Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விடிவு காலம் பிறக்கும் நேரம் வந்தாச்சு! முயல் வேகத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவி.. போஷ் அதிரடி
கொரோனா தொற்றை முயல் வேகத்தில் கண்டறியும் கருவியை கண்டுபிடித்திருப்பதாக பிரபல போஷ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
தன்னைத் தானே வல்லாதிக்க நாடு என கூறிக் கொண்ட சில வல்லரசு நாடுகள்கூட தற்போது பெருத்த அச்சத்தில் உரைந்திருக்கின்றன. எப்போதும், பிசியாக இருந்த வான் வழித் தடங்கள் தற்போது முற்றிலுமாக முடங்கியிருக்கின்றது. இதேநிலைதான் தற்போது தரை வழி போக்குவரத்துகளுக்கும். அதிக சத்தத்துடன், முன்னாடி செல்பவர்களை பயமுறுத்திச் சென்றுக் கொண்டிருந்த வாகனங்கள் தற்போது சாலையோரங்களிலும், பணிமனைகளிலும் தனித்துவிடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த திடீர் மாற்றத்தால் முன்பெப்போதும் இல்லாத அளவில் புவி மாசடைவது குறைந்திருக்கின்றது. மேலும், விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிய ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக, நீரோடைகள் அசுத்தமாவது மிக அதிகளவில் குறைந்திருக்கின்றது.
ஒரு பக்கம் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வந்தாலும், பல வழிகளில் நன்மையை ஏற்படுத்தியிருக்கின்றன. முக்கியமாக, நாம் மறந்த பாதுகாப்பு வழிமுறைகள், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்டவற்றை கொரோன மீண்டும் நியாகப்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த வைரஸ் உயிர் கொல்லியாக இருப்பதால் இதனை அடியோடு அழிப்பது கட்டாயமாகியிருக்கின்றது. இதனால், தினந்தோறும் ஏராளமான உயிர்கள் பரிதாபமாக உலகை விட்டு பிரிந்து வருகின்றன. முக்கியமாக முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோரே அதிகமாக இந்த வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆகையால், கொரோனா தொற்றைத் தவிர்ப்பது மிக அவசியமானதாக மாறியிருக்கின்றது. எனவே, உலக நாடுகள் அனைத்திலும் பிரபல நிறுவனங்கள் கொரோன தொற்றைக் கண்டறியக் கூடிய கருவிகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனமான போஷ், மிக விரைவில் கொரோனா வைரஸைக் கண்டறியும் கருவி ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கருவி கொரோனோ தொற்றை முயல் வேகத்தில் கண்டறிய உதவும் என கூறப்படுகின்றது. அதாவது, வெறும் 2.5 மணி நேரங்களிலேயே போஷ் நிறுவனத்தின் பரிசோதனை உபகரணம் கொரோனோ தொற்றை உறுதி செய்து விடுமாம்.
இந்த கருவி பயன்பாட்டிற்கு வருமேயானால் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் மனிதர்களால் வெற்றிப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொரோனவிற்கு எதிரான தற்போதைய போராட்டத்தில் அதன் தொற்றைக் கண்டறிவதிலேயே அதிக சவால் நிலவுகின்றது. ஒருவர் கொரோனா தொற்றைப் பெற்றிருக்கின்றாரா என்பதை உறுதிச் செய்யவே குறைந்தது ஒரு நாள் வரை எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
இதனால், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாத நபர், தனக்கு எந்தவிதமான பிரச்னையும் இல்லை என நினைத்து தன்னையறியாமல் மற்றவர்களுக்கும் பரப்பி வருகின்றனர். இந்த அவலநிலையை போக்க போஷ் நிறுவனத்தின் கோவிட்-19 வைரஸைக் கண்டறியும் கருவி உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. போஷ் நிறுவனம் இந்த கருவிக்கு போஷ் ரேபிட் கோவிட்-19 என்ற புனைப் பெயரை வைத்துள்ளது.
மேலும், இந்த கருவி இன்னும் ஆறு வாரங்களுக்கு உள்ளாகவே பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட இருக்கின்றதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இந்த கருவி கொரோனை தொற்று குறித்த தகவலை 95 சதவீதம் மிக துள்ளியமாக வழங்கும் என உறுதியாக தெரிவித்துள்ளது.