Just In
- 1 hr ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 6 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 7 hrs ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
- 7 hrs ago ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல... கிட்டத்தட்ட 20 ஆயிரம் கார்கள்!! மாருதி சுஸுகிக்கு எல்லா மாசமும் ஜாக்பாட் அடிக்குது!
Don't Miss!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Finance மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - வைப்புநிதி திட்டம்: எதில் அதிக வரி சலுகை பெற முடியும்?
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Movies Cook with Comali 5 promo: இது புது கூட்டணி.. கலக்கல் காம்பினேஷனில் குக் வித் கோமாளி 5.. விரைவில்!
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான்!! ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா!
சாலைகளில் விதிகளை மீறி போன் உபயோகித்து கொண்டே வாகனம் ஓட்டுபவர்களையும், சீட்பெல்ட் அணியாமல் செல்பவர்களையும் அடையாளம் காண உலகிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் கேமிராக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாண அதிகாரிகள் ஏற்கனவே ஸ்மார்ட் கேமிராக்களை தெருக்களில் பொருத்த ஆரம்பித்துவிட்டனர். இவை சீட்பெல்ட் அணியாமலும், செல்போன் பேசிக்கொண்டும் செல்லும் வாகன ஓட்டிகளை அடையாளம் காணுவதற்காக என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
முதல் மூன்று மாதங்களுக்கு எந்தவொரு மோட்டார்சைக்கிள் ஓட்டியும் தண்டிக்கப்பட மாட்டார்களாம். எச்சரிக்கையுடன் அனுப்பி வைக்கப்படுவார்களாம். அதன் பின்னர், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசிக்கொண்டு இருந்தால், 1033 ஆஸ்திரேலியன் டாலர்களும் (சுமார் ரூ.56,000), நான்கு தகுதி புள்ளிகளும் அவர்களுக்கு தண்டனைகளாக விதிக்கப்படவுள்ளன.
இந்த அபராதமே ஆஸ்திரேலியாவில் விதிக்கப்படும் மிக பெரிய சாலை குற்றத்திற்காக விதிக்கப்படும் பண அபராதமாகும். சீட்பெல்ட் அணியாமல் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு 413 ஆஸ்திரேலியன் டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட உள்ளன.
ஸ்மார்ட் கேமிராக்கள் சாலையில் கம்பத்திற்கு மேற்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இவை தன்னை கடந்து செல்லும் வாகனங்களையும் அதன் உள்ளே இருக்கு ஓட்டுனரையும் விண்ட்ஸ்க்ரீன் வழியாக படம் பிடித்து கொள்ளும். செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதால், மொபைல் போனை கையில் வைத்திருக்கும் ஓட்டுனர்களை மட்டுமே சேமித்து கொள்ளுமாம்.
மற்றவைகள் தானாக அழிந்துவிடும். சேமிக்கப்படும் படங்கள் உடனடியாக போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. அங்கு போலீஸார் மேனுவலாக ஒவ்வொன்றையும் சரிப்பார்க்கவுள்ளனர். நம்மூரில் உள்ள வழக்கமான கேமிராக்களை போல் இந்த ஸ்மார்ட் கேமிராக்கள் இருக்காது.
தன்னை கேமிரா ஒன்று கண்காணிக்கிறது என்பதையே சில மணிநேரங்கள் கழித்தே வாகன ஓட்டிகளுக்கு தெரியவரும். இந்த ஸ்மார்ட் தொழிற்நுட்பம் இந்த ஜூலை மாதத்தில் இருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு குயின்ஸ்லாந்தில் சோதனை செய்யப்பட உள்ளன.
சீட்பெல்ட் அணியாமல் இருக்கும் வாகன ஓட்டியை அடையாளம் காண கேமிராக்களை பயன்படுத்தும் உலகின் முதல் பகுதி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து ஆகும். செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய 2020 மார்ச் மாதத்திலேயே ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுவிட்டன.
இந்த வசதியை கொண்டுவந்ததில் இரண்டாவது இடத்தில் தான் குயின்ஸ்லாந்து உள்ளது. அடுத்ததாக, ஸ்மார்ட் கேமிராக்களை பயன்படுத்தி சாலை குற்றங்களை 2023ஆம் ஆண்டில் இருந்து விக்டோரியா மாகாண அதிகாரிகளும் கண்டறியவுள்ளனர்.
Note: Images are representative purpose only.
-
ஒன்னு கூடிட்டாங்க! நிஸான்-ஹோண்டா இணைவிற்கு இதுதான் காரணமா! ஜப்பான் பசங்க 2பேரும் ஒன்னு கூடி என்ன பண்ண போறாங்க!
-
மாலையில் சென்னையில் டீ குடித்துவிட்டு வந்தே பாரத் ரயிலில் ஏறினால் இரவு டின்னர் சாப்பிட பெங்களூரு போயிடலாம்!
-
அமெரிக்காவில் ஒட்டுமொத்த இந்தியாவைவும் பெருமைப்பட வைத்த இளைஞர்!! நடுரோட்டில் இதை செய்யாமல் இருந்து இருக்கலாம்!