Just In
- 1 hr ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 2 hrs ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 2 hrs ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 2 hrs ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- News கொய்யாப்பழத்தை பார்த்ததுமே.. பாய்ந்து வந்த 2 ஆடுகள்.. பின்னாடியே ஓடிசென்ற முருகன்.. திணறிய தென்காசி
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Movies விஜயகாந்துக்கு சொன்ன படி பத்மபூஷன் விருது வழங்காதது ஏன்? இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...
சாகசம் செய்தவாறு சென்ற இருசக்கர வாகன ஓட்டியை, அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள எலெக்ட்ரானிக் சிட்டியின் மேம்பாலத்தில் அரங்கேறியதாக ஓர் விபத்துகுறித்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆனால், இந்த சம்பவம் அங்குதான் நடைபெற்றது என்பதற்கான உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இருப்பினும், யுடியூப், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த கோரமான விபத்து சம்பவம் பெங்களூருவிலேயே நடைபெற்றதாக தகவல்கள் பரவிய வண்ணம் இருக்கின்றது.
வீடியோவில், ஓர் இளைஞர் தான் ஆபத்தில் இருக்கின்றோம் என்பதை உணராமல், இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்தவாறு நீண்ட தூரம் பயணித்து வருகின்றார். தொடர்ந்து, அடுத்த சாகசத்தில் ஈடுபடுவதற்காக வீலிங் செய்தவாறு பைக்கில் இருந்தபடியே எழும்புகின்றார்.
அந்த நேரத்தில், அதே சாலையில் அதிவேகமாக சீறிப் பாய்ந்து வந்த கார் ஒன்று, இரு சக்கர வாகனத்தின்மீது வந்த வேகத்திலேயே மோதியது. இதில், பைக் எங்கு சென்றது என்றே தெரியவில்லை. ஆனால், மறுபுறம் காரில் இருந்தவாறு இந்த சம்பவம் அனைத்தையும் படம்பிடித்துக் கொண்டிருந்த காருக்கு அருகில் பைக்கின் ஒரு சில பாகங்கள் வந்து விழுவதை மட்டும் நம்மால் காண முடிகின்றது.
அதேசமயம், இந்த சம்பம் ஓர் மேம்பாலத்தின்மீது நடைபெற்றிருப்பதையும் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் உறுதி செய்கின்றன.
இந்த சம்பவம் அனைத்தும் கண் இமைக்கும் நேரத்திலேயே அரங்கேறிவிடுகின்றது. இந்த விபத்தில் பைக்கர் மற்றும் காரில் பயணித்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதுகுறித்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த கோரச் சம்பவம் பைக்கரின் அஜாக்கிரதை மற்றும் காரின் அதிவேகமே முக்கிய காரணமாக இருக்கின்றது. மேலும், அந்த சாலை முழுவதும் கடும் இருட்டாக இருந்ததும் மற்றுமொரு காரணமாக பார்க்கப்படுகின்றது.
சாலையில் இதுபோன்று சாகசத்தில் ஈடுபடுவது எப்போதும் ஆபத்தையே விளைவிக்கும். அதனை வாகன ஓட்டிகளுக்கு கடுமையாக எடுத்துக்காட்டும் வகையிலேயே இந்த வீடியோ அமைந்துள்ளது.
அண்மையில்கூட ஓர் இளைஞர் இதுபோன்று இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ததற்காக போலீஸாரின் பிடியில் சிக்கினார். மேலும், இதுபோன்று பொதுவெளியில் சாகசத்தில் ஈடுபடுவதை இந்திய மோட்டார் வாகன சட்டம் கடுமையாக எதிர்க்கின்றது.
தொடர்ந்து, இதுபோன்று விதிமீறல்களில் ஈடுபடுவோர்களுக்கு கடுமையான தண்டனை மற்றும் அபராதத்தை வழங்க புதிய மோட்டார் வாகன சட்டம் 2019ம் வழி வகைச் செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இதுவரை இல்லாத அளவில் அபராதங்கள் கடுமையாக விதிக்கப்பட்டு வருகின்றது.
பெங்களூர் நகரில் நடைபெற்றதாக பரவி வரும் கோரமான விபத்து காட்சியை நீங்கள் கீழே காணலாம்.
அவ்வாறு விதிக்கப்படும் அபராதங்கள் சில நேரங்களில் வாகனங்களின் விலையைக் காட்டிலும் அதிகமானதாக காட்சியளிக்கின்றது.
இந்த உச்சபட்ச அபராத திட்டமானது, இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் வாகன விபத்துகளே இல்லாத நாடாக மாற்றும் வகையில் மத்திய அரசு இதனை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இந்த புதிய அபராதத் திட்டம் பெரும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளது.
-
ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்