Just In
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 3 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 3 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
டிரெய்லர் லாரி அடியில் சிக்கி பிஎம்டபுள்யூ ஆர்1200 ஜிஎஸ் பைக்கில் சென்ற இளம் விமானி உயிரழப்பு..!!
டிரெய்லர் லாரி அடியில் சிக்கி பிஎம்டபுள்யூ ஆர்1200 ஜிஎஸ் பைக்கில் சென்ற இளம் விமானி உயிரழப்பு..!!
மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் நடைபெற்ற விபத்தில் பிஎம்டபுள்யூ ஆர்1200 ஜிஎஸ் பைக்கில் சென்ற ரைடர் ஒருவர் டிரெய்லர் லாரிக்கு அடியில் சிக்கி உயிரழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரழந்தவர் மஹாராஷ்டிராவின் பயன்தார் பகுதியை சேர்ந்த வருண் பம்ரோதியா அஹிர் என்றும், அவர் ஒரு இளம் விமானி என்பதும் தெரியவந்துள்ளது.
மனோர் என்ற பகுதிக்கு10 முதல் 15 பைக்கர்களுடன் இளைஞர் வருண் சென்றுள்ளார். அப்போது அவருடன் மற்றொரு பைக்கில் சென்ற பிரசாத் பட்டேல் என்பவரிடம் போலீசார் இந்த விபத்தை குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது, சதிவலி பாலம் வழியாக எல்லா பைக்கரும் சென்ற போது, முன்னே சென்றுக்கொண்டு இருந்த டிரெய்லர் லாரியை ஓவர்டேக் செய்ய வருண் முயன்றதாகவும், அப்போது இந்த விபத்து நடந்துள்ளதாகவும்பிரசாத் தெரிவித்தார்.
பல லேன் கொண்ட சாலையான அதில்,டிரெய்லர் லாரியின் பாதி பகுதியை வருண் தனது பிஎம்டபுள்யூ ஆர்1200 ஜிஎஸ் பைக்கில் அடைந்திருந்தார். அப்போது திடீரென டிரெய்லர் லாரி வருணின் லேனிற்கு நகர்ந்துள்ளது.
லாரி வேகமாக நகர்ந்ததால், அவரது பிஎம்டபுள்யூ ஆர்1200 ஜிஎஸ் பைக் டிரக்கின் பின்பகுதியில் மோதியது. அதில் ஏற்பட்ட விசையில் பைக் வருணுடன் லாரியில் பின்சக்கரத்திற்கு இழுத்து சென்றது.
சில நொடிகளில் நடந்துவிட்ட இந்த விபத்தால், வருணுடன் உடன் வந்த பைக் ரைடர்களும் நிலைகுலைந்து போய்விட்டனர். மேலும் அவர்கள் வருணை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையில் டிரெய்லர் லாரி ஓட்டுநர் வண்டியுடன் தப்பி சென்றுவிட்டார். படுகாயமடைந்த நிலையில் வருணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Trending On DriveSpark Tamil:
இளம் விமானியான வருண், சிறந்த பைக் ரைடர் எனவும், துல்லியமாக சாலைகளின் பரப்பை அறிந்து அதற்கேற்றவாரு பைக் ரைடிங் செய்வதில் கில்லாடி எனவும் போலீசாரிடம் பிரசாத் பட்டேல் தெரிவித்துள்ளார்.
வருண் பம்ரோதியா அஹிரின் மரணத்தை குறித்து விசாரணை நடத்திய போலீசார், டிரெய்லர் லாரி ஓட்டுநருக்கு தனக்கு பின்னால் பைக் ரைடர் வருவது தெரியாமல், பிளைன்டு ஸ்பாட் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறுகின்றனர்.
Recommended Video
கனரக வாகனங்களை ஓட்டக்கூடிய ஓட்டுநர்களிடம் இந்த பிரச்சனை அதிகளவில் காணப்படுகிறது. அவர்களால் லாரிக்கு பின்னால் வரும் பைக் உட்பட காரையும் கூட அடையாளம் காண முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற சந்தர்ப்பத்தில் நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் கனரக வாகனங்களை பைக் அல்லது காரில் ஓவர்டேக் செய்யும் போது, ஹாரனை ஓங்கி ஒலித்தபடியோ அல்லது முகப்பு விளக்குகளை இயக்கப்படியோ சிக்னல் கொடுங்கள்.
கூடுதலாக எப்போதும் பேருந்து, லாரி முதலான வாகனங்களுக்கும் உங்களது வாகனத்திற்கும் போதுமான இடைவெளியை பின்பற்ற வேண்டும். இது ஆபத்து ஏற்படாமலும் சுதாரித்துக்கொள்ள வழிவகுக்கும்.
கனரக வாகனங்களுக்கு இணையாக செல்லும் பழக்கத்தை மோட்டார் சைக்கிள் ரைடர்கள் தவிர்க்கவும். ஒவர்டேக் செய்வதற்கு நேரம் எடுத்துக்கொள்ளாமல், விரைவில் வாகனத்தை தாண்டி செல்வதும் நலம்.
பல்வேறு லேன் கொண்ட சாலைகளில் ஒவர்டேக் செய்து முடித்த பிறகு, மற்றொரு லேனிற்கு தேவையில்லாமல் செல்லாதீர்கள். அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்கள் செல்லும் போது கவனமாக செயல்படுவது மிக முக்கியம். குறிப்பாக பைக் ஓட்டுநர்கள் இதை கடைப்பிடிப்பது அவசியம்.
மும்பை - அகமதாபாத் சாலையில் நடைபெற்ற இந்த விபத்தில், அந்த டிரெய்லர் லாரி ஓட்டுநர் பின்னால் ஓவர்டேக் செய்து வரும் பைக்கை கவனித்து செயல்பட்டு இருந்தால், இளம் விமானியின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்.
எந்த பைக்கை பயன்படுத்துவதாக இருந்தாலும், பாதுகாப்பு என்பது நம்மிடம் தான் உள்ளது. அதை கருத்தில் கொண்டு சாலைகளில் செல்லும் போது செயலாற்றுங்கள். அப்போது ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!