Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை குவிக்கிறது பிரபல நிறுவனம்... கெத்து காட்டுகிறார் எடப்பாடி...
பிரபல நிறுவனம் ஒன்று தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை குவிக்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகின் மிக பழமையான மற்றும் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று சியட் (CEAT). சியட் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டு 95 ஆண்டுகள் கடந்து விட்டன. இத்தாலியில் உள்ள துரின் நகரில், கடந்த 1924ம் ஆண்டு சியட் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.
ஆனால் இந்தியாவை சேர்ந்த ஆர்பிஜி குழுமம், கடந்த 1982ம் ஆண்டு சியட் நிறுவனத்தை கைப்பற்றி விட்டது. தற்போது ஆர்பிஜி குழுமத்தின் ஒரு அங்கமாக சியட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையகம் மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் உள்ளது.
டூவீலர்கள், கார்கள், லாரிகள், பேருந்துகள், இலகு ரக வர்த்தக வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஸாக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்களுக்கு சியட் நிறுவனம் டயர்களை தயாரித்து வருகிறது.
தற்போதைய நிலையில் இந்தியாவின் முக்கியமான டயர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக சியட் திகழ்ந்து வருகிறது. இதுதவிர சர்வதேச மார்க்கெட்டிகளிலும் சியட் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக 165 மில்லியனுக்கு மேற்பட்ட டயர்களை சியட் உற்பத்தி செய்கிறது.
இந்தியாவில் தற்போதைய நிலையில் 5 இடங்களில் சியட் நிறுவனத்தின் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அவை நாசிக், பந்தப், அம்பெர்நாத், நாக்பூர் (இவை நான்கும் மஹாராஷ்டிர மாநிலம்) மற்றும் ஹலோல் (குஜராத்) உள்ளிட்ட இடங்களில் இயங்கி கொண்டுள்ளன.
இதுதவிர இலங்கையிலும் கூட சியட் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. சியட் தொழிற்சாலைகள் ஒரு நாளைக்கு 800 டன் டயர்களை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தவையாக உள்ளன. இந்த சூழலில் தமிழக தலைநகர் சென்னைக்கு அருகே புதிய டயர் தொழிற்சாலை ஒன்றை அமைக்க சியட் திட்டமிட்டுள்ளது.
சென்னையின் புறநகர் பகுதியான ஸ்ரீபெரும்புதூர் அருகே சியட் நிறுவனத்தின் புதிய டயர் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசுடன் சியட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
புதிய தொழிற்சாலைக்காக சியட் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 4 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முதல் கட்டமாக (First Phase) 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது.
முதல் பேஸ் முடிவில் 1,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பேஸ் தொழிற்சாலை ஒரு நாளைக்கு 200 முதல் 250 டன்கள் வரையிலான டயர்களை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.
சென்னை அருகே புதிதாக அமையவுள்ள சியட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் கார்களுக்கான ரேடியல் டயர்களை உருவாக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிகிறது. இந்தியாவில் அமையவுள்ள சியட் நிறுவனத்தின் 6வது தொழிற்சாலையாக சென்னை பிளாண்ட் இருக்கும்.
இதுதவிர தமிழ்நாட்டில் ''ட்ரக் சர்வீஸ் ஹப்'' (Truck Service Hub) ஒன்றை உருவாக்கும் விஷயத்திலும் சியட் நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதால், தமிழகத்தில் முதலீடு குவிவது நல்ல விஷயமே. ஏற்கனவே ''ஆசியாவின் டெட்ராய்டு'' என குறிப்பிடப்படும் அளவிற்கு சென்னையில் ஹூண்டாய் உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிறைந்துள்ளன. இந்த சூழலில் ஆட்டோமொபைல் சார்ந்த முதலீடுகள் தொடர்ந்து குவிந்து வருவது சென்னைக்கு சிறப்பு சேர்க்கும் அம்சமாகவே பார்க்கப்படுகிறது.
-
ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!