Just In
- 2 min ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 47 min ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 1 hr ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- News மேடையிலேயே நிலைக்குலைந்த நிதின் கட்கரி.. மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. ஷாக் வீடியோ
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
பறவைகளால் விமானங்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா... இந்த விஷயம் தெரிஞ்சா விமானத்துல ஏறவே பயப்படுவீங்க!!
பறவைகளால் விமானங்களுக்கு என்ன மாதிரியான ஆபத்துகள் நிலவுகின்றன, ஆபத்துகளை தவிர்க்க என்ன மாதிரியான யுக்திகள் கையாளப்படுகின்றன என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என கூறுவர். இந்த பழமொழிக்கு உதாரணமாக பலவற்றை நம்மால் கூற முடியும். மிக சிறந்த உதாரணம், ஓர் சிறிய எறும்பு நினைத்தால் பிரமாண்ட உருவம் கொண்ட யானையையே வீழ்த்திவிட முடியும். அதுபோல தான் மிக சிறிய உருவம் கொண்ட பறவை நினைத்தால் எந்த மாதிரியான விமானமாக இருந்தாலும் வீழ்த்திவிட முடியுமாம்.
எனவேதான், இன்று வரை உலகெங்கிலும், விமான போக்குவரத்துக்கு மிகவும் சக்திவாய்ந்த அச்சுறுத்தல்களில் ஒன்றாக பறவைகள் பார்க்கப்படுகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட இரண்டு வாத்துகள் விமானத்தின் எஞ்ஜின் பகுதியில் மோதியதன் காரணத்தினால் அமெரிக்கா விமானபோக்குவரத்து துறைக்கு சொந்தமான விமானம் ஒன்று விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு பதிலாக ஹுட்சன் ஆற்று பகுதியில் தரையிறங்கியது.
இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் அவ்வப்போது உலகில் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றது. இதனை விமானிகள் எவ்வாறு தவிர்க்கின்றனர் மற்றும் பறவைகளின் திடீர் வழி மறைப்பினால் வேறு என்ன பின்விளைவுகள் எல்லாம் விமானத்திற்கு ஏற்படுகின்றன என்பதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் காண இருக்கின்றோம்.
பறவைகளின் திடீர் வழி மறைப்பால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?
பொதுவாக, பறவைகள் தன்னுடைய எல்லைப் பகுதியை வேறு இன பறவைகளுடன் பகிர்ந்துக் கொள்வதில்லை. அவற்றால் பேராபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து, அவை, பிற இன பறவைகளை தன்னுடைய எல்லைப் பகுதியில் இருந்து விரட்ட முயற்சிக்கும். உதாரணமாக, காக்கைக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து வல்லூறு போன்ற பாரிய உருவம் கொண்ட பறவைகளை விரட்டியடிப்பதை நாம் கண்டிருப்போம். சில நேரங்களில் சிறிய குறுவிகள்கூட இதுபோன்று செயல்படுவதை நாம் பார்த்திருப்போம்.
அந்தவகையில், சில நேரங்களில் பறவைகள் தங்களின் பெரிய எதிரியாக நினைத்து விமானங்கள் மீது மோதலை ஏற்படுத்துவதுண்டு. சில சமயங்களில் ஏதேர்ச்சையாக பறவைகளின் கூட்டத்திற்குள் விமானங்கள் புகுவது உண்டு. இந்த மாதிரியான நேரங்களிலேயே விமானம்-பறவை மோதல் ஏற்படுகின்றது.
இதுபோன்ற பறவை மோதலால் ஆண்டு ஒன்றிற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இழப்புகள் ஏற்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை 91 நாடுகளில் எடுத்த சர்வேவின் அடிப்படையில் ஐசிஏஓ வெளியிட்டுள்ளது.
பறவை-விமான மோதல் என்பது எங்கேயோ, எப்பொழுதோ ஒரு நாள் நடைபெறக் கூடியது என நினைத்துக் கொள்ள வேண்டும். உலகளவில் குறைந்தபட்ச பட்சம் ஒரு நாளைக்கு 34 பறவை மோதல்கள் அரங்கேறிவிடுகின்றதாம். இதுகுறித்த தகவலையும் ஐசிஏஓ அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது.
அதேசமயம், அனைத்து மோதல்களும் பெரியளவில் செலவீணத்தை ஏற்படுத்துவதில்லை என்றும் அது தெரிவித்துள்ளது. 92 சதவீத மோதல்கள் எந்தவித இழப்புகளை ஏற்படுத்தா வண்ணம் அமைகின்றன. ஆகையால், மீதமுள்ள 8 சதவீதம், அதாவது, மிக அரிதாகவே அதிக செலவீணத்தை ஏற்படுத்தும் வகையில் பறவை-விமான மோதல் விபத்துகள் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.
பறவை மோதல்களை தவிர்க்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?
பறவைகளை விமானத்தின் எஞ்ஜினில் இருந்து அப்புறப்படுத்த விமான நிறுவனங்கள் சில தனித்துவமான யுக்திகளைக் கையாண்டு வருகின்றன. எஞ்ஜின் பகுதியில் வலை பயன்படுத்தப்படுவது, விநோதமான ஒலியை எழுப்பி பறவை அப்புறப்புடத்துவது என கணிசமான செயல்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும், சில நேரங்களில் தவிர்க்க முடியாத வகையில் விபத்துகள் ஏற்படுத்து விடுகின்றது. எஞ்ஜின் பகுதியில் வலை பயன்படுத்தப்பட்டாலும், அதிக எடைக் கொண்ட பறவை வந்து மோதும்போது, அந்த வலை சேதமடைந்துவிடுவிதாக விமானிகள் கூறுகின்றனர்.
எனவே மற்றுமொரு விஷயமாக விமானத்தின் நிறத்தின் வாயிலாக பறவைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. பறவைகளைக் கவரக்கூடிய அடர் நிறங்களை பயன்படுத்தவதற்கு பதிலாக வானத்துடன் ஒத்துப்போக கூடிய நிறங்களை விமான நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இதன்மூலம், வானில் பறக்கும்போது பறவைகளின் கண்களில் இருந்து விமானங்களை மறைய முடியும்.
இதுதவிர, விமான நிலையங்களுக்கு அருகில் பறந்துக் கொண்டிருக்கும் பறவைகளை விரட்ட செயற்கை பறவைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, பறவைகள் அனைத்து பூச்சி உண்ணியாக இருப்பதால், விமான நிலையங்களில் இருக்கும் பூச்சிகளை உண்ண அங்கு உலா வந்த வண்ணம் இருக்கின்றன.
அவ்வாறு வரும் பறவைகளை விரட்டியடிக்க செயற்கை பறவைகள் பயன்படுத்தப்படுகின்றன. உலக நாடுகள் சிலவற்றிலேயே இந்த முறை கையாளப்படுகின்றது. இதுபோன்று பறவைகளை பயமுறுத்தக் கூடிய ஸ்டிக்கர் போன்றவற்றையும் விமான நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதன்வாயிலாக, ஒரு சில நிறுவனங்கள் நல்ல பலனை சந்தித்திருக்கின்றன.
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!