Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பைக் டாக்ஸிகளுக்கு செக் வைக்கும் சென்னை போலீஸ்: தொடரும் பைக் டாக்ஸி பறிமுதல்...!
உரிய ஆவணமின்றி இயங்கும் பைக் டாக்ஸிகளைப் பறிமுதல் செய்யும் பணியில் சென்னை ஆர்டிஓ அதிகாரிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை உட்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் கால் டாக்ஸி சேவை செயல்பட்டு வருகின்றது. இந்த சேவையின் மூலம் விரும்பிய இடத்திற்கு, வாகனங்களைப் புக் செய்து குறுகிய காலகட்டத்தில் செல்ல முடியும். இதற்காக ஆன்லைன் அல்லது மொபைல் போன் ஆப்மூலம் தேவைக்கேற்ப வாகனங்களைப் புக் செய்து கொள்ளலாம்.
முன்னதாக இந்த சேவையில் கார், ஆட்டோ உள்ளிட்ட சில வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், சமீபகாலமாக இந்த சேவையில் பைக்குகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கார்கள் செல்ல முடியாத குறுகிய சாலைக்குள் பைக்குகள் செல்வதாலும், காரைக் காட்டிலும் குறைவான கட்டணத்தை விதிப்பதாலும் இந்த சேவையைப் பலரும் பன்படுத்த ஆரம்பித்தனர்.
அவ்வாறு, பைக் டாக்ஸி சேவையில் சென்னையில் மட்டும் 700க்கும் மேற்பட்ட பைக்குகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சேவையில், மூன்று கிலோ மீட்டருக்கு 15 முதல் 20 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது கார் மற்றும் ஆட்டோவைக் காட்டிலும் குறைவான கட்டணம்.
தற்போது தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பல இளைஞர்கள் இந்த கால் டாக்ஸி சேவையில் தங்களை இணைத்துக் கொண்டு சொற்பமான வருமானத்தை ஈட்டி வருகின்றனர். ஆனால், இந்த பைக் டாக்ஸி சேவையால், கார் மற்றும் ஆட்டோவின் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வருவதாக கார் ஓட்டுநர்கள் புகார் கூற ஆரம்பித்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி, கால் டேக்ஸி ஓட்டுநர்கள் சார்பாக போக்குவரத்து இணை ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் கடந்த மாதம் புகார் அளித்தனர். இந்த புகாரைத்தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் இப்பிரச்னை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.
இதனடிப்படையில், கேகே நகர் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் வாடிக்கையாளர்களைப் போல் பைக் டேக்ஸியை புக் செய்து, உரிய ஆவணமின்றி பைக் டாக்ஸியில் இணைந்திருக்கும் பைக்குகளைப் பறிமுதல் செய்ய ஆரம்பித்தனர்.
பெங்களூரு மற்றும் கோவாவில் இந்த சேவை மிகவும் பிரபலமானது, இருப்பினும் தமிழ்நாட்டில் இந்த சேவை சட்டவிரோதமானது என்று போக்குவரத்துத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவிக்கிறார். அவ்வாறு, மோட்டார் வாகன சட்டம் 1989-ன்படி எந்தவொரு சட்டமும் பைக்கினை இந்த சேவையில் ஈடுபடுத்த இடம் கொடுக்கவில்லை என தெரிவித்தார். மேலும், இதுபோன்று இருசக்கர வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்துவதற்கான சட்டம் ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
பொதுவாக, இந்திய மோட்டார் வாகனச் சட்டப்படி பைக்குகளை டேக்ஸியாக இயக்குவது குற்றம் எனக் கூறப்படுகிறது. மேலும், இருசக்கர வாகனங்களைப் பொதுசேவையில் இயக்க வேண்டுமானால், சில குறிப்பிட்ட உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும். அதன்படி, பொதுசேவையில் ஈடுபடும் வாகனங்கள் மஞ்சள் நிற நம்பர் பிளேட்டைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
அதேபோல், பின் இருக்கையில் அமர்பவர்களுக்கென தனி காப்பீடு இருக்க வேண்டும். மேலும், தனி சாலை வரி, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை வாகன காப்புச் சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பல நடைமுறைகள் இதில் உள்ளன. ஆனால், இதில் எந்த விதிமுறையையும் கடைப்பிடிக்காமல் தனியார் வாகனங்களை பொதுபயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தி வருவது தெரியவந்தது.
ஆகையால், விதியைமீறி இயக்கப்பட்ட பைக் டாக்ஸிகளை சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் பறிமுதல் செய்யும் பணியில் போக்குவரத்துத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு, இதுவரை சென்னையில் மட்டும் 43க்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதுபோன்று டாக்ஸி சேவையில் இயக்கப்படும் பைக்குகள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதாக அண்ணாநகர், பூந்தமல்லி, கேகேநகர் மற்றும் போரூர் ஆகிய பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் 18க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?