Just In
- 59 min ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 3 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா? போலீஸை மிரட்டி வீடியோ வெளியிட்ட டிரைவர்... எதற்காக தெரியுமா?
போலீஸை மிரட்டி வீடியோ வெளியிட்ட டிரைவர் தற்போது அதற்கான பலனை அனுபவித்து வருகிறார். இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. எனவே இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. புதிய அபராதங்களை அமலுக்கு கொண்டு வருவதை ஒரு சில மாநில அரசுகள் நிறுத்தி வைத்துள்ளன.
அதே சமயம் இன்னும் சில மாநில அரசுகள் அபராத தொகைகளை குறைத்துள்ளன. இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் இனி நீங்கள் 2,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதே சமயம் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால், இனி உங்களிடம் 5,000 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும். முன்பு இதற்கு 500 ரூபாய் மட்டுமே அபராதம்.
இதேபோல் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளும் முன்பு இருந்ததை விட பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. எந்தெந்த மாநிலங்களில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டு விட்டதோ அங்கெல்லாம் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் புதிய அபராதங்களை போலீசார் வசூலித்து வருகின்றனர்.
இந்த சூழலில், டாக்ஸி டிரைவர் ஒருவர் முடிந்தால் என்னை பிடித்து பாருங்கள் என போலீசுக்கு சவால் விடுத்து வீடியோ ஒன்றை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவையான ஆவணங்கள் எதுவுமே இல்லாமல் பெங்களூர் நகரில் காரை ஓட்டி வருவதாக அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
போலீசாரை தரக்குறைவாக பேசுவதுடன், முடிந்தால் என் மீது நடவடிக்கை எடுத்து பாருங்கள் என அவர் இந்த வீடியோவில் சவால் விட்டுள்ளார். சமூக வலை தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவியது. போலீசார் சிலரும் இந்த வீடியோவை பார்த்தனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை பிடிக்கும் முயற்சியை போலீசார் மேற்கொண்டனர்.
இந்த வீடியோ வெளியான 2 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்து விட்டனர். கைது செய்யப்பட்டுள்ள நபர் கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் ஹன்சூர் தாலுகா மச்சுபையனஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர் ஆவார். இவர் கேப் டிரைவராக வேலை செய்து வருகிறார். ரவிக்கு தெரிந்த வேன் டிரைவர் ஒருவரை போலீசார் தாக்கியதுடன், தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
தனது நண்பருக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக போலீசார் மீது ரவி ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இதன் விளைவாகவே இப்படி ஒரு விபரீதமான வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். ஆர்சி, டிரைவிங் லைசென்ஸ் என எவ்விதமான ஆவணங்களும் இல்லாமல் பெங்களூரில் காரை ஓட்டி வருவதாக ரவி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
தான் ஓட்டி வரும் காருக்கு எந்தவிதமான ரெக்கார்டுகளும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து சிறையில் தள்ளியுள்ளனர். இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
ரவியின் நண்பரிடம் போலீசார் அத்துமீறி நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. அதற்காக போலீசுக்கு சவால் விடுவதும், தன்னுடைய சட்ட விரோத நடவடிக்கைகளை தெரிவிப்பதும் நல்லதல்ல. தற்போது சிறை கம்பிகளுக்கு பின்னால் அதற்கான பலனை ரவி நன்கு அனுபவித்து கொண்டிருக்கிறார்.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்