Just In
- 38 min ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 1 hr ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 1 hr ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 3 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாலியல் வீடியோவில் மட்டுமில்லைங்க மற்றொன்றிலும் சென்னை முதலிடம்... என்னனுதான் தெரிஞ்சிப்போமே..!
சென்னை, பாலியல் வீடியோக்கள் பார்ப்பதில் மட்டுமில்லாமல் மற்றுமொரு விவகாரத்திலும் முதலிடத்தைப் பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
பொருளாதார வளர்ச்சியில் வளர்ந்து வரும் நாடாக கருதப்படும் இந்தியா, பொருளாதாரம் மட்டுமின்றி இதர சிலவற்றிலும் அண்மைக் காலங்களாக அதீத வளர்ச்சியைப் பெற்று வருகின்றது.
அந்தவகையில் விபத்திலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளிலும் இந்தியா புதிய வளர்ச்சியைப் பெற்று வருவதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. அதிலும், அவைஅண்மைக் காலங்களாக விஷ்வரூபம் எடுக்கவும் தொடங்கியுள்ளன.
இந்தியாவின் இந்த அவல நிலைக்கு முக்கிய காரணமாக இருப்பது பெரும்பாலான வாகன ஓட்டிகள் முறையாக போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் இருப்பதுதான். வாகன ஓட்டிகளின் இந்த அக்கறையற்ற செயலால் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் சூழலில் இருக்கின்றது.
நாட்டில் வாகனத்தை இயக்கும் பெரும்பாலானோருக்கு விதிகள்குறித்த புரிதலே இல்லை. இதன் விளைவாக, விபத்து மற்றும் உயிரிழப்புகள் கடுமையாக உயர்ந்து வருகின்றது.
இந்நிலையில், சென்னை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், வருகின்ற 2030ம் ஆண்டில் சாலை விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 5-வது இடத்தைப் பிடிக்கும் என்ற அதிர்ச்சி தகவலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்தரங்கில், "உலக தகவல் வங்கியில் இருந்த கிடைத்த தகவலின்படி, கடந்த 2016ம் ஆண்டு உலகளாவிய அளவில் நடைபெற்ற விபத்துகளில் 60 சதவீதம் இந்தியாவில் நடைபெற்றிருப்பதாக" அதிர்ச்சி தகவல் கூறப்பட்டது.
கடந்த 2004ம் ஆண்டு உலகளவில் விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 9 இடத்தைப் பிடித்திருந்தது.
இதற்கு, விபத்துகளால் 1.5 லட்சம் இறந்ததே காரணம். அதேசமயம், சிறுவர்களின் பாலியல் வீடியோக்களைப் பார்ப்பவர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் இதே சென்னைதான் தற்போது அதிகம் விபத்து நடைபெறும் நகர்திலும் முதல் இடத்தைப் பிடித்திருந்தது. குறிப்பாக 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளின் பட்டியலின் அடிப்படையில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற அவல நிலையைக் குறைக்க உச்சபட்ச அபராதங்கள் மட்டுமே போதாது என்று கருத்து தெரிவித்த நிபுணர்கள், கூடுதலாக பொது பயன்பாட்டு வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதுமட்டுமின்றி, தற்போது நிலவும் அதிகபட்ச கட்டணம் என்பதனை குறைத்து மலிவான விலையில் பொதுவாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கூறினர்.
தொடர்ந்து, முறையற்ற பார்க்கிங்கால் ஏற்படும் விபத்துகளைக் கருத்தில் கொண்ட அவர்கள், கட்டண பார்க்கிங் இடத்தையும் அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் மட்டுமே விபத்தின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். இல்லையேல், 2030ம் ஆண்டிற்குள் அதிகம் விபத்துகளால் இறப்போர்கள் நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்தை பிடித்துவிடும் என அச்சுறுத்தியுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் அர்பன் பிளானிங் இணை பேராசிரியர் மாதவ் ஜி பதாமி, பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு சரியான உள்கட்டமைப்பின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நகரத்தின் பல இடங்களில் அதிக தொகையில் ஆடம்பரமான நடைபாதை அமைமக்கப்படுகின்றது. ஆனால், பெரும்பாலான பாதசாரிகளின் அதை பயன்படுத்தாமல், மாறாக சாலையின் நடுவிலும், ஓரங்களிலும் நடை பயில்கின்றனர். கொள்கைக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளிதான் இது" என்றார்.
இதற்காக உதாரணமாக, சென்னை, திநகர் பாண்டிபஜார் சாலையில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் சாலை முக்கியச் சான்றாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இச்சாலை, சைக்கிள் ஓட்டிச் செல்வதற்கும், பாதசாரிகள் நடந்து செல்வதற்கும் ஏதுவான வடிவமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பெரும்பாலானோர் நடப்பதற்கு சாலையையே பயன்படுத்துகின்றனர். இது மிக மோசமான தோல்வியாகும்.
தொடர்ந்து மாதவ் ஜி பதாமி-யிடம் மின்சார கார்கள் இந்த சுமையை சற்றே குறைக்குமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், "இந்த கேள்விக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. பொதுவாக மின் வாகனங்களின் எஞ்ஜின், எரிபொருள் எஞ்ஜின்களைப் போன்று சப்தம் எழுப்புவதில்லை. ஆகையால், மின் வாகனங்களின் இயக்கம்குறித்து ஓட்டுநருக்கும், பாதசாரிகளுக்கும் தெரிவதில்லை. எனவே, இதனால் விபத்து அதிகரிக்கலாம்" என கருத்து தெரிவித்தார்.
மேலும், "பொது பயன்பாட்டில் உள்ள போக்குவரத்து வாகனங்களை முறையாக கட்டமைத்தாலே இதில் நல்ல விடையை நம்மால் பெற முடியும்" என்றும் பதாமி கூறினார்.
முன்னதாக இதுபோன்று விதிமீறல்களினால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுவதை உணர்ந்த மத்திய அரசு, இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் நோக்கில் புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பு: புகைப்படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை...