Just In
- 1 hr ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 1 hr ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 2 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 3 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- News ஹலோ எங்க வீட்ல மொத்தம் 5 ஓட்டு.. சார் நான் ஈபி ரீடிங் எடுக்க வந்திருக்கேன்!
- Movies இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இனிமே சென்னை பஸ்களில் இதைக் கேட்கலாம்! புதுசா சென்னை வரவங்களுக்கு குழப்பமே இருக்காது!
சென்னை மாநகர பஸ்களில் ஜிபிஎஸ் முறையில் பஸ் நிறுத்தங்களை அறிவிக்கும் தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இது மாநகர பகுதியில் செயல்படும் 1000 பஸ்களில் செயல்படுத்தப்படவுள்ளது. சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இந்த சேவையைத் துவக்கி வைத்தார். பார்வையற்றவர்கள், முதியவர்கள், புதிதாகச் சென்னைக்கு வந்தவர்களுக்கு இது உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரம் இந்தியாவில் முக்கியமான நகரமாக இருக்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் சென்னைக்கு வந்து செல்கிறனர். சென்னையில் சிட்டிக்குள் போக்குவரத்திற்கு மாநகர பேருந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பஸ்களில் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு சென்னை மாநகர பஸ்களை தொழிற்நுட்ப ரீதியில் மேம்படுத்த முடிவு செய்தது. அதற்காகச் சென்னையில் ஓடும் அனைத்து பேருந்துகளிலும் ஓலி வழியாக வழிகாட்டு வசதிகளைக் கொண்டு வரத் திட்டமிட்டது.
அதன்படி தற்போது சென்னை பஸ்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான பஸ் நிறுத்த அறிவிப்பைச் செய்யும் தொழிற்நுட்பத்தை பொருத்தி வருகிறது. இந்த தொழிற்நுட்பம் ஒரு பஸ் ஸ்டாப்பை பஸ் நெருங்கும் போது பயணிகளுக்கு பஸ் எந்த பஸ் ஸ்டாப்பில் நிறுத்தப்படவுள்ளது. அடுத்தாக வரவுள்ள பஸ் ஸ்டாப் என்ன உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் ஒலி வடிவில் அறிவிப்பு செய்யும். இந்த தொழிற்நுட்பம் தானியங்கியாக இயங்கும் திறன் கொண்டது.
பஸ்சில் உள்ள டிரைவர் கண்டெக்டர் யாரும் இதைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை முற்றிலும் ஜிபிஎஸை அடிப்படையாகக் கொண்ட தொழிற்நுட்பத்தின் கீழ் இது இயங்குகிறது. இந்த தொழிற்நுட்பத்தை சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது அவருடன் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
துவக்க நிகழ்விற்குப் பின்பு உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் அரசு பஸ்சில் பயணம் செய்தனர். இந்த தொழிற்நுட்பம் முதற்கட்டமாகச் சென்னை மாநகரில் இயங்கி வரும் 150 பஸ்களில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகமாகப்படுத்தப்பட்டு விரைவில் 1000 பஸ்களுக்கு பொருத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் பகுதிக்குள் ஓடும் அனைத்து பஸ்களிலும் இந்த தொழிற்நுட்ப வசதி வந்து விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்நுட்பம் பார்வையற்றவர்கள், முதியவர்கள், நகருக்கு புதிதாக வந்தவர்கள், குறிப்பிட்ட ரூட்டில் அறிமுகம் இல்லாதவர்கள் சரியான பஸ் நிறுத்தத்தில் இறங்கவும், குழப்பத்தைத் தவிர்க்கவும் உதவும் என்பதால் இந்த தொழிற்நுட்பம் பஸ்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் தேவையில்லாமல் குழம்புவது மற்றும் மற்றவர்களால் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் பயணத்தைச் சுலபமாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னைக்கு அதிகமாகச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளியூரிலிருந்து பணிக்காக வருபவர்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்கள் பஸ்களை பயன்படுத்தும் போது அவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் எது என்பதைத் தெரியாமல் குழப்பி வந்தனர். இனி இந்த தொழிற்நுட்பம் அந்த குழப்பத்தைத் தவிர்த்து விடும் என எதிர்பார்க்கலாம். இந்த தொழிற்நுட்பம் ஏற்கனேவ பல மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பஸ்களில் அறிமுகமாகிவிட்டது. தமிழகத்திற்கு தற்போது வந்துள்ளது.
பஸ்களில் வரும் இந்த அறிவிப்பு பஸ்களில் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் அனைத்து பயணிகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதால் பஸ் உள்ளே முன்பகுதி, நடுப்பகுதி மற்றும் பின்பகுதி ஆகிய இடங்களில் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பஸ்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் அனைவருக்கும் இந்த அறிவிப்பு கேட்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!