Just In
- 3 hrs ago
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- 6 hrs ago
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
- 6 hrs ago
5 விதமான ட்ரிம், 40 விதமான வேரியண்ட்... பிரமாண்டமான தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது புதிய ஸ்கார்பியோ என்!
- 7 hrs ago
வெச்சு செஞ்சுட்டாங்க... ஹூண்டாய் நிறுவனத்தை கதற விட்ட டாடா... இப்படி ஒரு சம்பவத்தை நம்பவே முடியல!
Don't Miss!
- News
ராணி எலிசபெத் கொடுத்த மது விருந்தை மறுத்தவன் நான்.. அமைச்சர் துரைமுருகன் கலகல பேச்சு
- Movies
ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்.. டிரண்டாகும் போட்டோ!
- Sports
மிரட்டும் மழை.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..? இந்தியாவின் பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Finance
ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. உங்க சகவாசமே வேண்டாம் என வெளியேற திட்டமிடும் சிஸ்கோ!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Lifestyle
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Technology
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
விமானங்களில் ஏற விஐபிகளுக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 கார்... டில்லி ஏர்போட்டில் புதிய ஏற்பாடு...
டில்லி ஏர்போர்ட்டில் விஐபிகளை அழைத்து செல்ல பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்களை முழுமையாக காணலாம் வாருங்கள்.

நாம் எல்லோரும் வாழ்வில் ஒரு முறையாவது விமானத்தில் பயணிக்க வேண்டும் என ஆசைப்படுவோம். பலருக்கு அது சாத்தியமாகியிருக்கும். சிலருக்கு இன்னும் அந்த பாக்கியம் கிடைக்காமல் இருக்கும். விமானத்தில் பயணிப்பது என்பது ஒரு தனி அனுபவம். விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு விமான பயணத்திற்கு முன்பு உள்ள நடைமுறைகள் தெரியும்.

விமான நிலையங்களில் விமானங்களை நிறத்துவதற்கான இடம் இருக்கும். அங்கு விமானம் வந்து நின்றவுடன் விமானத்தின் கதவு அருகே பயணிகள் உள்ளே செல்ல வசதியாக நடைமேடை இணைக்கப்படும். இதன் பின்னர் விமானத்தின் கதவு திறக்கப்பட்டு அதன் வழியாக பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சில நேரங்களில் விமான நிலைய டெர்மனில்களில் கேட்கள் எல்லாம் முழுமையாக நிறந்துவிட்டால் விமான நிலையத்திலேயே ஆங்காங்கே விமானங்களை நிறுத்தி அங்கு வைத்து பயணிகளை விமானங்களில் ஏற்றுவார்கள். இதற்காக டெர்மனில்களிலிருந்து கார், பஸ், வேன் போன்ற வாகனங்களை பயன்படுத்தி பயணிகளை அழைத்து செல்வார்கள்.

இப்படியாக வாகனங்களை பயன்படுத்தி விமானங்களுக்கு அழைத்து செல்லும் போது அங்கு பயணிகள் தனது சொந்த வாகனங்களில் எல்லாம் செல்ல முடியாது. இதற்காக விமான நிலையம் சார்பில் நியமிக்கப்படும் வாகனங்களில் தான் கட்டாயம் பயணிக்க வேண்டும். இந்தியாவில் பெரும்பாலும் பஸ்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

வெளிநாடுகளில் ஒருவர் பயணிக்கும் வகுப்பை பொருத்து அவர் அழைத்து செல்லும் காரும் மாறுபடும். இப்படியாக இந்தியாவில் பொது வாகனங்களுக்கு இப்படி வசதியில்லை. ஆனால் தற்போது டில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் 4வது டெர்மினிலை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 4வது ரன்வே தயாராகி வருகிறது. அத்துடன் சேர்ந்து இந்த 4வது டெர்மனிலும் திறக்கப்படும்.

இந்த டெர்மினலில் விமானங்களில் ஏறுவதற்காக பயணிகளை ஏற்றி செல்லும் வாகனத்திற்கு பஸ் உடன் சேர்ந்து பிஎம்டபிள்யூ காரையும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக பிஎம்டபிள்யூ X7 வாங்கப்பட்டுள்ளது. இந்த கார்கள் பிஸ்னஸ் மேன்கள், சமூகத்தில் பெரிய அந்தஸ்து உள்ள மனிதர்கள் விமானத்தில் செல்லும் போது அவர்களை விமானத்தின் அருகே அழைத்து செல்ல இந்த பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல 4வது டெர்மினலில் உள்ள விஐபி லாஞ்ச்சில் பிஎம்டபிள்யூ லைஃப்ஸ்டைல் கலெக்ஷன்கள் ஷோக்கேஷ் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மிக முக்கியமாக பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் அதன் ஸ்டைல் மற்றும் சொகுசு வசதிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இனி படிப்படியாக இந்தசேவை மற்ற விமான நிலையங்களுக்கும் கொண்டு வரப்படும் என தெரிகிறது.
-
சூப்பரான புதுமுக எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை ரூ. 1.60 லட்சம் மட்டுமே!
-
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் மின்சார கார்! அட இந்த காருக்கா இப்படி ஒருநிலைமை ஆகியிருக்கு?
-
சின்ன மாற்றங்கள் தான் ஆனா இப்ப செமயா இருக்கு... 2022 புதிய ஹூண்டாய் வென்யூ ரிவியூ