Just In
- 5 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 5 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 8 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பஸ் ஓட்டும்போது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்ய டிரைவர்களுக்கு அதிரடி உத்தரவு.. பயணிகள் நிம்மதி
பஸ் ஓட்டும்போது, செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்யும்படி டிரைவர்களுக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பஸ் ஓட்டும்போது, செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்யும்படி டிரைவர்களுக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதும், விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணங்களுள் ஒன்றாக உள்ளது. இதனால் பலர் பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது. பலர் படுகாயம் அடைகின்றனர்.
செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் தொடர்பாக, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, பெங்களூருவில் கடந்த ஆண்டு ஆய்வு ஒன்றினை நடத்தியது. இதில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.
ஆய்வில் பதில் அளித்தவர்களில் 83 சதவீதம் பேர், வாகனம் ஓட்டும்போது, செல்போன் மூலம் கால் செய்வதையோ அல்லது இன்கம்மிங் கால்களை எடுத்து பேசுவதையோ வழக்கமாக கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் பணி நிமித்தமாகதான் செல்போன் பயன்படுத்துவதாக கூறினர்.
ஆனால் 44 சதவீதம் பேர், வாகனம் ஓட்டிகொண்டே, செல்போன் மூலம் சமூக வலைதளங்களில் உலாவுவதை வழக்கமாக கொண்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. என்ன நடந்து விடப்போகிறது? என்ற அலட்சியம் காரணமாகவே பலர் செல்போனை பயன்படுத்தி கொண்டே வாகனம் ஓட்டுகின்றனர்.
இதர வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, அரசு பஸ்களின் டிரைவர்கள் சிலரும் கூட, செல்போனில் பேசிக்கொண்டு பஸ் ஓட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதனால் அந்த பஸ்ஸில் பயணிக்கும் பயணிகள் அனைவரும், உயிரை கையில் பிடித்தபடி, அச்சத்துடன்தான் பயணிக்க வேண்டியுள்ளது.
செல்போனில் பேசிக்கொண்டே டிரைவர்கள் பஸ்ஸை ஓட்டுவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இதன் எதிரொலியாக, பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழகம் (BMTC-Bangalore Metropolitan Transport Corporation) அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
டிரைவர்கள் அனைவரும், பஸ் ஓட்டும்போது, செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும் என பிஎம்டிசி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பிஎம்டிசி என்பது பெங்களூரு பெரு நகரில், பஸ்களை இயக்கும் ஓர் அரசு நிறுவனமாகும்.
இதுதவிர பெங்களூரு பெருநகரில் உள்ள மெஜஸ்டிக், சாந்தி நகர் உள்ளிட்ட முக்கியமான பஸ் நிலையங்களில், டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதாவது, பஸ் ஓட்டும்போது, செல்போன் பயன்படுத்த வேண்டாம் என லவுட் ஸ்பீக்கர் மூலமாக டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அத்துடன் இதர டெப்போக்களிலும், இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விபத்துக்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரும் என நம்பப்படுகிறது. பிஎம்டிசி-யின் அதிரடியான உத்தரவு காரணமாக, பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்திலும் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் பலர், செல்போனில் பேசிக்கொண்டு, பஸ் ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?