Just In
- 51 min ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- 8 hrs ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- 9 hrs ago
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- 10 hrs ago
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
Don't Miss!
- News
Coronavirus Vaccine: தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடக்கம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Movies
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மக்களை இதன் பக்கம் ஈர்க்க வேண்டுமாம்! இதற்காக மத்திய அரசு செய்ய இருக்கும் காரியம் - என்ன அது?
மின் வாகனங்களின் பக்கம் மக்களை ஈர்க்கும் வகையில் ஓர் அதிரடி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது என்ன தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க. வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள்களின் விற்பனை நிலையங்கள் மிக அதிக எண்ணிக்கையில் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்தளவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் பயன்பாட்டில் இருந்திருந்தால் நாட்டில் எப்போதோ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கும்.

ஆமாங்க, தற்போது மின் வாகனங்களின் விற்பனை குழந்தை பருவத்திலேயே காட்சியளிக்கின்றது. இதற்கு, போதியளவில் மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாததே முக்கிய காரணம் ஆகும். குறிப்பாக, சார்ஜிங் மையங்கள் பெரியளவில் பயன்பாட்டில் இல்லாதது மக்களை அதன் பக்கம் நோக்கி நகர்வதை பயனற்று என சிந்திக்க வைத்திருக்கின்றது.

எனவேதான் மின் வாகனங்கள் மீது ஆசை இருந்தாலும் அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லாத காரணத்தினால் அதனை வாங்க பலர் தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையைப் போக்க வேண்டும் என்பதில் தனியார் மற்றும் அரசுத்துறைகள் மிக அதிக தீவிரமாக இருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள சுமார் 69,000 எரிபொருள் விற்பனை நிலையங்களில் ஒரு இ-சார்ஜிங் கருவியை நிறுவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த தகவலை நேற்று (திங்கள்கிழமை) மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டிருந்தார். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தகவலை அவர் கூறியிருந்தார். இந்த திட்டம் நாட்டில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க உதவும் என நம்பப்படுகின்றது.

மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் மானியம் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகக் கூறிய அமைச்சர் நிதின் கட்கரி, இதன்மூலம் இரண்டு மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்களின் விலை 30 சதவீதம் வரை குறைந்திருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "பேட்டரி வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் மிகவும் முக்கியமானது. எனவேதான் குறைந்தது ஒரு சார்ஜிங் கருவியையாவது ஒவ்வொரு பெட்ரோல் பங்க்கிலும் நிறுவ வேண்டும் என அரசு நினைக்கின்றது. இதனடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 69 ஆயிரம் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு மின்சார வாகன சார்ஜிங் கருவியைப் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட இருக்கின்றது" என கூறினார்.

மேலும், "ஐந்து ஆண்டுகளில் இந்தியா உலகளாவிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக மாறிவிடும். இதனை கருத்தில் கொண்டு ஆட்டோமொபைல் துறையை, பெட்ரோல் அல்லது எத்தனால் / சி.என்.ஜி ஆகிய எரிபொருள்களைப் பயன்படுத்தி இயங்கும் பன்முக திறன் கொண்ட வாகனங்களை உற்பத்தி செய்யுமாறு" கேட்டுக் கொண்டார்.