Just In
- 7 min ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 29 min ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 1 hr ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 1 hr ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
Don't Miss!
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Movies மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வெயில், மழையில கிடந்து வீணா போகுது... உடனே ஏலத்துக்கு விட்டு காச கருவூலத்துல போடுங்க... வெ.இறையன்பு அதிரடி!!
பழைய பயன்பாடில்லாமல் இருக்கும் வாகனங்களை உடனடியாக அப்புறத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் வெ. இறையன்பு சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிட்டுள்ளார்.
பயன்பாடு இல்லாமல் அரசு அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையை அரசு கருவூலத்தில் சேர்க்குமாறு தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மாட்ட ஆட்சியர்களுக்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து ஓர் அறிவிப்பையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு அவர் அனுப்பி வைத்திருக்கின்றார். அதில், "அரசு அலுவலகங்கள் அல்லது அரசுக்கு சொந்தமான இடங்களில் பழைய வாகனங்கள் பயன்பாடில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.
அவை (வாகனங்கள்) ஏன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன? என விசாரித்ததில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. குறிப்பாக, அந்த அலுவலகத்தின் அரசு பணியாளர்களுக்கே அதுகுறித்த தகவல் தெரிவதில்லை. ஆகையால், இதுபோன்று இடங்களை அடைத்துக் கொண்டு, மேலும் பாழாகிக் கொண்டிருக்கும் வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
அதன்மூலம் கிடைக்கும் வருவாயை அரசின் கருவூலத்தில் சேர்க்க வேண்டும். அமலாக்கத் துறைகளின் அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை, அதன் மீதிருக்கும் வழக்குகளை உடனடியாக முடித்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகப்படியான வெயில், மழை ஆகியவற்றால் வாகனங்கள் மேலும் சேதமடைந்து வருகின்றன. இதனால், அவற்றின் மதிப்பு மிகக் கடுமையாக குறைந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில், அவை ஏலத்திற்கு போகுமானால், அவற்றின் மதிப்பு பல மடங்கு குறையும் வாய்ப்பு இருக்கின்றது.
இதனால், அரசின் வருவாயும் பாதிக்கின்றது. ஆகவே, அரசு அலுவலகங்களில் பழைய, பயன்பாடற்று நிற்கும் வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களுக்கு சென்றிருப்பீர்களானால் உங்களால் குறைந்தது ஒரு வாகனத்தையாவது அந்த அலுவலகத்தில் வீணாக துருப்பிடித்த நிலையில் நிற்பதைக் காண முடியும். பழைய அம்பாஸ்டர் தொடங்கி விலையுயர்ந்த வாகனங்கள் வரை அனைத்திற்கும் இதேநிலைதான்.
அவை தூசிக்கும், துருவிற்கும் இரையாகிக் கொண்டிருக்கும். இந்த நிலையை உணர்ந்தே பல ஆண்டுகளாக வீணாய் போய்க் கொண்டிருக்கும் அந்த வாகனங்களை அகற்றி, அவற்றின்மூலம் கிடைக்கும் வருமானத்தை அரசு கருவூலத்தில் சேர்க்குமாறு தலைமை செயலாளர் இறையன்பு, அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம், அரசுக்கு கணிசமான வருவாய் வருவதோடு, அரசு அலுவலகங்களில் வீணாக அடைத்துக் கொண்டிருக்கும் இடங்களும் விடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களை தங்கு தடையின்றி நிறுத்த முடியும்.
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!