Just In
- 50 min ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 1 hr ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 2 hrs ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Technology சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Movies அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
கோபக்கார பூனையால் சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய விமானம்... பாவம் அந்த பைலட்... என்ன நடந்தது?
கோபக்கார பூனையால் வானில் வட்டமடிக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே விமானம் மீண்டும் தரையிறங்கிய சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. சம்பவம்குறித்த மேலும் சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.
கோபக்கார பூனை ஒன்றால் வானில் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களியே விமானம் ஒன்று தரையிறங்கியதாக வியத்தகு தகவல் ஒன்று இணையத்தில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றது. சூடான் நாட்டிலேயே இந்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.
கத்தாரின் தலைநகரான தோஹாவில் (Doha) இருந்து சூடான் தலைநகர் கர்டூம் (Khartoum)-க்கு சென்ற விமானமே கோபக்கார பூனையால் மீண்டும் புறப்பட்ட விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறங்கியிருக்கின்றது. சம்பவத்தின்போது பூனை ஒன்று காக்பிட் பகுதிக்குள் நுழைந்துவிட்டதாக கூறப்படுகின்றது.
இதையறியாத பைலட்டுகள் விமானத்தை கர்டூம் நோக்கி பறக்க ஆரம்பித்திருக்கின்றனர். விமானம் வானில் பறக்க ஆரம்பித்த அரை மணி நேரத்தில், விமானத்திற்குள் பூனை இருப்பதை விமானிகள் உணர்ந்திருக்கின்றார். அதனை உடனடியாக வெளியேற்றவில்லை என்றால் நிலைமை சிக்கலாகிவிடும் என்பதை உணர்ந்த விமானி, சற்று சுறு சுறுப்பாக அதனை வெளியேற்ற ஆரம்பித்திருக்கின்றார்.
ஆனால், பூனையே விமானி முகம் தெரியாத நபர் என்பதால் அவரை பதிலுக்கு தாக்க தொடங்கியிருக்கின்றது. இதில் விமானிக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்தே, பூனையை அப்புறப்படுத்துவதற்காக புறப்பட்ட இடத்திற்கே விமானிகள் மீண்டும் விமானத்தை தரையிருக்கின்றனர்.
கடைசி வரை பூனை எப்படி காக்பிட் பகுதிக்குள் நுழைந்தது என்பது பற்றிய தகவல் யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்து வழக்கு பதிந்த விமான நிலைய போலீஸார், சம்பவம்குறித்து தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். பூனையையும் தற்போது அவர்கள் (போலீஸார்) வசமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோபக்கார பூனையால் விமானம் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய சம்பவம் அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. தொடர்ந்து, நெட்டிசன்கள் சிலர் 'பூனையால் எமர்ஜென்சி லேண்டிங்கா!' என நக்கலடிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
விமானத்தை பார்க் செய்திருந்தபோதோ அல்லது தூய்மைப்படுத்தும் போதோ பூனை விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என விமான நிலைய அதிகாரிகள் சிலர் தெரிவித்திருக்கின்றனர்.
இச்சம்பவத்திற்கு முந்தைய தினம் இரவு ஹன்கர் விமான நிலையத்தில் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கே, பூனை விமானத்திற்குள் ஏறியிருக்கும் என்றும் அவர்கள் கூறினர். இருப்பினும், யாராலும் துள்ளியமான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?