Just In
- 7 min ago 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- 2 hrs ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- 2 hrs ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- 4 hrs ago ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
Don't Miss!
- News ஷாக்கிங்! அமெரிக்கா சொன்னதையே கேட்காத இஸ்ரேல்.. உலக நாடுகளை 3ம் உலகப்போருக்கு இழுக்கும் நெதன்யாகு?
- Movies SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எம்ஜிஆர் மாதிரி இந்த தப்பை நீங்க கார் ஓட்டும் போது 3 தடவை தான் பண்ணனும், 4 தடவை பண்ணா அப்புறம் நடக்கிறதே வேற..
பஸ்களுக்கான ஒதுக்கப்பட்ட லேனில் இனி கார் அல்லது மற்ற வாகனங்களை ஓட்டும் வாகன ஓட்டிகள் 3 முறைக்கு மேல் அதே தவறை செய்தால் அவரது லைசென்ஸ் சஸ்பென்ட் அல்லது ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பெரு நகரங்களில் எல்லாம் சாலைகளில் டிராஃபிக் நெருக்கடி அதிகமாக இருக்கும், உதாரணமாக டில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் மிக அதிகமான போக்குவரத்து நெருக்கடிகள் இருக்கிறது. இந்த பகுதியில் சில கி.மீ தூரம் பயணிக்கவே பல மணி நேரம் ஆவதாக மக்கள் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இது எல்லாம் நமக்குத் தெரிந்தது தான். இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு முக்கியமான காரணம் போதுமான ரோடு இல்லாமல் இல்லை.
மக்கள் வாகனங்களைச் சாலையில் முறையாக பயன்படுத்தும் முக்கியமான காரணம் சாலை விதிகளைப் பின்பற்றாமல் குறுக்கும் நெடுக்குமாக வாகனங்களை ஓட்டுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. விபத்துக்களும் நடக்கிறது. இதனால் பெரும்பாலான பெரு நகரங்களில் முக்கியமான சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதில் முக்கியமானது சாலையில் குறிப்பிட்ட லேன் பகுதியை பஸ் போக்குவரத்திற்காக ஒதுக்கியுள்ளது. சாலையில் பஸ்களில் அதிகம் பேர் பயணம் செய்கின்றனர். மற்ற வாகனங்களும் பஸ்களும் ஒரே இடத்தில் செல்வதால் பெரும் நெருக்கடி ஏற்படுகிறது. அதனால் பஸ்களுக்கான தனி லேன்களை உருவாக்கிவிட்டால் பஸ்கள் தனியாகவும் மற்ற வாகனங்கள் தனியாகவும் பயணிக்க முடியும். இதனால் பெரும் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கப்படும்.
இதை மனதில் வைத்து டில்லி அரசும் கடந்த ஏப்1ம் தேதி முதல் சாலையில் பஸ்களுக்கான தனி லேன்களை உருவாக்கியது. இந்நிலையில் சாலையில் மற்ற வாகன ஓட்டிகளும் பஸ் லேன்களை கவனிக்காமல் பல நேரம் பஸ் லேன்களை பயன்படுத்திப் பயணித்து வருகின்றனர். போக்குவரத்து திட்டத்தின்படி பஸ்களுக்கான லேன்களில் பஸ்கள் மட்டுமே பயணிக்க வேண்டும் மற்ற வாகனங்கள் பயணிக்கத் தடை. இதையும் மீறி சிலர் அதிக இடம் இருப்பதால் அதில் பயணித்து வந்தனர்.
அப்படி மீறுபவர்கள் மீது அபராதம் வசூலித்தும் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் டில்லி போக்குவரத்துத் துறை புதிதாக ஒரு சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி இப்படியாக பஸ்களுக்கு ஒதுக்கப்பட்ட லேன்களில் ஒரு ஓட்டுநர் தன் காரில் பயணம் செய்தால் அந்த ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்படும் தொடர்ந்து 3 முறை இதே தவற்றைச் செய்தால் அவர் ஓட்டுநர் உரிமம் சஸ்பென்ட் அல்லது ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதற்காக டில்லி அரசு டில்லி மோட்டார் வாகன சட்டம் 1993ல் விதிமுறை 3ல் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி பஸ் லேன்களில் மற்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டினால் அவர்களின் லைசென்ஸை ரத்து செய்யப் போக்குவரத்துத் துறை கமிஷனருக்கு முழு அதிகாரம் உள்ளது என மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 19ன் கீழ் இந்த திருத்தக் கொண்டு வருவதாகவும், தெரிவித்துள்ளது.
அப்படியாக ஒருவரின் லைசென்ஸ் சஸ்பென்ட் செய்யப்பட்டால் அவரால் அடுத்த 30 நாட்களுக்கு இந்த லைசென்ஸை பயன்படுத்த முடியாது. அதே நேரம் இந்த 30 நாளில் அவர் டில்லி போக்குவரத்துத் துறையின் பயிற்சி பள்ளியில் இவர் ஒரு மாதம் பயிற்சி பெற வேண்டும். அந்த பயிற்சியின் பின்பு அவருக்கு வைக்கப்படும் தேர்வில் அவர் வெற்றி பெற்றால் மட்டுமே மீண்டும் இந்த லைசென்ஸ் செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது குறிப்பிட்ட நபர் போக்குவரத்து விதிகளை மதிக்காததால் அவருக்கும் போக்குவரத்து விதிகள் குறித்த பயிற்சியை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பலர் இது குறித்துப் பேசி வருகின்றனர். இந்த சட்டத்திற்குப் பிறகு பஸ் லேனில் மற்ற வாகனம் செல்லாமல் இருந்தால் போக்குவரத்து நெருக்கடி பெரும்பான்மையாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெங்களூருக்கு போறவங்க ஒரு முறையாவது இந்த பஸ்ஸில் டிராவல் பண்ணி பாருங்க!! மொத்தமும் எலக்ட்ரிக்...
-
ஓலா, உபேர் கட்டணம் தரைமட்டத்துக்கு குறைய போகுது! டிரைவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!
-
குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!