Just In
- 19 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 49 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Movies யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரொம்ப பெரிய மனசு... சேமித்த பணத்தை எல்லாம் செலவு செய்து மக்களின் ஹீரோவாக மாறிய ஆட்டோ டிரைவர்...
சேமித்த பணத்தை எல்லாம் செலவு செய்து ஆட்டோ டிரைவர் ஒருவர் மக்களின் ஹீரோவாக மாறியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் சிக்கி தவிக்கும் இந்தியாவில், ஆக்ஸிஜனுக்கு தற்போது கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில், சமூக அக்கறை நிறைந்த பலர் தாங்கள் செய்யும் உதவிகள் மூலம் உண்மையான ஹீரோக்களாக உருவெடுத்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்த ஜாவேத் கான் என்பவரும் அவர்களில் ஒருவர்.
ஆட்டோ ஓட்டுனரான ஜாவேத் கான் தனது திறமை மற்றும் மனித நேயத்தின் மூலம் பலருக்கும் உதவி செய்து வருகிறார். 34 வயதாகும் ஜாவேத் கான் தனது ஆட்டோவை தற்போது ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளார். இந்த ஆம்புலன்ஸில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனும் கிடைக்கும் என்பது முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
ஜாவேத் கான் தன்னிடம் இருந்த சேமிப்புகளின் மூலம் ஆட்டோவை, ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளார். அவரது மனைவியின் சேமிப்பும் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஜாவேத் கான் நோயாளிகளுக்கு இலவசமாகதான் சேவை செய்து வருகிறார். கடந்த 3 நாட்களில் மட்டும் ஜாவேத் கானின் ஆட்டோ ஆம்புலன்ஸ் போபால் நகரில், 8-10 நோயாளிகளுக்கு உதவி செய்துள்ளது.
போபால் நகரில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை உயர தொடங்கிய உடனேயே, அவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என ஜாவேத் கான் முடிவு செய்தார். இதன்பின் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்த ஜாவேத் கான், இறுதியில் தனது ஆட்டோவை, ஆம்புலன்ஸாக மாற்றி விட்டார்.
அவரது சிறிய ஆட்டோ ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் வசதியுடன், சானிடைசர் மற்றும் மருந்துகளும் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஜாவேத் கான் கூறுகையில், ''18 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். கோவிட்-19 வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது எனக்கு கவலையை ஏற்படுத்தியது.
எனவே என்னிடம் இருப்பதை வைத்து கொண்டு சமுதாயத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்தேன். இதன்படி ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றி சானிடைசர், சில மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டரை வைத்தேன்'' என்றார். ஆக்ஸிஜன் நிரப்புவதற்காக ஜாவேத் கான் தினமும் சுமார் 600 ரூபாயை செலவிட்டு வருகிறார்.
ஆனால் ஆக்ஸிஜனுக்கு தற்போது அதிக தேவை உள்ளதால், இந்த பணி சவால் மிகுந்ததாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆக்ஸிஜன் சிலிண்டரை மீண்டும் நிரப்புவதற்காக 4-5 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜாவேத் கான் தற்போது தனது ஆட்டோவில் சவாரி ஏற்றுவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டார்.
அதற்கு பதிலாக முழுக்க முழுக்க நோயாளிகளுக்கு மட்டுமே உதவி செய்து வருகிறார். கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் சிக்கி இந்தியாவிற்கு மூச்சு திணறி வரும் நிலையில், ஜாவேத் கான் போல் தினமும் ஹீரோக்கள் உருவாகி கொண்டுள்ளார். அந்த ஹீரோக்களுக்கு சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?