Just In
- 49 min ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 1 hr ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- 1 hr ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 2 hrs ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Don't Miss!
- News நம்பர் 1 திமுக.. 3வது இவங்களா? யார் யாருடன் கள்ள உறவு? பாஜகனு சொன்னதுமே.. வந்துட்டாரு டிடிவி தினகரன்
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Movies என்னது ப்ளூ சட்டை மாறன் ஒரு அரைவேக்காடா?.. பிரபலம் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு அடிபணிந்து மத்திய அரசு விபரீத முடிவு.. விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்
ஆட்டோமொபைல் நிறுவனங்களின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து மத்திய அரசு எடுத்துள்ள திடீர் முடிவால், விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் நிறுவனங்களின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து மத்திய அரசு எடுத்துள்ள திடீர் முடிவால், விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஸ்பீடு கவர்னர்ஸ் (Speed Governors) எனப்படும் வேக கட்டுப்பாட்டு கருவியை, வர்த்தக ரீதியிலான வாகனங்களில் (Commercial Vehicles), கட்டாயம் பொருத்த வேண்டும் என்ற உத்தரவு கடந்த ஆண்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
சாலை பாதுகாப்பை அதிகரிக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகவே இது கருதப்படுகிறது. ஆனால் சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் மாநாடு சமீபத்தில் புது டெல்லியில் நடைபெற்றது.
இதில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது பேசிய நிதின் கட்கரி, ''வர்த்தக ரீதியிலான வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்துவது கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற திட்டமிட்டுள்ளோம்'' என அறிவித்தார்.
வாகனங்களின் வேக வரம்பை உயர்த்துவது என்பது அதிக அளவிலான விபத்துக்கள் நிகழ வழிவகை செய்து விடும். ஆனால் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்தே, வாகனங்களின் வேக வரம்பை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே நிதின் கட்கரியின் அறிவிப்பிற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சூழலில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கொடுக்கும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விட வேண்டாம் என தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் கமல் சோய் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கமல் சோய் கூறுகையில், ''இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். எனவே வாகனங்களின் வேக வரம்பை உயர்த்துவதன் மூலம் சீரான போக்குவரத்து இயக்கத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது.
மாறாக அதிகப்படியான சாலை விபத்துக்களுக்கே இது வழிவகை செய்யும். சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிவேகமும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. எனவே ஆட்டோமொபைல் நிறுவனங்களின் நிர்பந்தங்களுக்கு அடிபணிய வேண்டாம் என நிதின் கட்கரியை கேட்டுகொள்கிறேன்.
வளர்ச்சி அடைந்த நாடுகள் சீரான போக்குவரத்தை கொண்டிருப்பதால், அங்கு வாகனங்களின் வேக வரம்பை உயர்த்த முடியும். ஆனால் அங்கும் கூட வேக கட்டுப்பாட்டு கருவிகளை பயன்படுத்தவே செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார்.
தற்போது தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக உள்ள கமல் சோய், முன்னதாக பஞ்சாப் மாநில சாலை பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வர்த்தக ரீதியிலான வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் இல்லை என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாக மட்டுமே நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை தற்போதுள்ள நடைமுறையே தொடரும்.
இனி கார்கள் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால், ஆர்எஸ்எஸ் அறிவிப்பு பலகை அதனை டிஸ்ப்ளே செய்யும். இதன்மூலம் கார் டிரைவர்கள் வேகத்தை குறைத்து கொள்ள முடியும். கார்கள் மட்டுமல்லாது அனைத்து வாகனங்களின் வேகத்தையும் இது கணக்கிட்டு காட்டும்.
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!