Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 1 hr ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 3 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Movies Nayanthara - புதிய இடம் புதிய தொடக்கம்.. நயன்தாரா என்ன இப்படி சொல்லிருக்காங்க.. ரசிகர்கள் குழப்பம்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
2023ல் இந்தியாவில் பறக்கும் டாக்ஸிகள்.... அதிலும் ஷேர் ரைடிங் செய்யலாம்...
வரும் 2023ம் ஆண்டிற்குள் இந்தியா உட்பட 5 நாடுகளில் பறக்கும் கார்களை களம் இறக்க உபேர் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது எந்த நகரத்தில் அதை செயல்பாட்டிற்கு கொண்டு
வரும் 2023ம் ஆண்டிற்குள் இந்தியா உட்பட 5 நாடுகளில் பறக்கும் கார்களை களம் இறக்க உபேர் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது எந்த நகரத்தில் அதை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது என்ற ஆய்வு நடப்பதாகவும், பறக்கும் கார்கள் டாக்ஸி பயன்பாட்டிற்காக வரும் போது அதில் ஷேர் ரைடிங் உம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உபேர் நிறுவனம் இன்னும் 5 ஆண்டுகளில் பறக்கும் கார்களை தயாரித்து அதன் மூலம் டாக்ஸிகளை இயக்குவதற்காக திட்டமிட்டு தற்போது பறக்கும் காருக்கான தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது.
2023ம் ஆண்டிற்குள் அந்நிறுவனம் பறக்கும் கார்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறது. தற்போது அமெரிக்கா, பாரீஸ், மற்றும் பிரான்ஸ் போன்ற நகரங்களில் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ள அந்நிறுவனம் தற்போது இந்தியாவையும் அந்த பட்டியலில் சேர்த்து தெரியவந்துள்ளது.
இது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறுகையில் :"கடந்த பிப்., மாதம் உபேர் நிறுவனத்தின் சிஇஓ வை சந்தித்த போது பறக்கும் கார்களை தயாரிப்பது குறித்தும், அதை இந்தியாவில் செயல்படுத்துவது குறித்தும் பேசினோம். அந்நிறுவனம் முதலில் 5 நாடுகளில் இதை செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதில் இந்தியாவும் அடங்கும். " என கூறினார்.
முன்னதாக கடந்த பிப்., மாதம் சின்ஹா உபேர் நிறுவன சிஇஓவை சந்தித்த பின்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பறக்கும் கார்கள், மற்றும் எதிர்கால கமர்ஷியல் ஏர் டிராவல் குறித்து பேசியதாக பதிவிட்டிருந்தார்.
பறக்கும் கார்கள் என்பது பயணிகளை ஏற்றிக்கொண்டு பறக்கும் வகையிலான ஒரு ட்ரோன், இது ஹெலிகாப்டர் போல நேராக மேல டேக் ஆப் செய்யவும், கீழே லோண்ட் ஆகவும் முடியும் இது முழுவதும் எலெக்ட்ரிக் திறன் மூலம் இயங்ககூடியது.
இதனால் இந்த பறக்கும் டாக்ஸிகள் இயங்கும் போது அதில் இருந்து மெஷின் செயல்படும் சத்தம் மிக குறைவாக இருக்கும். பறக்கும் போது மட்டும் மிக குறைவான சத்தம் வரும்.
தற்போது அந்நிறுவனம் உருவாக்கி வரும் இந்த பறக்கும் கார் சுமார் 250-300 கி.மீ வேகத்தில் சுமார் 2000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டதாக இருக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 100 கி.மீ. தூரம் வரை பயணம் செய்யும் திறன் கொண்டதாக இந்த பறக்கும் கார்கள் வடிவமைக்கப்படுகிறது.
இதற்கிடையில் பறக்கும் ட்ரோன்களுக்காக மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது இந்தியாவில் பறக்கும் டாக்ஸிகளை களம் இறக்க மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் சின்ஹார் தற்போது வெளியாகியுள்ள ட்ரோன் குறித்த சட்டம் தற்போதைய சூழ்நிலைக்கானது மட்டுமே எதிர்காலத்தில் உபேரோ அல்லது உபேர் போன்று வேறு ஒரு நிறுவனமோ தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் அரசை அனுகினால் அதற்கு தகுந்தார் போல் சட்டதிருத்தங்கள் செய்யப்படும் பறக்கும் டாக்ஸிகளுக்கு வழிவிடப்படும். என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் தற்போது இந்தியாவில் எந்த நகரில் இதை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. பெரும்பாலும் டிராபிக் அதிகமாக உள்ள பகுதிகளில் செயல்படுத்த முடிவு செய்ப்படும் எனவும் மக்கள் இந்த பறக்கும் டாக்ஸியை பயன்படுத்தி சுமார் 30-50 கி.மீ. வரை மற்ற போக்குவரத்தை விட வேகமாக பயணிக்க முடியம். இந்தியாவில் தற்போது ட்ரோன்கள் குறித்து இருக்கும் சட்டம் இந்த பறக்கும் கார்கள் வந்தால் விரைவில் மாற்றியமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
தற்போது உபேர் நிறுவனம் இந்தியாவில் இந்த திட்டத்தை செயல்படுத்த பெரிய மெட்ரோபோலிடன் நகராகவும், சுமார் 20 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் வாழும் நகராகவும், ஒரு சதுர மைலுக்கு 2000 பேர் வாழும் நகராகவும், குறிப்பாக ஏர் டிராவலுக்கு சாதகரமான நகராகவும் பார்த்து வருகிறது. மேலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் போது அதிலும் ஷேர் ரைடிங் சர்வீஸ் வசதி இருக்கும் எனவும், இதன் மூலம் மக்கள் குறைந்த விலையில் பறக்கும் காரை டாக்ஸி போல பயன்படுத்தலாம் எனவும் நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
ரூ525 டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யனுமா? இது தான் கரெக்டான டைம்!
-
உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!