Just In
- 1 hr ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 3 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 4 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 4 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
துணை போலீஸ் கமிஷ்னரின் காலின் மீது காரை ஏற்றிய போராட்டக்காரர்!! சிறிதுநேரத்தில் பரபரப்பாகிய முக்கிய சாலை
பெங்களூரில் நடைபெற்ற பாரத் பந்த்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல் துணை ஆணையரின் காலின் மீது வாகனத்தை ஏற்றியதற்காக கன்னட அமைப்பு ஒன்றின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வாறு இந்த நிகழ்வு நடந்தது உள்ளிட்ட கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
டெல்லியில் போராடிவரும் விவசாயிக்களுக்காக நாடு தழுவிய பாரத் பந்த் கடந்த செப்.27ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த பந்த்தினால் பல வங்கிகள் செயல்படவில்லை. பெங்களுரில் நாடு தழுவிய பாரத் பந்த்தின் காரணமாக பல அமைப்பினர் தங்களது வாகனங்களில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஊர்வலமாக சென்றனர்.
இதில் ஒரு கன்னட அமைப்பினரின் டாடா ஹெரியர் காரின் சக்கரம் எதிர்பாராத விதமாக பாதுகாப்பு பணியில் இருந்த பெங்களூர் காவல் துணை ஆணையர் தர்மேந்த்ரா மீனாவின் கால் மீது ஏறியுள்ளது. உடனடி கார் ஓட்டியவரை பிடித்து விசாரித்த போலீஸார், அவர் கன்னட சங்காதனா அமைப்பை சேர்ந்த உறுப்பினர் ஹரிஷ் கவுடா என்பதை கண்டறிந்தனர்.
பெங்களூர், டுமாகுரு சாலையில் உள்ள கோராங்குந்த்ரே பல்யா சந்திப்பிற்கு அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறிது நேரத்தில் அந்த பகுதியையே பரபரப்புக்கு உள்ளாக்கிய இந்த நிகழ்வை தொடர்ந்து காரை ஓட்டிவந்த ஹரிஷ் கவுடா போலீஸாரால் அழைத்து செல்லப்பட்டார். மேலும் அவரது டாடா ஹெரியர் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஹரிஷ் கவுடா போராட்ட அமைப்பு ஒன்றின் தலைவர் என்பதை முதலாவதாக உறுதிப்படுத்தி கொண்ட டிசிபி தர்மேந்திரா மீனா இதுகுறித்து கூறுகையில், காரின் முன் கண்ணாடியின் ஒரு பக்கம் போராட்டம் சம்பதமான சுவரொட்டியால் மறைக்கப்பட்டு இருந்தது. இதனால் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகள் உருவாகின.
இதனாலேயே அந்த கார் தனது காலின் மீது ஏறியதாக தெரிவித்துள்ளார். சில நொடிகளில் காரின் ஒரு சக்கரம் டிசிபி-யின் பாதி காலிற்கு மேல் ஏறியதால், அவர் காயமடைந்தார். எனினும் தற்போது அவர் சீரான உடல்நிலையில் உள்ளதால், விரைவில் குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரத் பந்த்தினால் இந்தியா முழுவதும் முக்கிய சாலைகள் தடுக்கப்பட்டதால் பல மணிநேரம் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது. கடந்த செப்.27ஆம் தேதி காலை 6 மணியில் இருந்து 10 மணி வரையில், கிட்டத்தட்ட 4 மணிநேரங்கள் இந்த எதிர்ப்பு போராட்டம் நீடித்தது. போராட்டக்காரர்கள் நாட்டின் பல பகுதிகளில் ரயில்களை வழியில் நிறுத்தியதாக செய்திகள் கூறுகின்றன.
இந்தியாவில், கடந்த காலங்களில் பல காவல்துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளால் எதிர்பாராமல் காயமடைந்துள்ளனர். சில சமயங்களில் வேண்டுமென்றே வாகன ஓட்டி தனது வாகனத்தை போலீஸார் மீது மோதுவதும் நடைபெற்றுள்ளது. சாலையில் வேகமாக வரும் காரை நிறுத்த மற்றவர்கள் வேண்டுமானாலும் அஞ்சுவார்கள், ஆனால் போலீஸார் நேரடியாக வாகனத்திற்கு எதிராகவே சென்று மடக்குவார்கள்.
காக்கி சட்டை தான் போலீஸாருக்கு மிக பெரிய அடையாளம் மற்றும் தனி தைரியத்தை வழங்கக்கூடியது. இருப்பினும் சில சட்ட விரோதிகள் போலீஸார் என்று கூட பார்க்காமல் அவர்கள் மீது வாகனத்தை மோதியுள்ளதை சில முறை வீடியோக்களில் பார்த்துள்ளோம். அந்த மாதிரியான நேரங்களில் நசுங்குவதில் இருந்து காப்பாற்றி சில போலீஸார் காரின் பொனெட்டின் மீது எகிறியது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.
இருப்பினும் இவ்வாறு தப்பித்து செல்பவர் எப்படி இருந்தாலும் போலீஸாரிடம் சிக்கி கொள்வர். ஏனெனில் தற்போதைய காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து போலீஸ் குழுவிடமும் வயர்லெஸ் வாக்கி டாக்கிகல் உள்ளன. இவை போலீஸாருக்கு நிற்காமல் செல்லும் வாகன ஓட்டியை அடுத்த சந்திப்பில் பிடிக்க பெரிய உதவியாக உள்ளன.
அதேநேரம் அரசாங்கமும் குற்ற செயல்களில் ஈடுப்படும் வாகன ஓட்டிகளுக்கு அபாரதம் மற்றும் செல்லான் வழங்கும் செயல்முறையை சீராக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இப்போதெல்லாம் பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் விதிமீறல்களில் ஈடுப்படுவோரின் மீது, அப்போதே எடுக்கப்படும் படங்களின் மூலமாக நடவடிக்கை எடுத்து அபராத ரசீதை அவர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
சோதனை சம்பந்தமாக போலீஸார் வாகனத்தை நிறுத்த சொல்லும்போது, நிறுத்தாமல் செல்வது மிக பெரிய குற்றமாகும். தவறாக அபராதம் விதிக்கப்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் எப்போதும் நீதிமன்றத்தையோ அல்லது உயர் போலீஸ் அதிகாரிகளையோ அணுகலாம். என்ன இதற்கு சற்று நீண்ட செயல்முறைகள் உள்ளதே தவிர்த்து, இந்தியாவில் அரசாங்கத்தை ஒரு சாமானியன் தொடர்பு கொள்வது ஒன்றும் கஷ்டமல்ல.
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!