Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தற்போதைக்கு பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராது : நிதி அயோக் துணை தலைவர்
பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரும் வாய்ப்பு தற்போது இல்லை, எதிர்காலத்தில் நாம் அமைக்கும் பொருளாதார திட்டத்தை பொருத்து வாயப்புகள் அமையலாம் என நிதி அயோக் துணைதலைவர் ரஜிவ் குமார்
பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரும் வாய்ப்பு தற்போது இல்லை, எதிர்காலத்தில் நாம் அமைக்கும் பொருளாதார திட்டத்தை பொருத்து வாயப்புகள் அமையலாம் என நிதி அயோக் துணைதலைவர் ரஜிவ் குமார் தெரிவித்துள்ளார்
பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்கும் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெட்ரோல் விலையை கணிசமாக குறைக்க முடியும் என பலர் பேசி வருகின்றனர்.
ஆனால் இப்போதைக்கு பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கான சாத்தியமே இல்லை என நிதி அயோக் துணை தலைவர் ரஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த தெரிவான விளக்கத்தில் : " தற்போது பெட்ரோலிய பொருட்கள் மூலம் மாநில அரசுகளுக்க கிடைக்கும் வருமானத்தை எத்தனை மாநிலங்கள் இழக்க தயாரிக்க இருக்கிறது என்பது சந்தேகம் தான். இதனால் பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது தற்போதைக்கு சாத்தியம் இல்லை. எனினும் தற்போதைய முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
முதல் மாற்றமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த தங்கள் வரியை குறைக்க வேண்டும். தற்போது ரூ2.5 லட்சம் கோடி பணம் வரியாக வசூல் செய்யப்பட்டால் அதில் ரூ2 லட்சம் கோடி மாநில அரசிற்கே செல்கிறது.
அந்த வகையில் பெட்ரோலியத்தில் இருந்து வரும் வருமானத்தை தவிர்த்து மாற்ற வகையிலான வருமானத்தை அதிகரித்தால் மட்டுமே பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதை பற்றி யோசிக்கலாம்.
தற்போது ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர விரும்புவதாகவே தெரிவிக்கிறது. போக்குவரத்து துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், உள்ளிட்ட சில பா.ஜ., அமைச்சர்களும் இதற்கு ஆதரவே தெரிவித்து வருகின்றனர்.
நிதிஅமைச்சர் அருண் ஜெட்லியும் ராஜ்யசபாவில் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரவே மத்திய அரசு விரும்புவதாகவும், மாநில அரசுகள் இதற்கு துணை புரிய வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.
தற்போது மஹாராட்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மட்டுமே அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். மற்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நடப்பதை எல்லாம் பார்க்கும் போது தற்போது பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி வரப்பிற்குள் கொண்டு வருவது என்பது சாத்தியமே இல்லை. ஆனால் எதிர்காலத்தில் கொண்டு வர அதிகமான வாய்ப்புகள் உள்ளது. அதை எவ்வளவு சீக்கரமாக கொண்டு வருகிறோம் என்பதில்தான் நிர்வாக திறன் இருக்கிறது " இவ்வாறு கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்