Just In
- 34 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 5 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தொடர்ந்து அதிகரித்துவரும் சாலை விபத்துகளை குறைக்க சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
கடந்த 2013ல் நடந்த சாலை விபத்து ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விபத்தில் பெண் பல் மருத்துவர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
அவரது உடலில் கிட்டத்தட்ட 90 சதவீத பாகங்கள் செயலிழந்துவிட்டன. இது தொடர்பான வழக்கை முதலில் விசாரித்த மோட்டார் வாகன தீர்ப்பாயம், 18 லட்சத்து 43 ஆயிரத்து 908 ரூபாயை இழப்பீடாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.
இந்த இழப்பீட்டு தொகை மிகவும் குறைவாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், இழப்பீட்டு தொகையை ரூபாய் 1 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 548 ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த தொகை உடன் 2013ஆம் ஆண்டில் இருந்து 7 சதவீத வட்டி தொகையையும் சேர்த்து 12 வாரத்தில் விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென தீர்ப்பளித்துள்ளனர்.
இதனுடன் தங்களது தீர்ப்பில், சாலை விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிப்பதற்கு அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது தான் காரணம் என தெரிவித்துள்ள நீதிபதிகள், வாகனங்களின் வேகக்கட்டுப்பாட்டை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என அரசாங்கங்களை கேட்டு கொண்டுள்ளனர்.
மேலும், அதி விரைவு சாலைகளில் அதிகப்பட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்தில் செல்லலாம் என்று 2018ல் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் நீதிபகள் உத்தரவிட்டுள்ளனர்.
2009 மற்றும் 2019 ஆண்டுகளில் கணக்கிடப்பட்ட புள்ளிவிபரங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது கடந்த பத்து ஆண்டுகளில் சாலை விபத்தில் இறப்போரின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஒரு மணிநேரத்திற்கு 6 இரு சக்கர வாகன ஓட்டிகள் பலியாகுவதாக மத்திய சாலை போக்குவரத்து கழகம் அறிக்கையில் தெரிவித்ததையும், இந்த விபத்துகளில் சிக்குவோர் 70 சதவீதத்தினர் 18 வயதில் இருந்து 45 வயதிற்குள்ளானவர்கள் தான் என்பதையும் நீதிபதிகள் சுட்டி காட்டியுள்ளனர்.
மேலும், அதி விரைவு சாலைகளில் அதிகப்பட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்தில் செல்லலாம் என்று 2018ல் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் நீதிபகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு இருசக்கர வாகனங்களை தயாரிக்கும்போதே அவற்றில் வேகக்கட்டுப்பாட்டு தொழிற்நுட்பத்தை பொருத்த வேண்டுமென தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்திரவிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் கேட்டு கொண்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களிலும் இத்தகைய தொழிற்நுட்பம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நிர்ணயிக்கப்பட்டதற்கு அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களை கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்தலாம் எனவும் ஆலோசனை கூறியுள்ளனர்.
-
ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு