Just In
- 30 min ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- 2 hrs ago இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- 7 hrs ago இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
- 9 hrs ago ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
Don't Miss!
- Sports இந்த சிஎஸ்கே வீரர் ஆர்சிபியின் ஸ்லீப்பர் செல்.. கடைசி வாய்ப்பு கொடுக்கும் தோனி.. மாற்று வீரர் ரெடி
- Finance இந்த 5 டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க.. உங்க குழந்தையை கில்லாடி ஆகிடுவாங்க..!
- News நிலப்பட்டா தொலைந்து விட்டதா? பழைய பட்டாவை மீண்டும் பெற முடியுமா? நிலத்தின் பட்டா பெற ஈஸி வழி இதுதான்
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 23 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது...
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹீரோவான கெஜ்ரிவால்... பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி... என்ன தெரியுமா?
பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செயல்படுத்தியுள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடியான திட்டங்களை ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து வருகிறார். ஆந்திர மாநிலத்தை கடந்து இந்தியா முழுவதும் அவரது திட்டங்கள் கவனம் ஈர்த்துள்ளன. எனவே முதல் அமைச்சர் என்பதை கடந்து, நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களிலும், அவருக்கு சினிமா ஹீரோ போல் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.
ஊழலுக்கு எதிராக களத்தில் குதித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஒரு சமயத்தில் இத்தகைய வரவேற்பு இருந்தது. ஆனால் இடையில் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வரிசையாக எழுந்தன. எனினும் அரவிந்த் கெஜ்ரிவாலின் திட்டங்கள் தற்போது மீண்டும் வரவேற்பை பெற தொடங்கியுள்ளன. டெல்லி அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் இதில் மிகவும் முக்கியமானது.
டெல்லி அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அப்போதே நாடு முழுவதும் இந்த திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னதை அதிரடியாக செய்து காட்டியுள்ளார்.
டெல்லி அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இலவச பயணம் என்பதால், வேலைக்கு செல்லும் பெண்கள் இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் திட்டத்தையும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக செயல்படுத்தியுள்ளார்.
நாட்டின் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. குறிப்பாக பேருந்துகளில் செய்யும் பெண்களிடம் செயின் பறிப்பு மற்றும் பணப்பை பறிப்பு போன்ற விபரீதங்கள் அரங்கேற்றப்படுகின்றன. மேலும் பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் ஈவ்டீசிங் கொடுமைக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
எனவே டெல்லியில் தற்போது புதிய பஸ்கள் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பேனிக் பட்டன்கள் இடம்பெறுகின்றன. இந்தியாவின் பொது போக்குவரத்து முறையில் இவை இரண்டும் அவசியமானவை. இதுதவிர மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஹைட்ராலிக் லிஃப்ட்களும் பஸ்களில் இடம்பெறுகின்றன.
மேலும் பஸ் மார்ஷல்களின் (Bus Marshal) பலமும் 13 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதனை தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, டெல்லி போக்குவரத்து கழக பஸ்களில், 13 ஆயிரம் மார்ஷல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தற்போது அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு பஸ்களிலும் மார்ஷல்கள் இருப்பார்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும் இந்த 13,000 மார்ஷல்களும் உடல் நலம் குன்றியோருக்கு உதவி செய்வதுடன், அவசர கால சூழ்நிலைகளிலும் உதவுவார்கள் எனவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசின் இந்த அதிரடி திட்டத்திற்கும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டம் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் என்பது உறுதி. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
-
இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
-
மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!