Just In
- 58 min ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 1 hr ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 1 hr ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 2 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இப்படியும் போலீஸார்கள் செய்வார்களா..? மிகவும் வித்தியாசமான அபராத முறையை கையாளும் காவலர்கள்!
அதிக அபராதத்தை காரணம்காட்டி வாகன ஓட்டிகளிடம் இருந்து கையூட்டு பெரும் போலீஸார்கள் மத்தியில், இங்கு ஓர் காவல்துறையினர் முற்றிலும் வித்தியாசமான முறையில் அபராதத்தை விதிக்க உள்ளனர். இதுகுறித்த கூடுதல் விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இது அமலுக்கு வந்த நாள் முதல் நாடே பெரும் பரபரப்பாக காணப்படுகின்றது. இதனை, அன்றாடம் வெளிவரும் செய்திகளைப் பார்த்தாலே நமக்கு தெரிந்துவிடும். ஏனெனில், போலீஸார் இதுவரை இல்லாத அளவிலான அபராத தொகையை விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து பெற்று வருகின்றனர்.
அதேசமயம், ஒரு சில போலீஸார் இதனைப் பயன்படுத்தி வாகன ஓட்டிகளிடம் இருந்து கையூட்டு பெறுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதன்காரணமாகவே, ஒரு சில மாநிலங்கள் மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில், பாஜக-வினர் ஆளும் குஜராத் அரசே பிரதமர் மோடி அரசின் புதிய அபராத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், மாநில மக்களிடம் அதிகபட்ச அபராதத்திற்கு பதிலாக குறைவான அபராதத்தையே வசூலிக்க இருப்பதாக அறிவித்தது.
அதன்படி, புதிய மோட்டார் வாகன விதிமுறைகளின்படி ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் ரூ. 1,000 அபராதமாக வசூலிக்கப்படுகின்றது. ஆனால், குஜராத்தில் அது 500 ரூபாயாக வசூலிக்கப்பட உள்ளது.
அதேபோன்று சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பதற்கு வசூலிக்கப்படும் ஆயிரம் ரூபாயும் குறைக்கப்பட்டு ரூ. 500ஆக வசூலிக்கப்பட உள்ளது. தொடர்ந்து டிரைவிங் லைசென்ஸ், காப்பீடு, ரேஷ் டிரைவிங் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்கு மத்திய அரசு அறிமுகம் செய்த அபராதத்தைக் காட்டிலும் குறைவாகவே அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.
இதேபோன்ற, ஓர் அதிரடி நடவடிக்கையில்தான் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக உள்ளிட்ட மாநில அரசுகள் மேற்கொள்ள உள்ளன.
இந்நிலையில், பீஹார் மாநிலத்தின் சட்டவுனி பகுதி போலீஸார் ஓர் தரமான அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், போக்கவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்காமல் விட்டுவிட இருப்பதாக கூறப்படுகின்றது.
அதேசமயம், அவர்கள் செய்த தவறை உணர்த்தும் விதமாக, தலைக் கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மட்டும், இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களுக்கு காப்பீட்டையும் வழங்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சட்டவுனி காவல்நிலைய ஆய்வாளர் எஸ்எச்ஓ முகேஷ் சந்திர குன்வர் கூறியாதவது, "வாகன தணிக்கையை ஹெல்மட் விற்பனையகம் மற்றும் காப்பீடு நிறுவனத்தின் அலுவலகம் உள்ளிட்டவை இருக்கும் அருகில் மேற்கொள்கின்றோம். அப்போது, மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அதனை உடனடியாக சம்பவ இடத்திலேயே வாங்கி கொடுத்துவிடுகின்றோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "எங்களின் இத்தகைய நடவடிக்கையால், அவர்கள் அடுத்த முறை அதே தவறில் ஈடுபடுவது தவிர்க்கப்படுகின்றது. அத்துடன், அவர்களுக்கு உரிய தண்டனையும் வழங்கும் வகையில் அது அமைகின்றது" என்று தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி, டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
ஆனால், மது அருந்திவிட்டு மற்றும் வாகனத்தை மிக மோசமாக இயக்கினால் அவர்களுக்கு சட்டத்திட்டத்தின் கடுமையான தண்டனை வழங்கப்பட உள்ளது. அதேசமயம், பீஹார் மாநிலத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆகையால், குடிபோதையில் வாகனத்தை இயக்குபவர்களுக்கு தனிப்பட்ட மரியாதை வழங்கப்பட உள்ளது.
போலீஸார் இவ்வாறு வித்தியாசமான முறையில் வாகன ஓட்டிகளை கையாள்வது முதல் முறையல்ல. ஏனென்றால், இதற்கு முன்னதாக கூட தமிழக போலீஸார், விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளை ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் சென்று பாடம் புகட்டினர். அதேபோன்று, கேரள போலீஸார் லட்டு வழங்கி சிறப்பித்தனர்.
விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து மிரட்டி பணம் பறிக்கும் பல காவல்துறையினர் மத்தியில் பீஹார் மாநில போலீஸார் மேற்கொள்ளவிருக்கும் இத்தகைய சிறப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறத் தொடங்கியுள்ளது.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!