸ்லாந்தில் சோதனை செய்யப்பட உள்ளன.
சீட்பெல்ட் அணியாமல் இருக்கும் வாகன ஓட்டியை அடையாளம் காண கேமிராக்களை பயன்படுத்தும் உலகின் முதல் பகுதி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து ஆகும். செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய 2020 மார்ச் மாதத்திலேயே ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுவிட்டன.
இந்த வசதியை கொண்டுவந்ததில் இரண்டாவது இடத்தில் தான் குயின்ஸ்லாந்து உள்ளது. அடுத்ததாக, ஸ்மார்ட் கேமிராக்களை பயன்படுத்தி சாலை குற்றங்களை 2023ஆம் ஆண்டில் இருந்து விக்டோரியா மாகாண அதிகாரிகளும் கண்டறியவுள்ளனர்.
Note: Images are representative purpose only.
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!