Just In
- 4 min ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 5 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 5 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 6 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஆடிப்போன பங்க் ஊழியர்... காசு இல்லாமல் பெட்ரோல் போடுவதற்காக இளைஞர் செய்த ட்ரிக்... என்னனு தெரியுமா?
பணம் கொடுக்காமல் எரிபொருள் நிரப்புவதற்காக இளைஞர் ஒருவர் செய்த தந்திரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. போதாக்குறைக்கு பெட்ரோல் பங்க்குகளில் வேறு வாகன ஓட்டிகள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இது வாகன ஓட்டிகளுக்கு இன்னும் சிக்கலை ஏற்படுத்துகிறது.
பொதுவாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள்தான் வாகன ஓட்டிகளிடம் மோசடிகளை அரங்கேற்றுவார்கள். மீதி சில்லறை கொடுக்கும்போது குறைவாக கொடுப்பது உள்பட பல்வேறு தந்திரங்களை ஒரு சில பெட்ரோல் பங்க் ஊழியர்கள் செய்து வருகின்றனர். எனவே பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு செய்திகளை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் பலமுறை வெளியிட்டுள்ளது.
ஆனால் இம்முறை முற்றிலும் புதிய வித்தியாசமான ஒரு செய்தியை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். இங்கே ஏமாந்திருப்பது வாகன ஓட்டி அல்ல. பெட்ரோல் பங்க் ஊழியர். ஆம், இளைஞர் ஒருவர் தந்திரமாக செயல்பட்டு பெட்ரோல் பங்க் ஊழியரை ஏமாற்றியுள்ளார். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் நடந்துள்ள இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று இளைஞர் ஒருவர் நம்பர் பிளேட் இல்லாத ஸ்கூட்டரில், ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு வந்தார். அவர் ஹெல்மெட் அணியவில்லை. அத்துடன் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களையும் அவர் அணியவில்லை. பின்னர் பெட்ரோல் பங்க்கின் ஊழியரிடம் எரிபொருள் நிரப்பும்படி அவர் கேட்டு கொண்டார்.
இதன்பேரில் பெட்ரோல் பங்க் ஊழியர் எரிபொருளை நிரப்பி முடித்த பின்னர், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை போல் அந்த இளைஞர் ஒரு சில வினாடிகள் 'ஆக்டிங்' செய்தார். பேடிஎம் மூலமாக பணம் செலுத்துவதை போல் அவர் நடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பரிவர்த்தனை வெற்றிகரமாக நிறைவடைவதற்கு முன்பே அவர் அங்கிருந்து ஸ்கூட்டரை கிளப்பி கொண்டு பறந்து விட்டார்.
எவ்வித பண பரிவர்த்தனையும் நடக்கவில்லை என்பதை பெட்ரோல் பங்க் ஊழியர் உணர்ந்த நேரத்தில், அந்த இளைஞர் அங்கிருந்து சென்று விட்டார். பெட்ரோல் பங்க்கில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியிருந்தது. சம்பந்தப்பட்ட இளைஞர் இந்த தந்திரத்தை தொடர்ச்சியாக செய்து வருவதாக கூறப்படுகிறது.
சிசிடிவி கேமராவில் அந்த இளைஞர் சிக்கியிருந்தாலும், இன்னும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய சூழலில் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மற்றும் பேடிஎம் என டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் நடைமுறை அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் டிஜிட்டல் முறையில் பணத்தை ஏற்கின்றன.
ஆனால் இதிலும் ஒரு சிலர் செய்யும் இவ்வாறான தந்திரங்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை கவலையடைய வைத்துள்ளது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை போல் பாசாங்கு செய்து விட்டு, பரிவர்த்தனை நிறைவடைவதற்கு முன்னரே தப்பிக்கும் தந்திரத்தை எக்காரணத்தை கொண்டும் யாரும் செய்து விட வேண்டாம்.
பெட்ரோல் பங்க் நிர்வாகம் தரப்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பிரச்னையை உண்டாக்கி விடும் என்பதை அனைவரும் உணர வேண்டும். பெங்களூரில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பாக ரிபப்ளிக்வேர்ல்டு செய்தி வெளியிட்டுள்ளது.
-
இந்தியாவுலேயே நல்லா சேல்ஸ் ஆகுற கார் இதெல்லாம்! ஆனா இந்த விஷயம் தெரிஞ்சா யாரும் வாங்க மாட்டாங்க!
-
திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
-
5 நிமிஷ சந்தோஷத்துக்காக... தவளை தன் வாயால் சிக்கிடுச்சு!! ஆடி காரில் செய்யும் வேலையா இது?