Just In
- 20 min ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 47 min ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 1 hr ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 1 hr ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- News விவசாய நிலங்கள்.. கோடிக்கணக்கில் சொத்து.. அமித்ஷாவின் ஆண்டு வருமானம் மட்டும் எவ்வளவு தெரியுமா?
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Movies சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
விடிவு காலம் பிறக்கும் நேரம் வந்தாச்சு! முயல் வேகத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவி.. போஷ் அதிரடி
கொரோனா தொற்றை முயல் வேகத்தில் கண்டறியும் கருவியை கண்டுபிடித்திருப்பதாக பிரபல போஷ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
தன்னைத் தானே வல்லாதிக்க நாடு என கூறிக் கொண்ட சில வல்லரசு நாடுகள்கூட தற்போது பெருத்த அச்சத்தில் உரைந்திருக்கின்றன. எப்போதும், பிசியாக இருந்த வான் வழித் தடங்கள் தற்போது முற்றிலுமாக முடங்கியிருக்கின்றது. இதேநிலைதான் தற்போது தரை வழி போக்குவரத்துகளுக்கும். அதிக சத்தத்துடன், முன்னாடி செல்பவர்களை பயமுறுத்திச் சென்றுக் கொண்டிருந்த வாகனங்கள் தற்போது சாலையோரங்களிலும், பணிமனைகளிலும் தனித்துவிடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த திடீர் மாற்றத்தால் முன்பெப்போதும் இல்லாத அளவில் புவி மாசடைவது குறைந்திருக்கின்றது. மேலும், விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிய ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக, நீரோடைகள் அசுத்தமாவது மிக அதிகளவில் குறைந்திருக்கின்றது.
ஒரு பக்கம் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வந்தாலும், பல வழிகளில் நன்மையை ஏற்படுத்தியிருக்கின்றன. முக்கியமாக, நாம் மறந்த பாதுகாப்பு வழிமுறைகள், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்டவற்றை கொரோன மீண்டும் நியாகப்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த வைரஸ் உயிர் கொல்லியாக இருப்பதால் இதனை அடியோடு அழிப்பது கட்டாயமாகியிருக்கின்றது. இதனால், தினந்தோறும் ஏராளமான உயிர்கள் பரிதாபமாக உலகை விட்டு பிரிந்து வருகின்றன. முக்கியமாக முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோரே அதிகமாக இந்த வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆகையால், கொரோனா தொற்றைத் தவிர்ப்பது மிக அவசியமானதாக மாறியிருக்கின்றது. எனவே, உலக நாடுகள் அனைத்திலும் பிரபல நிறுவனங்கள் கொரோன தொற்றைக் கண்டறியக் கூடிய கருவிகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனமான போஷ், மிக விரைவில் கொரோனா வைரஸைக் கண்டறியும் கருவி ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கருவி கொரோனோ தொற்றை முயல் வேகத்தில் கண்டறிய உதவும் என கூறப்படுகின்றது. அதாவது, வெறும் 2.5 மணி நேரங்களிலேயே போஷ் நிறுவனத்தின் பரிசோதனை உபகரணம் கொரோனோ தொற்றை உறுதி செய்து விடுமாம்.
இந்த கருவி பயன்பாட்டிற்கு வருமேயானால் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் மனிதர்களால் வெற்றிப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொரோனவிற்கு எதிரான தற்போதைய போராட்டத்தில் அதன் தொற்றைக் கண்டறிவதிலேயே அதிக சவால் நிலவுகின்றது. ஒருவர் கொரோனா தொற்றைப் பெற்றிருக்கின்றாரா என்பதை உறுதிச் செய்யவே குறைந்தது ஒரு நாள் வரை எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
இதனால், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாத நபர், தனக்கு எந்தவிதமான பிரச்னையும் இல்லை என நினைத்து தன்னையறியாமல் மற்றவர்களுக்கும் பரப்பி வருகின்றனர். இந்த அவலநிலையை போக்க போஷ் நிறுவனத்தின் கோவிட்-19 வைரஸைக் கண்டறியும் கருவி உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. போஷ் நிறுவனம் இந்த கருவிக்கு போஷ் ரேபிட் கோவிட்-19 என்ற புனைப் பெயரை வைத்துள்ளது.
மேலும், இந்த கருவி இன்னும் ஆறு வாரங்களுக்கு உள்ளாகவே பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட இருக்கின்றதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இந்த கருவி கொரோனை தொற்று குறித்த தகவலை 95 சதவீதம் மிக துள்ளியமாக வழங்கும் என உறுதியாக தெரிவித்துள்ளது.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி