Just In
- 48 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 1 hr ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Movies நீங்கள் என் படத்தை பார்த்திருக்க மாட்டீங்க.. ஹரியிடம் ஓபனாக சொன்ன கமல் ஹாசன்
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்தியாவில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான நகரமாக மாறும் சென்னை... ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!
இந்தியாவில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான நகரமாக மாறும் சென்னை... ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!
மத்திய போக்குவரத்து துறை அமைச்சகத்தின் 2016 இந்தியாவில் நடைபெற்ற விபத்துகள் குறித்த ஆய்வு வெளியாகி நாட்டையே அதிர்ச்சி உள்ளாக்கியது.
ஆனால் அதில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெற்ற நகரமாக சென்னை முதலிடம் பிடித்திருப்பது நம் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
2016ம் ஆண்டில் சென்னையில் மட்டும் 7,486 சாலை விபத்துகள் நடைபெற்று புகார் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் 7,375 சாலை விபத்துகள் நடைபெற்ற நகரமாக இந்திய தலைநகர் டெல்லி உள்ளது.
மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த தகவலின்படி, இந்தியாவில் சென்னை விபத்துகளின் தலைநகரமாக மாறி வருகிறது.
இரண்டாம் இடத்தை டெல்லி வகிக்க, 5,323 சாலை விபத்துகள் நடந்த நகரமாக கர்நாடக தலைநகர் பெங்களூரு மூன்றாவது இடத்திற்கு தேர்வாகிறது.
Recommended Video
சென்னை, டெல்லி, பெங்களூரு போன்றவை இந்தியாவின் முக்கிய நகரங்கள். அதனால் மக்கள் கூட்டம், வாகன நெரிசல் என்பது இயல்பாக மிக மிக அதிகம்.
பட்டியலில் இந்தியாவின் இந்த பெரிய நகரங்களுடன் சிறிய நகரமான இண்டோர் முதன்மை வகிப்பது ஆச்சர்யமளிப்பதாக உள்ளது.
கடந்த ஆண்டு இண்டோரில் மொத்தம் 5,143 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை பெங்களூரின் எண்ணிக்கையை விட சொற்ப அளவில் மட்டுமே வேறுபடுகிறது.
இந்தியாவின் முதன்மையான நகரங்களில் நடைபெற்ற இந்த கணக்கு எடுப்பில் 10 வது இடத்தில் தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத் இடம்பெற்றுள்ளது.
மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில் ஹைதராபாத்தில் கடந்தாண்டில் 2945 சாலை விபத்துகள் நடந்துள்ளன.
2016 சாலை விபத்துகளில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை குறித்த பட்டியலில் இந்திய தலைநகர் டெல்லி முதலிடம் பிடிக்கிறது.
கடந்தாண்டு டெல்லியில் மட்டும் நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துகளில் 1591 பேர் உயிரழந்துள்ளனர்.
இதற்கு அடுத்த இடத்தில் சென்னை உள்ளது. 2016ல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 1183 பெர் மரணமடைந்துள்ளனர்.
2016 சாலை விபத்துகளில் மரணமடைந்தோர் பட்டியலில் 5வது இடத்தில் கான்பூர், 8வது இடத்தில் ஆக்ரா, 9வது இடத்தில் அலஹாபாத் ஆகிய நகரங்கள் உள்ளன.
2016ல் அதிக சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட நகரங்களுக்கான பட்டியலில் சென்னைக்கு முதலிடம் என்றால்,
இந்தியளவில் அதிக சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருக்கிறது.
கடந்தாண்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாலை விபத்துகளில் மொத்தம் 71,431 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிற்கு அடுத்த இடத்தில் 53,792 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது.
மேலும் இந்த பட்டியலில் உத்தர பிரதேசம் 6வது இடத்திலும், ஆந்திரா, ராஜஸ்தான், தெலங்கானா, குஜராத் போன்ற மாநிலங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சாலை விபத்துகளால் கடந்தாண்டில் மாநில வாரியாக அதிகமானோர் மரணமடைந்த பட்டியலில் உத்தர பிரதேசம் முதலிடம் பிடிக்கிறது.
அந்த மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துகளில் 19,320 பேர் உயிரழந்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பது தமிழ்நாடு.
தமிழ்நாடு மாவட்டம், வட்டம் , பகுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2016ல் நடைபெற்ற சாலை விபத்துகலில் மொத்தம் 17,218 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகமாகி வருவதை உணர்ந்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரான நிதின் கட்கரி, இந்த ஆய்வை நடத்த உத்தரவிட்டார்.
அதன்படி பல மாதங்களாக நடைபெற்று வந்த ஆய்வில் கடந்தாண்டில் இந்தியாவில் 4,80,625 சாலை விபத்துகள் நடந்துள்ளது தெரியவந்தது.
இதில் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் பேர் மரணடைந்துள்ளனர். 4,94,624 பேர் படுகாயங்களுடன் உரிய சிகிச்சை காரணமாக உயிர் பிழைத்துள்ளனர்.
2015 கணக்கோடு 2016 ஆண்டிற்கான ஆய்வை ஒப்பிட்டு பார்த்தால், விபத்துகள் 4.1% குறைந்துள்ளது. ஆனால் சாலை விபத்துகளால் ஏற்பட்ட மரணம் 3.2% அதிகரித்துள்ளது.
இதில் அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால், இந்தியாவில் 2016 நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துகளில் கொல்லப்பட்டவர்களில் 46.3 பேர் இளைஞர்கள்.
விபத்துகளில் கொல்லப்பட்ட இளைஞர்களின் வயது 18 முதல் 35 வயதிற்குள் தான் இருக்கும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்தின் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
சென்னை உட்பட தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் விபத்துகளுக்கு முக்கியமான காரணம் சாலை விதிகளை ஒழுங்காக பின்பற்றாதது தான்.
இதை கருத்தில் கொண்ட தமிழக அரசு தமிழ்நாட்டு போக்குவரத்து காவலர்களுடன் அலோசித்து, வாகன ஓட்டிகளுக்கு அசல் ஓட்டுநர் உரிமத்தை சோதனை காலத்தின் போது அதிகாரிகள் பரீசிலிக்க கட்டாயமாக்கியுள்ளது.
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!