Just In
- 3 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 4 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி செலவில் சென்னையில் புதிய விமான நிலையம்!! எந்த பகுதியில் அமைய உள்ளது தெரியுமா?
சென்னையில் 2வது சர்வதேச விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
சென்னை மீனப்பாக்கம் சர்வதேச விமான நிலையம் இந்தியா முழுவதும் பிரபலமான விமான நிலையங்களுள் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், சென்னையின் தற்போதைய சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏறக்குறைய 57கிமீ தொலைவில் 2வது சர்வதேச விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சர்வதேச விமான நிலையம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டு ஆக விளங்கும் என தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் எங்களது உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கான பயணத்தில் மற்றுமொரு மைல்கல் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் வளர்ச்சி பெற்ற & கட்டமைப்பு வசதிமிகுந்த மாநிலங்களில் முன்னணியில் திகழும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு நமது திராவிட மாடல் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.
நம் மாநிலத்திற்கு வருகை தரும் முதலீட்டாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக விமான பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள சென்னை விமான நிலையம் ஆனது ஆண்டுக்கு சராசரியாக 2.2 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது. மேலும், தற்போது நடைபெற்றுவரும் விரிவாக்க பணிகளுக்கு பிறகு, அடுத்த 7 ஆண்டுகளில் சென்னை விமான நிலையம் அதிகப்பட்ச அளவான ஆண்டிற்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறனை எட்டக்கூடும்.
சென்னை விமான நிலையத்தில் மென்மேலும் அதிகரித்துவரும் விமான பயணிகளின் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து வளர்ச்சியை கருத்தில் கொண்டும், மாநிலத்தின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையை தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையிலும் சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பணியை அரசு நிறுவனமான டிட்கோ மூலம் தமிழ்நாடு அரசு மேற்கொண்டது.
அதன்படி, புதிய விமான நிலையம் அமைக்க நான்கு பொருத்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வு செய்து சாத்தியமான இடங்களாக பரிந்துரைத்த இரண்டு இடங்களில் ஒன்றான பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சென்னை விமான நிலையம் மற்றும் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையம் ஆகிய இரண்டும் சேர்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையம் ஆனது 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடன் அமைக்கப்பட உள்ளது. இரண்டு ஓடுத்தளங்கள், விமான நிலைய முனையங்கள், இணைப்பு பாதைகள், விமானங்கள் நிறுத்துமிடம், சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பின் புதிய விமான நிலையத்திற்கான திட்ட மதிப்பு இறுதி செய்யப்படும். தற்போதைய உத்தேச திட்ட மதிப்பு 20,000 கோடி ரூபாய் ஆகும். மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் 2008இல் வெளியிட்ட புதிய விமான நிலையம் அமைப்பதற்கான வழிக்காட்டுதலின்படி தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கான ஒப்புதல் பெற மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள குழுவிற்கு விரைவில் விண்ணப்பம் சமர்பிக்கப்படும்.
இட அனுமதி ஒப்புதல் பெற்றபின், திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இதனை தொடர்ந்து விமான நிலைய திட்டத்திற்கான கொள்கை ஒப்புதல் மற்றும் விமான நிலையம் செயல்படுவதற்கான அனுமதி உள்ளிட்டவை மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பெறப்படும்.
பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலைய திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கான படிக்கட்டு. தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கான பயணத்தில் இது மற்றொரு மைல்கல்லாகும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NOTE: Images are used for representational purpose only.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!