Just In
- 48 min ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 2 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 3 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் விரைவில் துவங்குகிறது... நம்ப முடியாத பயண நேரம்!
சென்னை - பெங்களூர் இடையில் புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த சாலை மூலமாக, சென்னை - பெங்களூர் இடையிலான பயண நேரம் சில மணிநேரமாக குறைய இருக்கிறது.
தென் இந்தியாவின் மிக முக்கிய வர்த்தக மற்றும் தொழில்நுட்ப நகரங்களாக விளங்கும் சென்னை மற்றும் பெங்களூர் இணைப்பதற்கு சிறப்பான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. சரக்குப் போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து என இரண்டிலும் இந்த இரு நகரங்களும் மிக நெருக்கமான தொடர்பை பெற்றிருக்கின்றன. சாலை, ரயில், ஆகாய மார்க்கமாக இந்த இரு நகரங்களும் சிறப்பான இணைப்பை பெற்றுள்ளன.
இருந்தாலும், சாலை மார்க்கமாக தற்போது பயன்பாட்டில் பூந்தமல்லி, வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக செல்லும் பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 4 அதிக வாகனப் போக்குவரத்தால் திணறி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு பல சிரமங்கள் ஏற்படுவதுடன், விபத்துக்களுக்கும் வழிகோலுகிறது. இதனை தவிர்க்கும் விதத்தில், புதிய விரைவு நெடுஞ்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது.
ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், நெடுஞ்சாலைகளை அமைப்பதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.
இதனால் அதிர்ந்து போன நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தாமதமாகும் திட்டங்களை விரைந்து முடிப்பதற்கு முழு முனைப்புடன் களமிறங்கி உள்ளனர். அதன்படி, சென்னை - பெங்களூர் இடையிலான விரைவு நெடுஞ்சாலை திட்டத்தை அதிகாரிகள் விரைந்து முடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது. தென் இந்தியாவின் முதல் எக்ஸ்பிரஸ் சாவையாகவும் இது குறிப்பிடப்படுகிறது. இந்த விரைவு சாலை திட்டம் 10 பகுதிகளாக பிரிக்கப்பட்டு டென்டர் கொடுக்கப்பட உள்ளது. கர்நாடகம், ஆந்திராவில் தலா 3 பகுதிகளாகவும், தமிழகத்தில் 4 பகுதிகளாகவும் பணிகள் நடைபெற உள்ளன.
மொத்தம் 17,000 கோடி மதிப்பீட்டில் 263 கிமீ தூரத்திற்கு இந்த புதிய விரைவு சாலை அமைக்கப்பட உள்ளது. அத்துடன், வரும் 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த சாலை திட்டப் பணிகளை நிறைவு செய்வதற்கும் நெடுஞ்சாலை ஆணையம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் துவங்கி அரக்கோணம், குடியாத்தம், பலம்னேர் (ஆந்திரா), வி கோட்டா, மாலூர் வழியாக பெங்களூர் எல்லைப்பகுதியான ஒசக்கோட்டை வரை இந்த விரைவு நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய சாலை திட்டம் நிறைவு பெற்றால், சென்னையிலிருந்து பெங்களூருக்கு காரில் இரண்டரை மணிநேரத்தில் சென்றுவிட முடியும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Photo Credit - Wiki Commons
தற்போது பயன்பாட்டில் உள்ள சென்னை, பூந்தமல்லி, வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலைக்கும், ராணிப்பேட்டை, சித்தூர் வழியாக பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலைக்கும் இடையில் இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட உள்ளது. இதில், பல பகுதிகள் சித்தூர் வழித்தடத்தை ஒட்டி அமைய இருக்கிறது. இந்த திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?