Just In
- 1 hr ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 2 hrs ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 4 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 9 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
Don't Miss!
- News ஏழை பெண்களுக்கு ரூ1 லட்சம், அரசு பணிகளில் பெண்களுக்கு 50%-இன்று வெளியாகும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Movies ஜெயமோகன் அப்படி பேசியிருக்கக்கூடாது.. மஞ்சும்மல் பாய்ஸுக்காக களமிறங்கிய பாக்யராஜ்
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்?.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா?
தமிழகத்தின் தலைநகர் சென்னையைக் கலக்கும் வகையில் விரைவில் டபுள் டெக்கர் மேம்பாலம் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் சென்னையும் ஒன்று. எனவேதான் இங்கு மக்கள் அடர்த்திக்கு இணையாக வாகனங்களின் எண்ணிக்கையும் மிகக் கடுமையாக உயர்ந்து காணப்படுகின்றது. இதன் விளைவு காலை, மாலை என அனைத்து நேரங்களிலும் சென்னை நகரத்தின் பல்வேறு சாலைகள் மிகவும் போக்குவரத்து நெரிசலுடன் காட்சியளிக்கின்றன.
இந்நிலையில், சென்னையின் முக்கியமான பகுதி ஒன்றில் டபுள் டெக்கர் (இரட்டை அடுக்கு) மேம்பாலம் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான திட்டத்தை மத்திய அரசு, தமிழக அரசிடம் முன்மொழிந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ஒப்புதல் அளிப்பாரானால், மேம்பாலம் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கப்படும். ரூ. 5 ஆயிரம் கோடி செலவில் அது உருவாக்கப்பட இருக்கின்றது.
வேளச்சேரியின் விஜயாநகர் சந்திப்பிலேயே இந்த இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைய இருக்கின்றது. தென் சென்னையின் மிகவும் பிஸியான சாலைகளில் இதுவும் ஒன்றாகும். எனவேதான், இந்த பகுதியில் டபுள் டெக்கர் மேம்பாலம் அமைய இருப்பதாக உறுதி வாய்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, தாம்பரம், கிண்டி மற்றும் ஐடி நிறுவனங்கள் அதிகம் நிரம்பிய பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாகும்.
இந்த இரட்டை அடுக்கு மேம்பாலம் இரு வழி பாதைகளைக் கொண்டிருக்கும். அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 640 மீட்டர் நீளத்தில் இந்த மேம்பாலம் அமை இருப்பது தெரியவந்துள்ளது. வேளச்சேரி பைபாஸ் சாலையில் தொடங்கி, தாம்பரம் வரை இந்த மேம்பாலம் செல்லும். இது ஒரு கிமீ தூரத்தைவிட நீளமாகும். மேலும், 15 மீட்டர்கள் உயரத்தையும் இது கொண்டிருக்கும். குறிப்பாக, தரமணி மற்றும் வேளச்சேரி பைபாஸ் சாலையை இணைக்கும் வகையிலும் இது செயல்பட இருக்கின்றது.
இந்த இரட்டை அடுக்கு மேம்பாலத்தில் பாதசாரிகள் பாதுகாப்பாக நடமாடும் வகையில் நடைமேடை மற்றும் மழை நீர் வடிகால் ஆகையவையும் அமைக்கப்பட இருக்கின்றன. முன்னதாக ஒற்றை அடுக்கு மேம்பாலமாக மட்டுமே இதனை உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த முடிவை தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் மாற்றிக் கொண்டிருக்கின்றன. மேலும், இதனை இரட்டை அடுக்குகள் கொண்ட மேம்பாலமாக உருவாக்கவே திட்டமிட்டு வருகின்றன.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரின் அண்மை சந்திப்பிலேயே இந்த இரட்டை அடுக்கு மேம்பாலம் உறுதிச் செய்யப்பட்டது. ஒற்றை அடுக்கு மேம்பாலத்தில் நான்கு லேன்களை உருவாக்குவதே முன்னர் வெளியிடப்பட்ட திட்டமாகும். இதையே தற்போது டபுள் டெக்கராக அரசுகள் மாற்றியிருக்கின்றன.
இதனை சர்வதேச தரத்தில் உருவாக்க அரசுகள் திட்டமிட்டுள்ளன. மேலும், இதனை முழுமையாக கட்டிமுடிக்க 20 முதல் 25 ஆண்டுகள் ஆகலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும், இந்த இரட்டை அடுக்கு மேம்பாலம் தென் சென்னையின் போக்குவரத்து பிரச்னையைத் தீர்க்கும் எனவும் அவர் கூறினார்.
முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த ஒற்றை அடுக்கு மேம்பாலத்திற்கு ரூ. 3,100 கோடி மட்டுமே செலவாகும் என கூறப்பட்டது. ஆனால், புதிய இரட்டை அடுக்கு மேம்பாலத்திற்கு ரூ. 5 ஆயிரம் கோடி வரை செலவாகலாம் என யூகிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னை வாசிகளின் பயன்பாட்டிற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இத்திட்டத்திற்கான வரைவே தமிழக அரசின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது.
அதேசமயம், தமிழக அரசு சார்பில் இரும்பு மற்றும் சிமெண்ட் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 500 கோடியை மாநில அரசால் மிச்சப்படுத்த முடியும் என அது காரணம் கூறியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளால் வெகுவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம் அமையும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவில் இதுபோன்ற இரட்டை அடுக்கு மேம்பாலத்தை மும்பையில் நம்மால் காண முடியும். இதனை 2014ம் ஆண்டிலேயே மும்பைப் பெற்று விட்டது. இதுவே, நாட்டின் முதல் டபுள் டெக்கர் மேம்பாலம் ஆகும். மும்பையின் சேன்டாக்ரூஸ் மற்றும் செம்பூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 1.8 கிமீ நீளத்தில் இது கட்டப்பட்டிருக்கின்றது.
ரூ. 450 கோடி செலவில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, இரண்டாவதாகவும், தென் மாநிலங்களிலேயே முதலாவதாகவும் பெங்களூருவில் இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. ரஜிகுடா மற்றும் சில்க் போர்டை இணைக்கும் வகையில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. அடுத்த ஆண்டு அக்டோபரில் இந்த மேம்பாலத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைய இருக்கின்றது.
இந்த மேம்பாலங்களைக் காட்டிலும் அதிக பெரும் பொருட் செலவில் சென்னயில் இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட இருக்கின்றது. தற்போது நிலவும் உச்சபட்ச போக்குவரத்து நெரிசல் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் இந்த மேம்பாலம் கட்டப்பட இருக்கின்றது. இதற்கான பணிகள் எப்போது தொடங்கப்படும் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பு புகைப்படம் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.
-
இவ்வளவு சின்ன வயதில் தொழிலில் எவ்வளவு பெரிய வளர்ச்சி!! சொமாடோ சிஇஓ-ஐ பற்றி தெரியாத சில உண்மைகள்!
-
மாலையில் சென்னையில் டீ குடித்துவிட்டு வந்தே பாரத் ரயிலில் ஏறினால் இரவு டின்னர் சாப்பிட பெங்களூரு போயிடலாம்!
-
நிறைய பேரு இப்பவே காண்டாக ஆரம்பிச்சுட்டாங்க.. ஹோண்டா இப்படி ஒரு வேலையை செய்ய போகுதா!! எப்படிதான் மனசு வருதோ!