Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
“95 சதவீத இந்தியர்களுக்கு பெட்ரோலே தேவைப்படுவது இல்லை”- உ.பி மாநில அமைச்சர் சர்ச்சை கருத்து!!
இந்தியாவில் சுமார் 95% மக்களுக்கு பெட்ரோலே தேவைப்படுவதில்லை என உத்திர பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
பெட்ரோல் & டீசல் விலை விண்ணை எட்டிவரும் தற்போதைய சூழலில் எரிபொருள் விலையுயர்விற்கு ஆதரவாக யாராவது குரல் எழுப்பினாலே அன்றைக்கு அவர் தான் நெட்டிசன்களின் கான்செப்ட் ஆகிவிடுவார். இவ்வாறு தற்போது பிரபலமாகி இருப்பவர் தான் உத்திர பிரதேச மாநில அமைச்சர் உபேந்திர திவாரி.
உத்திர பிரதேசத்தில் பாஜக கட்சியை சேர்ந்த யோகி ஆதித்தியநாத் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. முதல்வர் யோகியின் தலைமையில் பணியாற்றும் உபேந்திர திவாரி, 95 சதவீத மக்களுக்கு பெட்ரோல் தேவைப்படவில்லை என்றும், 4-சக்கர வாகனங்களை பயன்படுத்தும் மீதி 5 சதவீதத்தினருக்கு மட்டுமே பெட்ரோல் & டீசல் தேவைப்படுவதாகவும் சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில் பேட்டியளித்துள்ளார்.
மேலும், பெட்ரோல் & டீசல் விலை உயர்வுக்கு அரசாங்கம் இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதும் ஒரு காரணமாகும் என்பது போன்றும் இவர் பேசியுள்ளார். உபேந்திர திவாரி அளித்த பேட்டி வருமாறு, பெட்ரோல் & டீசல் விலையை பொறுத்தவரை, இப்போது நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் ஒரு சிலர் மட்டுமே பெட்ரோல் தேவைப்படும் நிலையில் உள்ளனர்.
அதாவது தற்போது சமூகத்தில் 95% மக்களுக்கு பெட்ரோல் தேவையில்லை. அரசாங்கம் 100க்கும் அதிகமான மக்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. மேலும் இலவச கோவிட் சிகிக்சையையும் அளித்துள்ளது. மருந்துகள் வீடு வீடாக விநியோகிக்கப்படுகின்றன என கூறிய உபேந்திர திவாரி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்தியநாத் ஆகியோரின் ஆட்சியில் தனி நபரது வருமானம் இரட்டிப்பாகி உள்ளதாம்.
தனி நபரது வருமானம் அதிகரித்திருக்கும் அளவிற்கு ஒன்றும் பெட்ரோல் & டீசல் விலைகள் உயரவில்லையாம். மத்தியில் ஆளும் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் பெட்ரோல் & டீசல் விலையுயர்விற்கு இவ்வாறு ஒரே மாதிரியான பதிலையே கூறுகின்றனர். இதை ஏன் இப்போது கூறுகிறேன் என்றால், சமீபத்தில் கூட மத்திய அமைச்சர் ஒருவர், உபேந்திர திவாரியை போன்று எரிபொருள் விலை உயர்விற்கு இலவச கொரோனா தடுப்பூசியை காரணமாக கூறியுள்ளார்.
இதை கூறியது வேறு யாரும் இல்லை, மத்திய பெட்ரோலியம் & எரிவாயு துறை அமைச்சர் ராமேஷ்வர் டெலி ஆவார். "எரிபொருள் விலைகள் அதிகமாக இல்லை, ஆனால் அவற்றிற்கு விதிக்கப்பட்ட வரிகள் அதிகமாகும். நீங்கள் ஒரு இலவச தடுப்பூசியை எடுத்திருக்க வேண்டும். இதற்கான பணம் எங்கிருந்து வருகிறது. நீங்கள் பணம் செலுத்தவில்லை. அப்படியென்றால், இதற்கு பணம் எங்கிருந்துவரும்?" என பொதுமக்களை ராமேஷ்வர் டெலி கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்தியாவில் தற்சமயம் எப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோல் & டீசலின் விலைகள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் நாட்டில் வாகன ஓட்டிகளின் மிக பெரிய பிரச்சனையாக எரிபொருள்கள் விலை உயர்வு மாறி வருகிறது. பெட்ரோல் & டீசல் விலைகளின் உயர்வால் கிட்டத்தட்ட அனைத்து விதமான சரக்கு போக்குவரத்திற்கான கட்டணத்தையும் கனரக வாகன உரிமையாளர்கள் உயர்த்தி வருகின்றன.
இதனால் வாகனமே பயன்படுத்தாதவர்கள் கூட பெட்ரோல் & டீசல் விலை உயர்விற்கு மறைமுகமாக உட்படுகின்றனர். ஆதலால் இந்தியாவில் 95% மக்களுக்கு மட்டுமே பெட்ரோல் தேவைப்படுகிறது என உத்திர பிரதேச அமைச்சர் தெரிவித்திருப்பது அவரது அறியாமையை தான் வெளிக்காட்டுகின்றது. உண்மையில் அவர் கூறுவது போல் நாட்டில் வெறும் 5 சதவீதத்தினருக்கு மட்டுமே பெட்ரோல் தேவைப்பட்டாலும், பெட்ரோல் & டீசல் விலை உயர்வு நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் ஏதேனும் ஒரு வழியில் எழுதப்படுகிறது.
நமது தேசிய தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை தற்சமயம் ரூ.105.84 ஆக உள்ளது. அதுவே 1 லி டீசலின் விலை ரூ.94.57 ஆக உள்ளது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.111.77 மற்றும் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.102.52 ஆகும். நம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 103.61 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.92க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
நாட்டில் பெட்ரோல் & டீசலின் விலைகள் நாள்தோறும் அதிகாலை 6 மணியளவில் அப்டேட் செய்யப்படுகின்றன. இதனால் மேற்கூறப்பட்டவை அனைத்தும் தற்போதைய பெட்ரோல் & டீசலின் விலைகளாகும். நாளைக்கே இவற்றில் மாற்றம் கொண்டுவரப்படலாம். உபேந்திர திவாரி போன்ற சில அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசினாலும், சில பிஜேபி தலைவர்கள் மக்களுக்கு தலைவலியாக மாறியுள்ள எரிபொருள் விலைக்கு தாங்கள் தான் காரணம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த வகையில் அஸ்ஸாம் பாஜக தலைவர் பாபேஷ் கலிடா, 1 லி பெட்ரோலின் விலை ரூ.200ஐ தொட நேர்ந்தால், இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் அமர்ந்து செல்வதற்கு அஸ்ஸாம் அரசு அனுமதி வழங்க வேண்டும் என சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது வாகன ஓட்டிகளின் மத்தியில் சற்று ஆறுதலை உண்டாக்கியுள்ளது.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?