Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 9 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹைடெக்காக மாறிய நம்ம சென்னை... புதிய அதிநவீன இயந்திரங்களை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்
அப்டேட் செய்யப்பட்ட புதிய அதிநவீன இ-சலான் இயந்திரங்கள் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால், இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிப்பதற்காக, கடந்த 2011ம் ஆண்டு இ-சலான் சிஸ்டம் (E-challan System) அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சூழலில் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசாருக்கு அப்டேட் செய்யப்பட்ட இ-சலான் டிவைஸ் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய இ-சலான் டிவைஸில் இன்டர்நெட் உள்பட பல்வேறு அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.
தற்போது நடைமுறையில் உள்ள இ-சலான் டிவைஸ்களை போல் அல்லாமல், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் வாகன் மற்றும் சாரதி வெப்சைட்கள் மூலமாக அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களுடனும் புதிய இ-சலான் டிவைஸ்கள் இணைக்கப்பட்டுள்ளன.
தேசிய தகவல் மையம் (National Informatics Centre) உருவாக்கிய அதிநவீன மென்பொருள் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட வாகனம் வேறு மாநிலத்தில் ஏதேனும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளதா? என்பதை கண்டறியவும் புதிய இ-சலான் டிவைஸ் போலீசாருக்கு உதவும்.
அத்துடன் தவறு இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியின் டிரைவிங் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யும்படி ஆர்டிஓக்களுக்கு பரிந்துரைக்கும் ஆப்ஷனும் இந்த புதிய அதிநவீன இ-சலான் டிவைஸில் இடம்பெற்றுள்ளது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டி மற்றும் சம்பந்தப்பட்ட வாகனத்தை புகைப்படம் எடுப்பதற்காக கேமரா வசதியும் புதிய இ-சலான் இயந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசாருக்கு 352 புதிய இ-சலான் டிவைஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. கூகுள் மேப் மூலமாக இந்த டிவைஸ்கள் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதையும் உயர் அதிகாரிகளால் கண்காணிக்க முடியும்.
டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலமாக அபராதத்தை வசூலிக்க தனியாக பாயிண்ட் ஆப் சேல் (Point of Sale - PoS) இயந்திரத்தை தற்போதைய நிலையில் போக்குவரத்து போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் தற்போது சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய இ-சலான் இயந்திரத்தில் இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து போலீசார் இனி அபராதம் வசூலிக்க இரண்டு டிவைஸ்களை கையாள வேண்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் கூறுகையில், ''விதிகளை மீறியவர்கள் அபராதம் செலுத்த தவறினால், வாகனத்தின் ஃபிட்னஸ் சான்றிதழை (Fitness Certificate) பெறுவதில் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்'' என்றார். அத்துடன் வாகனத்தின் உரிமையை (Ownership) மாற்றம் செய்வதிலும் அவர்களுக்கு பிரச்னைகள் உண்டாகும் எனவும் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் கூறியுள்ளார்.
Note: Images used are for representational purpose only.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!