Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மற்ற மாநில வாகனங்கள் தலைநகரில் நுழைய தடை: டெல்லி அரசு அதிரடி...???
நாட்டின் தலைநகரான டெல்லியில் மற்ற மாநிலத்தின் பழைய வாகனங்கள் நுழைய தடை விதித்து அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தேசத்தின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன் வீரியமானது, அங்கு செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் அதன் தாக்கம் கடுமையான பின்விளைவை ஏற்படுத்தி வருகிறது.
காற்று மாசுபடுவதை ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் (AQI) என்று குறிப்பிட்டு வருகிறோம். அதன்படி, காற்றினை அளவீடு செய்யும்போது 0-50 வரை இருந்தால் தூய்மையான காற்று என்று அர்த்தம். அதேபோல், 51ல் இருந்து 100 ஆக இருந்தால் திருப்தி அளிக்கக்கூடிய அளவு என்று எடுத்துக்கொள்ளப்படும். அதுவே, 101-200 ஆக இருந்தால் காற்றில் மிதமான மாசு கலந்து இருப்பதாக அர்த்தம். மேலும், 201-300 வரை இருந்தால் காற்று நிச்சயம் மாசபாடு அடைந்துள்ளது என்று பொருள். 301க்கும் மேலாக இருந்தால் காற்று கடுமையாக மாசடைந்துவிட்டது என்று கருதப்படும்.
இந்த அளவீட்டின்படி, பார்ப்போமேயானால் டெல்லியில் அதிகபட்சம் 590க்கும் அதிமான அளவில் காற்று மாசுபாடு அடைந்துள்ளதாக சமீபத்திய புள்ளி விவரம் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த அளவிற்கு டெல்லியல் மாசுபடுதல் ஏற்பட, பஞ்சாப் மற்றும் அரியானாவில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளும், அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களும் தான் காரணம் என கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, மாநிலத்தில் அதிகரித்து வரும் மாசுபடுதலைத் தவிர்க்கும் விதமாக டெல்லி அரசு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவ்வாறு, அதிக மாசினை உருவாக்கும் வாகனங்களை கண்டறிய டெல்லியில் ரிமோட் சென்சார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சூற்றுச்சூழல் மாசுகட்டுப்பாட்டு ஆணையத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், 10 அல்லது 15க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழைமையான வாகனங்களை மாநிலத்திற்குள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, அதிகளவு மாசினை ஏற்படுத்தும் வாகனங்களைப் பறிமுதல் செய்து, அந்த வாகனத்தின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க டெல்லி அரசு முடிவு செய்தது.
டெல்லி இந்தியாவின் தலைநகரம் என்பதால் நாளுக்கு நாள் உள் மற்றும் வெளி மாநலிங்களில் இருந்தும் வாகனங்கள் தினந்தோறும் வந்து செல்லும். அவ்வாறு, வந்துச் செல்லும் வாகனங்களாலும் மாசுபாடு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உள் மாநிலத்தின் பழைய வாகனங்களின் தடையைப்போன்று, வெளி மாநிலங்களில் இருந்து வரும் பழைய வாகனங்களுக்கும் தடைவிதிப்பதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது, "நாள்தோறும் உள்மாநிலம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான வாகனங்கள் டெல்லிக்கு வந்து செல்கின்றன. இதன்காரணமாக, காற்று மாசுபாடு அபாயத்தின் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்தே, மற்ற மாநிலத்தின் பழைய வாகனங்களும் டெல்லியல் நுழைய தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக" என்றார்.
மேலும், இந்த தடை உத்தரவை மீறும் வாகனங்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என டெல்லி போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வாகனத்தை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு