Just In
- 14 min ago 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- 1 hr ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 2 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 2 hrs ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
Don't Miss!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- News "ஜெயலலிதாவை எப்படியெல்லாம் கேவலப்படுத்தியது திமுக.. நினைச்சு பாருங்க.." சேலத்தில் சீறிய மோடி!
- Movies நாயகன் படத்தில் இருந்து சிவாஜியை தூக்கினாரா கமல்ஹாசன்?.. பல வருட ரகசியத்தை வெளிப்படுத்திய பிரபலம்!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தொடர்ந்து அதிகரித்துவரும் சாலை விபத்துகளை குறைக்க சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
கடந்த 2013ல் நடந்த சாலை விபத்து ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விபத்தில் பெண் பல் மருத்துவர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
அவரது உடலில் கிட்டத்தட்ட 90 சதவீத பாகங்கள் செயலிழந்துவிட்டன. இது தொடர்பான வழக்கை முதலில் விசாரித்த மோட்டார் வாகன தீர்ப்பாயம், 18 லட்சத்து 43 ஆயிரத்து 908 ரூபாயை இழப்பீடாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.
இந்த இழப்பீட்டு தொகை மிகவும் குறைவாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், இழப்பீட்டு தொகையை ரூபாய் 1 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 548 ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த தொகை உடன் 2013ஆம் ஆண்டில் இருந்து 7 சதவீத வட்டி தொகையையும் சேர்த்து 12 வாரத்தில் விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென தீர்ப்பளித்துள்ளனர்.
இதனுடன் தங்களது தீர்ப்பில், சாலை விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிப்பதற்கு அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது தான் காரணம் என தெரிவித்துள்ள நீதிபதிகள், வாகனங்களின் வேகக்கட்டுப்பாட்டை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என அரசாங்கங்களை கேட்டு கொண்டுள்ளனர்.
மேலும், அதி விரைவு சாலைகளில் அதிகப்பட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்தில் செல்லலாம் என்று 2018ல் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் நீதிபகள் உத்தரவிட்டுள்ளனர்.
2009 மற்றும் 2019 ஆண்டுகளில் கணக்கிடப்பட்ட புள்ளிவிபரங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது கடந்த பத்து ஆண்டுகளில் சாலை விபத்தில் இறப்போரின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஒரு மணிநேரத்திற்கு 6 இரு சக்கர வாகன ஓட்டிகள் பலியாகுவதாக மத்திய சாலை போக்குவரத்து கழகம் அறிக்கையில் தெரிவித்ததையும், இந்த விபத்துகளில் சிக்குவோர் 70 சதவீதத்தினர் 18 வயதில் இருந்து 45 வயதிற்குள்ளானவர்கள் தான் என்பதையும் நீதிபதிகள் சுட்டி காட்டியுள்ளனர்.
மேலும், அதி விரைவு சாலைகளில் அதிகப்பட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்தில் செல்லலாம் என்று 2018ல் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் நீதிபகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு இருசக்கர வாகனங்களை தயாரிக்கும்போதே அவற்றில் வேகக்கட்டுப்பாட்டு தொழிற்நுட்பத்தை பொருத்த வேண்டுமென தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்திரவிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் கேட்டு கொண்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களிலும் இத்தகைய தொழிற்நுட்பம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நிர்ணயிக்கப்பட்டதற்கு அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களை கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்தலாம் எனவும் ஆலோசனை கூறியுள்ளனர்.
-
சோப்பு டப்பாக்களுக்கு பாடம் நடத்தும் டாடா கார்... விலை இவ்ளோதானா... சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா...
-
ரயில் கிளம்பும் போது டக்குன்னு ஒரு ஆட்டம் கொடுக்குமே அது ஏன் தெரியுமா?
-
ஒன்னு கூடிட்டாங்க! நிஸான்-ஹோண்டா இணைவிற்கு இதுதான் காரணமா! ஜப்பான் பசங்க 2பேரும் ஒன்னு கூடி என்ன பண்ண போறாங்க!