Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ச்சோ ஸ்வீட்... காருடன் சண்டை போட்ட சுட்டி பையன்... ஏன் தெரியுமா? மனதை நெகிழ வைக்கும் வீடியோ...
மனதை நெகிழ வைக்கும் வகையில், காருடன் சண்டை போட்ட சுட்டி பையனின் வீடியோ உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.
சாலை விபத்துக்கள் மிகவும் கொடுமையானவை. கண்ணிமைக்கும் நேரத்தில், ஒருவரின் உயிரை சாலை விபத்து பறித்து விடும். உலகம் முழுவதும் தினந்தோறும் பல லட்சக்கணக்கான சாலை விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. இதில், தாங்கள் மிகவும் நேசித்த நபரின் உயிரை பறிகொடுத்து விட்டு பல லட்சக்கணக்கானோர் வாழ்நாள் முழுவதும் வேதனைப்பட்டு வருகின்றனர்.
வாகனங்களை இயக்குபவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதுதான் சாலை விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. எனவே வாகனங்களை இயக்கும்போது போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவதுடன், மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் கவனமாகவும் இருக்க வேண்டியது அனைவரின் கடமை.
ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இதனை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வது கிடையாது. இந்த வகையில், போக்குவரத்து விதியை மீறிய வாகன ஓட்டி ஒருவரால் நடந்த ஒரு சாலை விபத்தின் வீடியோ தற்போது உலகம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரல் ஆவதற்கு ஒரு சிறுவனின் கோபம்தான் காரணம்.
கோபம் மட்டுமல்ல. அந்த சிறுவனின் தாய் பாசமும் இதற்கு முக்கிய காரணம். இங்கே நாங்கள் குறிப்பிடும் சாலை விபத்து சீனாவில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று தாய் ஒருவர் தன் மகனுடன் சாலையை கடந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் இருவர் மீதும் எதிர்பாராத விதமாக மோதியது.
இதனால் நிலைகுலைந்து போன தாயும், மகனும் கீழே விழுந்தனர். தன்னுடைய தாய் மீது கார் மோதியதால் உண்டான கோபத்தில் அந்த சிறுவன் செய்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முதலில் தன் தாய்க்கு என்ன ஆனது என பார்த்த அந்த சிறுவன், பின்னர் கோபத்தில் அழுது கொண்டே ஓடி சென்று விபத்திற்கு காரணமான காரை எட்டி உதைத்தான்.
அதன்பின் அந்த காரை ஓட்டி வந்த டிரைவரிடம் சண்டையிட்டான். இதனால் காரை விட்டு கீழே இறங்கி வந்த அந்த டிரைவர், உடனடியாக அந்த சிறுவனின் தாய்க்கு என்ன ஆனது? என பார்த்தார். முன்னதாக அந்த சிறுவனும், டிரைவருடன் சண்டையிட்டு விட்டு, பின் தன் தாயிடம் திரும்பி ஓடி வந்து விட்டான். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.
பின்னர் அந்த டிரைவர் தன் காரிலேயே ஏற்றி அந்த சிறுவனின் தாயை மருத்துவமனைக்கு கூட்டி சென்றதாக கூறப்படுகிறது. தன் தாய் மீதான பாசத்தால், காருடனும், கார் டிரைவருடனும் சண்டைக்கு சென்ற அந்த சுட்டி பையனின் வீடியோ அனைவரது மனங்களையும் கவர்ந்துள்ளது. உலகம் முழுக்க வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
சம்பந்தப்பட்ட காரின் டிரைவர் சிக்னலை மதிக்காமல் வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என தெரிகிறது. இந்த விபத்திற்கு காரின் டிரைவர்தான் முழு பொறுப்பு என போலீசாரும் கூறியுள்ளனர். நல்ல வேளையாக இந்த விபத்தால் பெரும் அளவிலான அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. கார் இன்னும் சற்று வேகமாக வந்திருந்தால் கூட ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க கூடும்.
சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மனம் எவ்வளவு துயரப்படும்? என்பதற்கு இந்த சம்பவம் சிறு எடுத்துக்காட்டு மட்டுமே. இதனை புரிந்து கொண்டு வாகனங்களை ஓட்டும்போது, போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் இனிமேல் முறையாக பின்பற்றுங்கள்.