Just In
- 3 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 4 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 6 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலைகாட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இப்படியெல்லாம் கூட ஒரு வாகனமா? அசத்தி காட்டிய ஜப்பானிய நிறுவனம்!!
சாலை மற்றும் ரெயில்வே ட்ராக் என இரண்டிலும் இயங்கக்கூடிய பேருந்து ஒன்று ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
இவ்வாறான பேருந்தை எங்காவது இதற்கு முன்னர் கேள்விப்பட்டுள்ளீர்களா? நிச்சயமாக நானும் இல்லை. ஏனெனில் பேருந்து ஒன்றை இரயில்கள் இயங்கும் பாதையில் இயங்க வைப்பது என்பது சற்று கடினமான காரியமாகும், செலவு மிகுந்த காரியமாகும்.
அதுமட்டுமின்றி நம் நாட்டில் தேவைப்படாத ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் ஜப்பானில் சிறிய போக்குவரத்து நிறுவனம் ஒன்று இத்தகைய இரு பயன்பாட்டு பேருத்தை உருவாக்கி கவனத்தை பெற்றுள்ளது.
இந்த பேருந்துகளை தயாரிக்க விரைவில் துவங்கவுள்ள இந்த ஜப்பான் நிறுவனம் 23 பயணிகள் அமரக்கூடிய வழக்கமான அதன் பேருந்தையே மாடிஃபை செய்துள்ளது. இந்த மாடிஃபை பேருந்து ஜப்பான், டோக்குஷிமா மாகாணத்தில் உள்ள அஸா கடற்கரை பகுதியில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
Source: Asatetu
பொத்தான் ஒன்றை அழுத்துவதின் மூலம் பேருந்து-மோடில் இருந்து இரயில்-மோடிற்கு இந்த பேருந்து மாறிவிடுமாம். இரயில் டிராக்கிற்கான சக்கரங்கள் பேருந்தின் அடிப்பகுதியில் இருந்து வெளிவர 15 நிமிடங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவரும் ஆறு சக்கரங்கள் பேருந்தின் மற்ற சக்கரங்களை காட்டிலும் அளவில் சிறியவைகளாக உள்ளன. பின்பக்கத்தில் இரு ரப்பர் டயர்கள் உள்ளடங்கும் இந்த 6 சிறிய சக்கரங்களின் உதவியுடன் இரயில்வே டிராக்கில் இந்த பேருந்தில் அதிகப்பட்சமாக மணிக்கு 30கிமீ வேகத்தில் இயக்க முடியும் என கூறப்படுகிறது. இது மிகவும் குறைவு.
ஆனால் எரிபொருளை 75 சதவீதம் குறைப்பது மட்டுமில்லாமல் டிராக் பயன்பாடு மற்ற பாகங்களை தொடர்ந்து பராமரிப்பதற்கு ஆகும் செலவையும் குறைக்கும். சுற்றுலா பயணிகளை கவரும் அதேசமயம் உள்ளூர்வாசிகளுக்கு உதவிகரமானதாகவும் இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த டிசம்பரிலும் ஜப்பானில் முதன்முறையாக இந்த இரட்டை-பயன்பாடு பேருந்து சோதனை செய்யப்பட்டு இருந்தது. சாலையில் இருந்து இரயில் டிராக்கின் மீது பேருந்து ஏறுவதற்கு ஏற்ப ஜப்பானில் அஸா கடற்கரை இரயில்வே பகுதியில் ஒரு பகுதியை இவ்வாறு உருவாக்கி உள்ளனர்.
இதன் பிறகு அனைத்தும் சரியாக சென்றால், இந்த பொது போக்குவரத்து பயன்பாட்டு வாகனம் விரைவில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டியில் காட்சிப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாம்.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!