சமூக விலகலை மீறினால் ஆப்பு... வாகனங்களில் பயணிப்பவர்களுக்கான அபராதம் அறிவிப்பு... எவ்ளோ தெரியுமா?

வாகனங்களில் சமூக விலகலை மீறுபவர்களுக்கான அபராத தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சமூக விலகலை மீறினால் ஆப்பு... வாகனங்களில் பயணிப்பவர்களுக்கான அபராதம் அறிவிப்பு... எவ்ளோ தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது கோர தாண்டவமாடி வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையிலும், கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

சமூக விலகலை மீறினால் ஆப்பு... வாகனங்களில் பயணிப்பவர்களுக்கான அபராதம் அறிவிப்பு... எவ்ளோ தெரியுமா?

எனவே அன்றைய தினம் முதல் இந்தியாவில் பஸ், ரயில், விமானம் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அத்துடன் ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும் கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்குவதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சமூக விலகலை மீறினால் ஆப்பு... வாகனங்களில் பயணிப்பவர்களுக்கான அபராதம் அறிவிப்பு... எவ்ளோ தெரியுமா?

பயணங்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளால், இந்திய சாலைகள் வெறிச்சோடி போயின. ஆனால் ஊரடங்கு உத்தரவை மீறி ஒரு சிலர் வாகனங்களில் தேவையில்லாமல் வாகனங்களில் வலம் வர தொடங்கினர். அத்தியாவசிய பணிகள் இருப்பவர்கள் மட்டுமே வாகனங்களில் வரலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு சிலர் தேவையில்லாமல் ஊர் சுற்றினர்.

சமூக விலகலை மீறினால் ஆப்பு... வாகனங்களில் பயணிப்பவர்களுக்கான அபராதம் அறிவிப்பு... எவ்ளோ தெரியுமா?

அத்தகைய நபர்களின் வாகனங்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபாணியில் நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான வாகனங்களை, ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்திற்காக, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சமூக விலகலை மீறினால் ஆப்பு... வாகனங்களில் பயணிப்பவர்களுக்கான அபராதம் அறிவிப்பு... எவ்ளோ தெரியுமா?

ஆனால் தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் ரயில், விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆட்டோ, டாக்ஸிகளை இயக்குவதற்கும் நீண்ட இடைவெளிக்கு பின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமூக விலகலை மீறினால் ஆப்பு... வாகனங்களில் பயணிப்பவர்களுக்கான அபராதம் அறிவிப்பு... எவ்ளோ தெரியுமா?

இதுதவிர பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. எனவே முன்பு போல வாகன போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால் வாகன போக்குவரத்திற்கு இவ்வளவு தளர்வுகள் வழங்கப்பட்டாலும் கூட, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூக விலகலை மீறினால் ஆப்பு... வாகனங்களில் பயணிப்பவர்களுக்கான அபராதம் அறிவிப்பு... எவ்ளோ தெரியுமா?

இந்த சூழலில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என சண்டிகர் நிர்வாகம் அறிவித்துள்ளது. சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் சுகாதார துறை அறிவித்துள்ள உத்தரவின்படி, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள், அதற்குரிய வழிகாட்டுதல்களை மீறினால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

சமூக விலகலை மீறினால் ஆப்பு... வாகனங்களில் பயணிப்பவர்களுக்கான அபராதம் அறிவிப்பு... எவ்ளோ தெரியுமா?

அதே சமயம் கடைகளின் உரிமையாளர்கள் சமூக இடைவெளி விதிமுறைகளை மீறினால், ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இதுதவிர வாகனங்களுக்கான அபராதமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பேருந்துகளில் சமூக விலகல் விதிகளை மீறினால், 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதுவே கார்கள் என்றால், 2,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும்.

சமூக விலகலை மீறினால் ஆப்பு... வாகனங்களில் பயணிப்பவர்களுக்கான அபராதம் அறிவிப்பு... எவ்ளோ தெரியுமா?

மேலும் ஆட்டோ/டூவீலர்கள் எனும் பட்சத்தில், ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் சமூக இடைவெளியை கடைபிடிப்பார்கள் என நம்புவதாக சண்டிகர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு தளர்வுகள் மூலம் பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், நீங்கள் அவசியம் இல்லாமல் வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.

சமூக விலகலை மீறினால் ஆப்பு... வாகனங்களில் பயணிப்பவர்களுக்கான அபராதம் அறிவிப்பு... எவ்ளோ தெரியுமா?

ஏனெனில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காத வேகத்தில் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக மும்பை, சென்னை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. எனவே வீடுகளில் இருந்து தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்த்து விடுங்கள்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chandigarh: Vehicles To Be Fined Up To Rs 3,000 For Violating Social Distancing Norms. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X