Just In
- 4 min ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 2 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 6 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 7 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
Don't Miss!
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மனைவியின் நகைகளை விற்று பலருக்கும் உதவி செய்த ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த கதி... போலீஸ் மீது கடுப்பான மக்கள்...
தனது சொந்த செலவில் நோயாளிகளுக்கு உதவி செய்து வந்த ஆட்டோ டிரைவர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜாவேத் கான் பற்றிய செய்தியை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இவர் தனது மனைவியின் நகைகளை விற்பனை செய்து, தனது ஆட்டோவை இலவச ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளார். அத்துடன் அந்த ஆட்டோவில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த தகவலை அறிந்ததும், சமூக வலை தளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், போபால் காவல் துறையினர் அவருக்கு அபராதம் விதித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை காலை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊரடங்கு நேரத்தில் ஆட்டோவை இயக்கியதற்காகவும், அனுமதி இல்லாமல் ஆக்ஸிஜன் சிலிண்டரை கொண்டு சென்றதற்காகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்தி வெளியே கசிந்த பின் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, ஜாவேத் கான் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் காவல் துறையினர் கைவிட்டனர்.
அத்துடன் அவருக்கு சிறப்பு அனுமதியையும் வழங்கியுள்ளனர். ஆக்ஸிஜன் தேவைப்படுபவர்களுக்கும், மருத்துவமனை செல்ல வேண்டிய தேவை உள்ளவர்களுக்கும் ஜாவேத் கான் இலவசமாக உதவி செய்து வருகிறார். இந்த சூழலில்தான் அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது ஒரு குடும்பத்திற்கு அவர் உதவி செய்து கொண்டிருந்தார்.
ஆனால் காவல் துறையினருடன் தேவையில்லாமல் வாக்குவாதம் ஏற்பட்டதால், பொன்னான நேரத்தை இழந்ததாக ஜாவேத் கான் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஜாவேத் கான் கூறுகையில், ''ஒருவருக்கு உடனடியாக ஆக்ஸிஜன் தேவை என அழைப்பு வந்தது. ஆனால் பான்பூர் பகுதியை நான் அடைந்தபோது, பேரிகார்டுகள் வைத்து தடுக்கப்பட்டேன்.
அவசரமாக செல்ல வேண்டியுள்ளதால் என்னை அங்கிருந்து புறப்பட அனுமதிக்குமாறு காவல் துறையினரிடம் எடுத்து கூறினேன். ஆனால் நான் கூறியதை அவர்கள் கேட்கவில்லை. அத்துடன் அனுமதி இல்லாமல் ஏன் ஆட்டோ ஓட்டுகிறாய்? என என்னிடம் கேட்க தொடங்கினர். இதன்பின் அவர்களிடம் ஆவணங்களை காட்டினேன். அனைத்தும் சரியாக இருந்தது.
ஆனால் காவல் துறையினர் எனக்கு அபராதம் எழுத தொடங்கி விட்டனர்'' என்றார். மேலும் தனது ஆட்டோவை இலவச ஆம்புலன்ஸாக பயன்படுத்தி வருவது குறித்த தகவலையும் காவல் துறையினரிடம் எடுத்து கூறியதாக ஜாவேத் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''நான் செல்ல வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து காவல் துறையினரிடம் எடுத்து கூறினேன்.
ஆனால் அவர்கள் எனக்கு ஆதரவு அளிப்பதற்கு பதிலாக என் மீது வழக்கு பதிவு செய்து விட்டனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் மடிந்து கொண்டிருக்கும்போது உதவி செய்வது குற்றமா? நான் யாரிடமும் தவறாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் காரணமே இல்லாமல் காவல் துறையினர் என் மீது வழக்கு பதிவு செய்து விட்டனர்'' என்றனர்.
எனினும் இறுதியில் ஜாவேத் கான் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடுவதாக போபால் காவல் துறையினர் அறிவித்து விட்டனர். மேலும் ஆட்டோ ஓட்டுனர் ஜாவேத் கானுக்கு காவல் துறையினரால் தற்போது சிறப்பு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?