Just In
- 1 hr ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 1 hr ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 2 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 3 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான்!! ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா!
சாலைகளில் விதிகளை மீறி போன் உபயோகித்து கொண்டே வாகனம் ஓட்டுபவர்களையும், சீட்பெல்ட் அணியாமல் செல்பவர்களையும் அடையாளம் காண உலகிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் கேமிராக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாண அதிகாரிகள் ஏற்கனவே ஸ்மார்ட் கேமிராக்களை தெருக்களில் பொருத்த ஆரம்பித்துவிட்டனர். இவை சீட்பெல்ட் அணியாமலும், செல்போன் பேசிக்கொண்டும் செல்லும் வாகன ஓட்டிகளை அடையாளம் காணுவதற்காக என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
முதல் மூன்று மாதங்களுக்கு எந்தவொரு மோட்டார்சைக்கிள் ஓட்டியும் தண்டிக்கப்பட மாட்டார்களாம். எச்சரிக்கையுடன் அனுப்பி வைக்கப்படுவார்களாம். அதன் பின்னர், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசிக்கொண்டு இருந்தால், 1033 ஆஸ்திரேலியன் டாலர்களும் (சுமார் ரூ.56,000), நான்கு தகுதி புள்ளிகளும் அவர்களுக்கு தண்டனைகளாக விதிக்கப்படவுள்ளன.
இந்த அபராதமே ஆஸ்திரேலியாவில் விதிக்கப்படும் மிக பெரிய சாலை குற்றத்திற்காக விதிக்கப்படும் பண அபராதமாகும். சீட்பெல்ட் அணியாமல் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு 413 ஆஸ்திரேலியன் டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட உள்ளன.
ஸ்மார்ட் கேமிராக்கள் சாலையில் கம்பத்திற்கு மேற்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இவை தன்னை கடந்து செல்லும் வாகனங்களையும் அதன் உள்ளே இருக்கு ஓட்டுனரையும் விண்ட்ஸ்க்ரீன் வழியாக படம் பிடித்து கொள்ளும். செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதால், மொபைல் போனை கையில் வைத்திருக்கும் ஓட்டுனர்களை மட்டுமே சேமித்து கொள்ளுமாம்.
மற்றவைகள் தானாக அழிந்துவிடும். சேமிக்கப்படும் படங்கள் உடனடியாக போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. அங்கு போலீஸார் மேனுவலாக ஒவ்வொன்றையும் சரிப்பார்க்கவுள்ளனர். நம்மூரில் உள்ள வழக்கமான கேமிராக்களை போல் இந்த ஸ்மார்ட் கேமிராக்கள் இருக்காது.
தன்னை கேமிரா ஒன்று கண்காணிக்கிறது என்பதையே சில மணிநேரங்கள் கழித்தே வாகன ஓட்டிகளுக்கு தெரியவரும். இந்த ஸ்மார்ட் தொழிற்நுட்பம் இந்த ஜூலை மாதத்தில் இருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு குயின்ஸ்லாந்தில் சோதனை செய்யப்பட உள்ளன.
சீட்பெல்ட் அணியாமல் இருக்கும் வாகன ஓட்டியை அடையாளம் காண கேமிராக்களை பயன்படுத்தும் உலகின் முதல் பகுதி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து ஆகும். செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய 2020 மார்ச் மாதத்திலேயே ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுவிட்டன.
இந்த வசதியை கொண்டுவந்ததில் இரண்டாவது இடத்தில் தான் குயின்ஸ்லாந்து உள்ளது. அடுத்ததாக, ஸ்மார்ட் கேமிராக்களை பயன்படுத்தி சாலை குற்றங்களை 2023ஆம் ஆண்டில் இருந்து விக்டோரியா மாகாண அதிகாரிகளும் கண்டறியவுள்ளனர்.
Note: Images are representative purpose only.
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!