Just In
- 12 min ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- 1 hr ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 3 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 4 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
Don't Miss!
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Movies கணவருடன் செம ரொமான்ஸ்.. சங்கர் மகள் ஐஸ்வர்யா தருணின் போட்டோஷூட்!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
இதுக்கு தனி திறமை வேணும்ங்க... ஒற்றை டயரில் டிராவல் செய்யும் அதிசய சிறுவன்!!
நம் அனைவருக்கும் நிச்சயம் ஒரு தனி திறமை இருக்கும்ங்க. அதை யார் அறிந்துகொண்டு பொது வாழ்வில் பயன்படுத்துகின்றனரோ அவர்கள் தான் வாழ்வில் வெற்றி பெற்றுகின்றனர் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.
சிலர் தங்களது திறமையை இளம் பருவதிலேயே கண்டறிந்து அதன் பாதையில் செல்கின்றனர். தற்போது நாம் கொண்டாடும் பிரபலங்கள் பெரும்பாலானோர் இந்த பிரிவை சேர்ந்தவர்களாக தான் இருக்கின்றனர்.
ஆனால் சிலரோ பாதி வாழ்க்கை முடிந்த பின்பு, 40 வயதை கடந்த பின்னரே தனக்குள் இருக்கும் திறமையை கண்டறிக்கின்றனர். அத்தகையவர்களுக்கு வாழ்வின் இரண்டாம் பாதி சிறப்பானதாக அமைந்துவிடுகிறது.
ஆனால் உண்மையில் இளம் பருவதில் தான் கற்பனை திறன் அதிகமாக இருக்கும் என்பதால் திறமையை சிறு வயதிலேயே வெளிக்கொண்டு வருவதுதான் சால சிறந்தது. இந்த வகையில் இளம் பருவதிலேயே தனது திறமையை வெளிக்காட்டி பலரது கவனத்தை பெற்றுள்ள சிறுவனை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
நம்மில் பெரும்பாலானோர் சிறு வயதில் வெறும் டயர்களை கைகளினால் தட்டி தட்டி ஓட்டிருப்போம். பலரது முதல் ஆட்டோமொபைல் தொடர்பான ஆர்வமாகவும் அதுதான் இருந்திருக்கும். ஆனால் இங்கு ஒருவர் பெரிய டயர் மீது ஏறி அதனை திறம்பட இயக்கி செல்கிறார்.
இதில் என்ன திறமை உள்ளது என்று நீங்கள் கேட்க நினைப்பது எனக்கு புரிகிறது. லாரி போன்ற கனகர வாகனத்தின் டயராக இருந்தாலும் அதன் மீது ஏறி நிற்பதே பெரிய விஷயம். ஆனால் இவர் அதனை முன்னும் பின்னுமாக ஓட்டுகிறார்.
இது கிட்டத்தட்ட ட்ரெட்மில்லில் ஓடுவது போன்றதே. ஆனால் ட்ரெட்மில்லில் கால்களுக்கு மட்டுமே வேலை. ஆனால் இங்கு டயரின் இயக்க திசையை மாற்ற மொத்த உடலையும் அதற்கு ஏற்றவாறு பேலன்ஸ் செய்ய வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் ட்ரெட்மில்லில் கால்கள் வழுக்கி விட வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் இதில் வாய்ப்புகள் மிக அதிகம். சாலையை கவனிக்கும் அதேநேரத்தில் டயரின் மேற்பரப்பிலும் சரியான இடத்தில் கால் பாதத்தை வைக்க வேண்டும்.
கால்களை கூடுதல் வேகமாக நகர்த்தினாலும் சரி, குறைவான வேகத்தில் நகர்த்தினாலும் சரி, கொஞ்சம் மிஸ்ஸானால் கீழே விழ வேண்டியதுதான். ஆனால் இவர் டயரை அவ்வளவாக பார்க்கவே இல்லை. சாலையில் எதிரே வரும் வாகனங்களையே கவனமாக பார்க்கிறார்.
இதில் இருந்து இதற்காக இவர் கடும் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்பது மட்டும் தெரிகிறது. இந்த கடுமையான பயிற்சி தான் பலரை அவரது பக்கம் திருப்பியுள்ளது. ருபின் ஷர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரியும் இந்த சிறுவனின் திறமையை பாராட்டி ட்விட் செய்துள்ளார்.
என்னதான் பலர் இவரது திறமையை பாராட்டினாலும், இதில் அதிகளவில் ஆபத்துகளும் உள்ளன. ஏனெனில் எல்லா நேரங்களிலும் நல்லதே நடக்கும் என்று கூற முடியாது. இதனால் யாரும் இதனை வீட்டில் தயவு செய்து முயற்சி பார்க்க வேண்டாம். அப்படியே முயற்சி செய்து பார்த்தாலும், இவரை போல் சாலைக்கு வர வேண்டாம்.